*மார்கழித் திருவாதிரை எல்லோருக்கும் ஆனந்தம் அருளும் ஆனந்தக் கூத்தன் மற்றும் மூவுருவத் தியாக ராஜர் திருநாள்* .
சிதம்பரத்தில் பூஜையும் வேள்வியும் செய்து நடராஜரது *திருச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து பொன்னம்பலம் ஆக்கி வழிபட்டுத் தொழுதுத் துதித்துப் போற்றிய அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் அனைவருக்கும்* சிவலோக ஆனந்தக் கூத்தன் *திருநடனக் காட்சி அருளிய திருநாளே ஆருத்ரா தரிசனம்* எனப்படும் மார்கழித் திருவாதிரைத் திருநாள்.
*தெய்வங்கள் அனைத்தும் திருவாரூரில் தாய் தந்தை சேய் ஆகிய* *மூவுருவத் தியாக ராஜரைப் பூஜித்து* *தரிசனம் பெற்ற திருநாள்*
*திருவாதிரை*
ஈசனுக்கு *ஆதிரையான்* என்று அருள் நாமம் .
திருவாதிரை நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று பெயர்.
ஐந்து தொழில் ஓசையொலி இயக்க நாதர் நடராஜர் இல்லாத கோயில் இல்லை.
திருச்சேறை சார பரமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிறு கோயில்களிலும் *கருவறைச் சுவற்றில் கல் மேனி நாடராஜர் அருள் புரிவார்*.
தனிச் சந்நிதி உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில் போன்ற பழைய கோயில்களில் *நடராஜர் சந்நிதி தனி நுழை வாசலுடன் இருக்கும்*.
திருவுத்தர கோச மங்கை மங்களேஸ்வரர் கோயிலில் *மரகத நடராஜர் சந்நிதி தனிக் கோயில் போல் சிறப்புறுகிறது*.
கார்த்திகை தீபம் போல் பழங் காலத்திலிருந்து *இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் *தூய தமிழர்த் திருவிழா ஆருத்ரா தரிசனம்* .
*திருவாதிரைத் திருநாள் திருவெம்பாவைத் திருவிழாவோடு சேர்ந்து அமையும் இரட்டைத் திருவிழா*.
நடராஜருக்குப் படைக்கப்படும் எளிய உணவு களி.
திருவாதிரைக் களி ஒரு வாயாகிலும் உண்ண வேண்டும் என்பது பழமொழி.
சேந்தனார் படைத்து வழிபட்டு நடராசரது அருள் பெற்றக் களி உண்டு களித்திருக்கும் திருநாளான *திருவாதிரைத் திருவிழாவிற்கு *சிதம்பரம் நடராஜர் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருவுத்தர கோச மங்கை மங்களேஸ்வரர் கோயில், திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில் ஆகிய நான்கு தலங்கள்* மிக்க சிறப்புடன் புகழ் பெற்றவை.
*தெய்வங்கள் வானவர்கள் எல்லோரும் பூஜை செய்து தியாக ராஜரைக் கண்டு களித்த*
*திருவாரூர்* *திருவாதிரைத் திருவிழாவை* ஒரு பதிகம் முழுவதும் திருநாவுக்கரசர் விளக்குகிறார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment