Saturday, April 22, 2023

*" 274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள் :"**172- வது ஸ்தலம்

*" 274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள் :"*
*172- வது ஸ்தலம்...*

*தென்கரை ஸ்தலம்....*

*கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில்...*

*மூலவர்:கற்பக நாதர்*

*அம்மன்/தாயார்:பாலசுந்தரி, சவுந்தர நாயகி*

*தல விருட்சம்:பலா*

*தீர்த்தம்:விநாயகர் தீர்த்தம், கடிகுளம்*

*புராண பெயர்:திருக்கடிக்குளம்*

*ஊர்:கற்பகநாதர்குளம்*

*மாவட்டம்:திருவாரூர்*

*மாநிலம்:தமிழ்நாடு*

*பாடியவர்கள்:*

*சம்பந்தர்*

*தேவாரப்பதிகம்*

*தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 109வது தலம்.*

*திருவிழா:*

*மகா சிவராத்திரி*

*தல சிறப்பு:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 173 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்-614703. தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம்.*

*போன்:*

*+91- 4369 – 240 187 ,240632 ,99428 12437*

*பொது தகவல்:*

*இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்*

*பிரார்த்தனை*

*சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியதும் வெண்ணெய் தானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.*

*தலபெருமை:*

*இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

 *இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.*
*இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*

*இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது.*
*இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது.*

*ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.*
*தல வரலாறு:*
*கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான்.*

*தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான்.*

 *இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்*

*தொடரும்*

*🌷வாழ்க வளமுடன்🌷*

*🙏ஓம் நமசிவாய🙏*

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...