Showing posts with label #vinayager #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #vinayager #hindu #india #tamilnadu. Show all posts

Monday, September 18, 2023

உலகின் #மிகஉயரமான #விநாயகர் #சிலை, தாய்லாந்து

#உலகின் #மிகஉயரமான #விநாயகர் #சிலை, 
தாய்லாந்து
இந்த மாபெரும் நிற்கும் வெண்கல விநாயகர் சிலை Khlong Khuean, Chachoengsao Province, Thailand.

39 மீட்டர் உயரத்தில், உலகிலேயே மிக உயரமான விநாயகர் சிலை. தாய்லாந்து இளவரசி சோம்சவலி பிரவரராஜதினுத்தாமத் அவர்களால் நிறுவப்பட்டது.
இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது போல் , தாய்லாந்து பௌத்தர்கள் விநாயகர் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.
விநாயகர் தாய்லாந்தில் "பிரா பிகானெட்" (ஸ்ரீ விக்னேஷா) என்று அழைக்கப்படுகிறார். அவர் தாய்லாந்து பௌத்தர்களிடையே மிகவும் பிரபலமானவர்.

இந்துக்களைப் போலவே, அவர் வெற்றியின் தெய்வமாகவும், தாய்லாந்து பௌத்தர்களால் அனைத்து தடைகளையும் நீக்குபவர் என்றும் வணங்கப்படுகிறார். புதிய தொழில் தொடங்கும் சமயத்திலோ அல்லது திருமண நிகழ்ச்சியிலோ இவரை வழிபடுகிறார்கள். கலை மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய, விநாயகர் தாய்லாந்தின் நுண்கலை துறையின் லோகோவின் ஒரு பகுதியாகும்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

Monday, September 11, 2023

🕉️விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருக்கும் முறையும், சொல்லவேண்டிய ஸ்லோகமும்🕉️

🕉️விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருக்கும் முறையும், சொல்லவேண்டிய ஸ்லோகமும்🕉️

 ✡️விநாயகர்சதுர்த்தி✡️
ஆவணி மாதம் வரும் 'வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும். 

எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் 'ஆவணி' மாதமாகும். அந்த திருநாள் புரட்டாசி மாதம் 1-ம் தேதி திங்கள் கிழமை (18.09.2023) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.

🕉️விநாயகர் விரதம்🕉️

விநாயக சதுர்த்தி அன்று விடியற்காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். 

முடிந்தால் இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டிவைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து, அதன்மேல் ஒரு கோலம் போட்டு, தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. 

இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் கனிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். 

பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். கணிமண் மட்டும்தான் என்றில்லாமல் உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். 

பத்ரபுஷ்பம் எனப்படும் பலவகையான பூக்களையும், எருக்கம் பூ மாலை, அருகம்புல் என அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். முடிந்த அளவுக்கு பழங்களையும் வாங்கி வைக்கலாம். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தையும் நிவேதனமாக படைக்கலாம். 

இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷமாகும். 

அடுத்த வளர்பிறை சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் படைக்க வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள், 7 நட்களிலேயே கரைத்து விடுகிறார்கள்.

• பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

• ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

• விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

• தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

• கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

• சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அன்றைய தினம் விநாயகர் அகவலை சொன்னால் மேலும் சிறப்பாகும்.

✡️🕉️விநாயகர் அகவல்🕉️✡️

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

 

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

 

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

 

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

 

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

 

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

 

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)🙏🙏

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...