Showing posts with label #panguni Uttaran #Murugan festival #Murugan Temple #Palani #Thiruparankundram #Thiruchendur #Hindu temple #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #panguni Uttaran #Murugan festival #Murugan Temple #Palani #Thiruparankundram #Thiruchendur #Hindu temple #Tamilnadu #India. Show all posts

Friday, April 11, 2025

பங்குனி உத்திரமும் பால் கா வடியும்...



பங்குனி உத்திரம் நாளில்  இந்த 6 விஷயங்களை செய்தால் முருகனின் அருள் கிடைக்கும்
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக கருதப்படுவது பங்குனி உத்திரமாகும். இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தும், பால்குடம் ஏந்தி வந்தும் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முருகப் பெருமானின் அருளை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பங்குனி உத்திரம்  தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய நாளாக முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகள் நடைபெறுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
சிவன்-பார்வதி, மீனாட்சி-சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் -சீதா, முருகன் - தெய்வானை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றது பங்குனி உத்திர நாளில் தான் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல் ஆண்டாள், ரங்கநாதருடன் ஐக்கியமான தினமும் பங்குனி உத்திர திருநாளில் தான் என சொல்லப்படுகிறது. அதனால் இந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். திருமணம் ஆனவர்களும் இந்த நாளில் விரதம் இருந்தும். 

இருந்தாலும் பங்குனி உத்திரம் என்பது நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படும் விரத நாள் என்பதால் உத்திரம் நட்சத்திரம் வரும் பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும். 

பங்குனி உத்திர நாளில் முக்கியமான 6 விஷயங்களை செய்வதால் முருகப் பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரத்தன்று செய்ய வேண்டியவை :

1. ஆலய தரிசனம் :

பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்று சிவன்-பார்வதி அல்லது முருகன்-தெய்வாணையை வழிபட வேண்டும். அங்கு நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வதால் செல்வ வளம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, தெய்வீக அருள் ஆகியவை கிடைக்கும். கோவிலில் சென்று இறை நாமங்களை ஜபிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

2. அபிஷேகம் :

பங்குனி உத்திரம் அன்று கோவில்களில் நடக்கும் அபிஷேகத்திற்கு வேண்டிய பால், தேன், தயிர் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் தெய்வங்களின் மனம் குளிர்ந்து நாம் வேண்டும் வரங்களையும் அளிப்பார்கள் .. தெய்வ அபிஷேகங்கள் செய்வதால் கர்மாக்கள், பாவங்களில் இருந்து விடுபட்டு, மறுபிறவி இல்லாத நிலை ஏற்படும்.

3. காவடி சுமத்தல் :

பங்குனி உத்திரம் அன்று காவடி எடுப்பது மிகவும் விசேஷமானதாகும். முருகனுக்கு காவடி எடுப்பதால் முருகப் பெருமானின் பரிபூரண அருளை பெற முடியும். தெய்வ சிந்தனையுடன், பக்தி பாடல்களை பாடிக் கொண்டு, தோளில் காவடி எடுத்து வருவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மன சுமைகள் அனைத்தையும் முருகப் பெருமான் போக்கிடுவார் .

4. விரதம் கடைபிடித்தல் :

பங்குனி உத்திரம் அன்று உணவை தவிர்த்து விரதம் இருந்து, முருகனை நோக்கி மந்திர ஜபம் செய்வது, தியானம் செய்வது ஆகியவற்றை செய்வது சிறப்பு. இதனால் உடலும் மனமும் தூய்மையாகி, நம்மால் தெய்வத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தெய்வீக அருளால் கடந்த காலங்களில் செய்த தவறுகள் மன்னிக்கப்படும்.

5. தானம் செய்தல் :

பங்குனி உத்திரம் அன்று கோவில்களில் நடக்கும் பூஜைகளுக்கு பூ, பழங்கள், தேங்காய், விளக்கு ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம். இது இறைவனை சரணடைவதை குறிப்பதாகும். அதே போல் ஏழைகளுக்கு உணவு, உடை, தேவையான பண உதவி ஆகியவற்றை செய்யலாம். இதனால் நம்முடைய கெட்ட கர்மாக்கள் குறையும்.

6. மந்திர ஜபம் :

இந்த நாளில் மந்திர ஜபங்கள் செய்வது, புனித நூல்களை வாசிப்பது, தெய்வீக கதைகளை கேட்பதும் புண்ணியமான பலன்களை தரும். குறிப்பாக திருப்பாவை, திருவெம்பாவை, கந்த புராணம் உள்ளிட்ட தெய்வீக நூல்களை படிக்கலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...