Showing posts with label #sivan # hindu #india. Show all posts
Showing posts with label #sivan # hindu #india. Show all posts

Saturday, April 22, 2023

*" 274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள் :"**172- வது ஸ்தலம்

*" 274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள் :"*
*172- வது ஸ்தலம்...*

*தென்கரை ஸ்தலம்....*

*கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில்...*

*மூலவர்:கற்பக நாதர்*

*அம்மன்/தாயார்:பாலசுந்தரி, சவுந்தர நாயகி*

*தல விருட்சம்:பலா*

*தீர்த்தம்:விநாயகர் தீர்த்தம், கடிகுளம்*

*புராண பெயர்:திருக்கடிக்குளம்*

*ஊர்:கற்பகநாதர்குளம்*

*மாவட்டம்:திருவாரூர்*

*மாநிலம்:தமிழ்நாடு*

*பாடியவர்கள்:*

*சம்பந்தர்*

*தேவாரப்பதிகம்*

*தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 109வது தலம்.*

*திருவிழா:*

*மகா சிவராத்திரி*

*தல சிறப்பு:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 173 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்-614703. தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம்.*

*போன்:*

*+91- 4369 – 240 187 ,240632 ,99428 12437*

*பொது தகவல்:*

*இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்*

*பிரார்த்தனை*

*சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியதும் வெண்ணெய் தானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.*

*தலபெருமை:*

*இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

 *இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.*
*இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*

*இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது.*
*இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது.*

*ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.*
*தல வரலாறு:*
*கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான்.*

*தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான்.*

 *இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

*தொடரும்*

*🌷வாழ்க வளமுடன்🌷*

*🙏ஓம் நமசிவாய🙏*

Wednesday, November 2, 2022

எங்கும் நீக்கமற காட்சி கொடுக்கும்சொக்கநாதபெருமானே உம் திருவடி வணங்குகிறேன்

**திருச்சிற்றம்பலம்**
🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏
எங்கும் நீக்கமற காட்சி கொடுக்கும்

சொக்கநாதபெருமானே உம் திருவடி வணங்குகிறேன்

🙏மதுரையம்பதியில் சொக்கநாதபெருமான்

🙏திருவேடகத்தில் திருஏடகநாதர் 

🙏திருவாதவூரில் 
திருமறைநாதர்

🙏திருச்சுழியில்
பூமிநாதர்

🙏திருப்பூவனத்தில் 
பூவனநாதர்

🙏திருக்கானபேர் என்ற
காளையார்கோவிலில்
சோமேசுவரர்
சுந்தரேசுவரர்
காளீசுவரர்

🙏திருவாடானையில் 
ஆதிரெத்தினேசுவரர்

🙏திருஉத்திரகோசமங்கையில் 
மங்களநாதர்

🙏நயினார் கோயில் 
நாகநாதர் 

🙏திருப்பெருந்துறை
ஆத்மநாதர்

🙏காஞ்சிபுரம்
ஏகாம்பரேசுவரர்

🌹 🌿 தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் 

🌹 🌿 திருவாரூரில் தியாகராஜர் 

🌹 🌿 திருநெல்வேலியில் நெல்லையப்பர் 

🌹 🌿 திருவையாறில்
ஐயாறப்பர் 

🌹 🌿 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 

🌹 🌿 திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் 

🌹 🌿 திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

🌹 🌿 திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் 

🌹 🌿 திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் 

🌹 🌿 திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர் 

🌹 🌿 திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர் 

🌹 🌿 திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர் 

🌹 🌿 திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்

🌹 🌿 திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் 

🌹 🌿 திருச்சியில் தாயுமானவர் 

🌹 🌿 திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர் 

🌹 🌿 திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் 

🌹 🌿 திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர் 

🌹 🌿 திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்

🌹 🌿 திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்

🌹 🌿 திருமழபாடியில் வைத்தியநாதர் 

🌹 🌿 திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்

🌹 🌿 திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்

🌹 🌿 திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர் 

🌹 🌿 திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர் 

🌹 🌿 இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

🌹 🌿 'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.

🌹 🌿 இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன், மேலகோட்டையுரில்  கோமதிஸ்வர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.

🌹 🌿 தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63. 

🌹 🌿 ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.

🌹 🌿 தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

🌹 🌿 எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

🌹 🌿 இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.

வாருங்கள் நம் முன்னோர்கள்
எதிர்கால சந்ததிக்காக
 பாதுகாத்து வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயங்களை நாமும் பாதுகாத்து வழிபடுவோம்

ஆலவாயர் அருட்பணி மன்றம்.மதுரை

பழமையான சிவனார் ஆலயங்களில் மூலிகை பொடிகளால் அபிடேக பணியில் என்றென்றும்

🌻சைவம்போற்றி தமிழ்வளர்ப்போம்🌻

 *🌻தமிழ் எங்கள் மொழி சைவம் எங்கள் வழி 🌻*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
**சொக்கநாதா
சொக்கநாதா 
🙏🙏🙏🙏🙏🙏🙏

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...