Thursday, May 21, 2026

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர்!
பக்திக்கும் இறைவனுக்கும் உள்ள அழகான பிணைப்பை விளக்கும் ஒரு தலம் உண்டென்றால், அது திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் இது மிக முக்கியமான தளம்.

வரலாறும் சிறப்பும்: 

சிவபெருமானின் 'வேடுபறி' திருவிளையாடல்
இந்தக் கோயிலின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், சேரமான் பெருமாளிடம் பொன்னும் பொருளும் பெற்றுக்கொண்டு இவ்வழியே சென்றார். சுந்தரரின் பாடலில் மகிழ்ந்த சிவபெருமான், அவரோடு ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.

தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி, சுந்தரரிடம் இருந்த செல்வங்களை அபகரிக்கச் செய்தார். மனம் நொந்த சுந்தரர், இக்கோயில் இறைவனிடம், "எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே!" (பொருளைப் பறி கொடுக்கவிட்டு இங்கு ஏன் இருக்கிறீர்கள்?) என்று கோபமாகவும் உருக்கமாகவும் பாடினார். அவர் பக்தியில் மகிழ்ந்த இறைவன், பறிபோன பொருட்கள் அனைத்தையும் மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார்.

பலன்: 

இழந்த சொத்துக்கள், செல்வம் மற்றும் பதவிகளை மீண்டும் பெற விரும்புவோர் வழிபட வேண்டிய மிகச்சிறந்த தலம் இது.
கோயிலின் முக்கிய சிறப்பம்சங்கள்:
முருகன் வழிபட்ட தலம்: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க, முருகப்பெருமான் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனாலேயே இத்தலம் 'திருமுருகன்பூண்டி' என அழைக்கப்படுகிறது.

மேற்கு நோக்கிய சன்னதி: பொதுவாகக் கோயில்கள் கிழக்கு நோக்கி இருக்கும், ஆனால் இங்கு சுவாமியும் அம்பாளும் மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

மன நிம்மதி தரும் தீர்த்தம்: 

இங்குள்ள 'பிரம்ம தீர்த்தம்' மிகவும் விசேஷமானது. மனக்குழப்பம், சித்த பிரம்மை மற்றும் தீராத மனக்கவலைகளால் அவதிப்படுபவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால் உடனடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிற்பக்கலை அதிசயம்: சோழர் மற்றும் பாண்டியர் காலத்துக் கட்டிடக்கலைக்குச் சான்றாக இக்கோயில் திகழ்கிறது. குறிப்பாக 16 கால் மண்டபமும், நந்தி தேவர் சிலையும் காண்போரை வியக்க வைக்கும்.

வழிபட வேண்டிய நேரம்:
காலை 5:30 மணி முதல் 12:45 மணி வரை.

மாலை 3:30 மணி முதல் இரவு 8:15 மணி வரை.

அமைவிடம்:


திருப்பூர் - அவினாசி சாலையில், திருப்பூரில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

உங்கள் வாழ்வில் இழந்த சந்தோஷமும், செல்வமும் மீண்டும் கிடைக்க ஒருமுறை இந்தத் திருத்தலத்திற்குச் சென்று வாருங்கள்!

 ஓம் நமச்சிவாய!
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தெய்வங்களின் வாகனங்கள்பற்றிய தகவல்கள்...

தெய்வங்களின் வாகனங்கள்
பற்றிய தகவல்கள்...
இந்துப் புராணங்களில் கடவுள்கள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரமும், அவர்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு வாகனமும் கூட ஒரு ஆழமான அர்த்தத்தையும் வாழ்க்கைப் பாடத்தையும் நமக்கு உணர்த்துகிறது. பக்தர்களை காக்கவும், தீய சக்திகளை அழிக்கவும் மட்டுமல்ல, மனிதனின் உள்ளார்ந்த குணங்களை மாற்றவும் இவை உதவுகின்றன.

அப்படியான 9 முக்கிய தெய்வங்களின் வாகனங்களின் வரலாறும், அதன் பின்னாலுள்ள ஆன்மீக ரகசியங்களையும் விரிவாகப் பார்ப்போம்.

1. துர்கை அம்மன் – சிங்கம் 

அசுரர்களை அழிக்க உருவெடுத்த அம்பாள், ஒருமுறை கடும் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு சிங்கம் அவரை சுற்றி பாதுகாப்பாக இருந்தது. அதன் உண்மை விசுவாசமும் வீரமும் அம்பாளை கவர்ந்தது.
அதனால் அந்த சிங்கத்தை தன் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
அர்த்தம்: பயத்தை வெல்லும் தைரியம் – நம் உள்ளத்தில் இருக்கும் அச்சங்களை அடக்க வேண்டும்.

2. சரஸ்வதி – அன்னப்பறவை 

அன்னப்பறவை பாலையும் தண்ணீரையும் பிரித்து உணரும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
அர்த்தம்: நல்லது–கெட்டது என பிரித்து அறியும் அறிவு.
அதனால் அறிவின் தெய்வமான சரஸ்வதி, அன்னத்தைத் தனது வாகனமாக எடுத்துக் கொண்டார்.

3. மகாலக்ஷ்மி – ஆந்தை 

இருள் சூழ்ந்த நேரத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தையின் திறன், செல்வத்தின் பாதுகாப்பைக் குறிக்கிறது.
 அர்த்தம்: செல்வம் இருந்தாலும் விழிப்புணர்வு அவசியம்.
அதனால் லக்ஷ்மி தேவிக்கு ஆந்தை வாகனமாக அமைந்தது.

4. சிவபெருமான் – நந்தி 

நந்தி பகவான் கடும் தவம் செய்து சிவனின் அருளைப் பெற்றார்.
அர்த்தம்: பக்தி, பொறுமை, ஒழுக்கம்.
நந்தி எப்போதும் சிவனை நோக்கி இருப்பது, மனம் இறைவனை நோக்கி நிலைத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. மகாவிஷ்ணு – கருடன் 

கருடன் ஒரு அதிசய சக்தி வாய்ந்த பறவை.
அர்த்தம்: வேகம், உயர்ந்த சிந்தனை, தீயவற்றை வெல்வது.
அதனால் விஷ்ணுவின் வாகனமாக கருடன் விளங்குகிறார்.

6. விநாயகர் – மூஞ்சூரு (எலி) 

ஒரு அகந்தை கொண்ட உயிர், விநாயகரிடம் அடைக்கலம் அடைந்தபோது, அவன் எலியாக மாறினான்.
 அர்த்தம்: ஆசைகள் சிறியதாகத் தோன்றினாலும், அவை பெரிதாகி வாழ்க்கையை ஆளலாம்.
அதை கட்டுப்படுத்தும் சக்தி விநாயகர்.

7. காலபைரவர் – நாய் 

நாய் விசுவாசத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடையாளம்.
 அர்த்தம்: எச்சரிக்கை, காவல், நேர்மை.
அதனால் காலபைரவரின் வாகனமாக நாய் அமைந்தது.

8. முருகன் – மயில் 

முருகன் அசுரர்களை வென்றபோது, மயில் அவருக்குப் பரிசாக கிடைத்தது.
 அர்த்தம்: அகந்தையை அழித்து, அழகையும் ஆன்மீகத்தையும் இணைத்தல்.
மயில் தனது நச்சை கட்டுப்படுத்துவது போல, மனிதனும் தனது குறைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

9. இந்திரன் – ஐராவதம் 

பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த வெள்ளை யானை ஐராவதம்.
 அர்த்தம்: ஆட்சிசக்தி, பெருமை, பொறுப்பு.
இந்திரனின் வாகனமாக அது விளங்குகிறது.

 ஆன்மீகப் பாடம்

இந்த வாகனங்கள் வெறும் சின்னங்கள் அல்ல.
ஒவ்வொன்றும் நமக்கு ஒரு வாழ்க்கை பாடம்:

தைரியம் (சிங்கம்)
அறிவு (அன்னம்)
விழிப்புணர்வு (ஆந்தை)
பக்தி (நந்தி)
உயர்வு (கருடன்)
ஆசைக் கட்டுப்பாடு (எலி)
விசுவாசம் (நாய்)
அகந்தை ஒழிப்பு (மயில்)
பொறுப்பு (யானை)

நாம் எந்த குணத்தை வளர்க்கிறோம் என்பது தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஈரோடு பள்ளிபாளையம் - நவபிருந்தாவனம் :

ஈரோடு பள்ளிபாளையம் - நவபிருந்தாவனம் :
ஸ்ரீ பாதராஜர் மடத்தின் நவ பிருந்தாவனம் தமிழகத்தின் ஈரோடு அருகாமையில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஒன்பது பேர் ஒரே இடத்தில் சமாதி கொண்டருளும் அற்புத திருத்தலம். உண்மையில் மிகவும் அமைதியான இடம்.

எத்தனையோ சித்தர்களும் மகான்களும், யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத பூமி. அந்தவகையில் அண்மை கண்ட அழகிய அமையான ஜீவசமாதியை உங்களுடன்பகிர்வதில் பெருமகிழ்வுருகிறேன்.

அமைவிடம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் சாலையில் வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில்கரைகாண முடியாத பல அற்புதங்கள் கொண்ட நவ பிருந்தாவனம் ஸ்ரீ பாதராஜ மடம் அமைந்துள்ளது. இப்பகுதிமக்களால் சந்தியாசி மடம் என்றும் முளபாகல் மடம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ நவவிருந்தாவனம்

காலம்:

கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது அல்லது 300 வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஆய்விற்குரியது.

ஸ்ரீபாதராஜர்:

ஸ்ரீ பாதராஜ மடத்தின் நிறுவனர் ஸ்ரீ பாதராஜர் ஆவார், இவர்கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர், லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும். சேஷகிரியாச்சார் கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளுபாகல் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம்அமைந்துள்ளது கி.பி 1486 ல் பிருந்தாவனஸ்தரானார். இவ்விடம் நரசிம்மதீர்தம் என அழைக்கப்படுகிறது. இந்த முளபாகல்மடம் தான் நாம் பார்க்க உள்ள நவபிருந்தாவனத்தின் தலைமை இடமாக கருதப்படுகிறது.

ஈரோடு நவ பிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது மகான்கள் பின்வருமாறு:

1.ஸ்ரீ லக்ஷ்மி மனோகர தீர்த்தரு (1670-1708)

2.ஸ்ரீ லக்ஷ்மிபதி தீர்த்தரு (1700-1715)

3.ஸ்ரீ ஸ்ரீநிதி தீர்த்த (1781-1787)

4.ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தரு (1772-1795)

5.ஸ்ரீ சுதிநிதி தீர்த்தரு (1888-1908)

6.ஸ்ரீ ஸ்ரீ மேதாநிதி தீர்த்தரு (1908-1926)

7.ஸ்ரீ தேஜநிதி தீர்த்தரு (1770-1806)

8.ஸ்ரீ தபோநிதி Increment (1806-1838)

9.ஸ்ரீ யசோநிதி தீர்த்தரு 

பாதராஜமடத்தின் 36 வது மடாதிபதியாக 1987 முதல் 23 ஆண்டுகாலம் நிர்வாகம் செய்தவர் ஸ்ரீவிக்ஞான நிதி தீர்த்தர் ஆவார். இவர் பொறுப்பேற்ற பின்னரே நவபிருந்தாவனத்தில் அன்றாட பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்புற நடைபெறுகிறது.ஸ்ரீ விக்ஞான தீர்த்த சுவாமிகள் 95வது வயதில் கர்நாடக மாநிலம்முளுபாகலில் உள்ள நரசிம்ம தீர்த்ததில் பிருந்தாவனஸ்தராகி (ஜீவசமாதி)விட்டார்.

பள்ளிபாளையத்தில் நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற நவநாயகர்கள் :

1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர்:

கர்நாடகாவில் பிறந்த இவர் கி.பி 1670முதல் 1708 வரை வாழ்ந்தவர். ஸ்ரீ பாதராஜர் மடத்தின் 8வது பீடாதிபதியாவார். பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்து வேததர்மம், ஒழுக்கம் பக்தி ஆகியவற்றை மக்களுக்கு போதித்தவர். இவர் ஒசூர் பகுதி யாத்திரையின் போது கடும் பஞ்சம் நிலவுதை கண்டு மக்கள் குறையால் மனமுருகி ஸ்ரீ ஆஞ்சநேயவிக்கிரகத்துடன் ஓர் ஆலயத்தை ' அமைத்து ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க கடும் மழை பெய்து அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்ததாக வரலாறு. சர்வதாரி வருடம் தைமாதம் பெளர்ணமி தினத்தில் முதல் ஜீவசமாதியாக நவ பிருந்தாவனத்தில் முதல் பிருவனஸ்தராகிவிட்டார்..

2. ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர்:

இவர் ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தரின் சீடர் ஆவார். திரிகால ஞானி ஸ்ரீ ஹரி கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வியாதிகளில் இருந்து காத்து அருளியவர் இவர்

3.ஸ்ரீ நிதி தீர்த்தர்:

ஸ்ரீ பாதராஜ அஷ்டாகம் என்ற ஹ்தோத்திரத்தை உலகிற்கு உணர்த்திய கொண்டவர் மகான்மகாவிஷ்ணுவிடம் அதீத பக்தி கொண்டவர்.

4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்:

ஜபதவ அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தவர் இவர் தியானத்தை மெச்சி இறைவனேஸ்ரீ பாண்டுரங்க விட்டல சுவாமி தம்பதி சமேதாராக காட்சி அளித்தவர், 14வது பீடாதிபதியானவர் வித்வான், எழுத்தாளர், இலக்கியவாதியாவார், மைசூர் மகாராஜவிற்கு தர்மநெறிப்படி மன்னர் ஆட்சி செய்யும் நெறிமுறைகளை உபதேசித்த மகான் இவரை வணங்குபவர் கல்வியில் சிறப்பர்

5. ஸ்ரீ சுதிநிதிதீர்த்தர்:

23வது மடாதிபதியாவார். மத்வ சிந்தாந்தத்தின்

உயர்ந்த கிரதமான ஸ்ரீ மந்நியாயசுதா என்ற கடினமான கிரந்தத்தை மிக எளிய முறையில்அநேகர்க்கு கற்பித்த மகான். தன் வாழ்நாழ் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நீராடி ஸ்ரீ கிருஷ்ண பகவானை பூஜித்து வந்த சிவ்ய புருஷர்.

6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர்:

இவர்ஸ்ரீ சதிநிதி தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றவராவார். மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் அருளிய சந்திரிகா என்ற கிரந்தத்தின் மூலப்பிரதியை கைப்பட எழுதியவர், விலைமதிக்க முடியாத இவரின் கையெழுத்துப்பிரதி மைசூர் ஓரியண்டல் நூலகத்தில் அமைந்துள்ளது. ஆந்திராவில் யாத்திரையின் போது புலி வர பயப்படாமல் அபிஷேக தீர்த்தம் கொடுத்து மந்திர அட்சத்தையால்புலியை ஆசிர்வதித்தாக வரலாறு

7.ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர்:

இராமநாதபுரம் மாவட்டம் இளையான் குடி வட்டத்தை சேர்ந்தவராவார். துவைத சிந்தாந்த கொள்கையை கடைபிடிப்பதே உண்மையான முக்கிநிலை என்று உணர்ந்தவர். இவர் ஸ்ரீ லட்சுபதி தீர்த்தர் காலத்தில் சேவை புரிந்தவராவார்

8.ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்:

ஸ்ரீதோஜோநிதி தீர்த்தரின் சீடர் தம் 37 வது வயதில் துறவறம் பூண்டு கி.பி 1806 முதல் 1838 வரை ஓடப்பள்ளி ஸ்ரீ பாதராஜ மடத்தை நிர்வாகம் ப்தவராவார்

9.நீயசோநிதி தீர்த்தர்:

கி.பி1840ஆம் ஆண்டு தை நம் வளர்பிறை தசமியன்று தம் குரு ஸ்ரீ பாநிதி தீர்த்த மகான் அருகில் பிருந்தாவனம்.

தொடர்பு முகவரி: 

நவ பிருந்தாவன்
பள்ளிபாளையம்
வசந்த நகர்
ஈரோடு


காலை 11 மணிக்குள்ளாக வந்தால் மட்டுமே தரிசிக்க இயலும். ஒருமுறை தரிசிக்கவும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, May 20, 2026

எந்த அலங்காரத்தில் பழநி முருகனை தரிசனம் செய்யலாம்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்....
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. 

அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை.

 மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

அதாவது முடி முதல்,அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான்.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். 

பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். 

ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையை சுற்றி  (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத)எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. 

அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு  தகவல் உண்டு.

தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில்
(கற்சிலை) தரிசிக்க வேண்டுமா? 
எது ‌சிற‌ந்தது?

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். 

முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம்.

வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 

20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். 

தீராத நோய்,என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. 

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். 

நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, May 19, 2026

கால பைரவருக்கு உகந்த நாள்...

கால பைரவர் வழிபாடு...
தேய்பிறை அஷ்டமி - கால பைரவருக்கு உகந்த நாள்...

ஒவ்வொரு மாசமும் வர்ற *தேய்பிறை 8ம் நாள்* தான் தேய்பிறை அஷ்டமி. இது *கால பைரவருக்கு* ரொம்ப விசேஷமான நாள்.

---

_1. தேய்பிறை அஷ்டமி சிறப்புகள்_

1. *பைரவர் அவதார தினம்* - சிவபெருமான் *பைரவரா* அவதரிச்ச நாள். காலத்துக்கே அதிபதி கால பைரவர்.

2. *கால தோஷம் நீங்கும்* - "கால" = நேரம், மரணம். பைரவர் வழிபட்டா அகால மரணம், கால தோஷம், ஏவல், பில்லி சூனியம் எல்லாம் போகும்.

3. *கடன் தீரும்* - ருணம் + ரோகம் + தரித்திரம் = 3ம் தீர்குற தெய்வம் பைரவர். தேய்பிறை அஷ்டமி அன்னிக்கு வேண்டினா கடன் சீக்கிரம் அடையும்.

4. *எதிரி விலகும்* - கோர்ட் கேஸ், வழக்கு, எதிரி தொல்லை இருந்தா பைரவர் காப்பாத்துவார். 

5. *ராகு-கேது தோஷம் போகும்* - நவகிரகத்துல ராகு-கேதுவுக்கு அதிபதி பைரவர். சர்ப தோஷம், நாக தோஷம் உள்ளவங்க இந்த நாள்ல வழிபடணும்.

6. *காவல் தெய்வம்* - ஊர், வீடு, கடை, வாகனம் எல்லாத்தையும் காக்குறவர். திருட்டு பயம் போகும

---

_2. வழிபாட்டு முறை - எப்படி செய்யணும்_

*நேரம்:* மாலை *4:30 PM - 6:00 PM ராகு காலம்* தான் பெஸ்ட். பைரவருக்கு ராகு காலம் ரொம்ப பிடிக்கும்.

*செய்முறை:*

 1: சுத்தம்*  
காலைல குளிச்சி, கருப்பு/சிவப்பு வேட்டி சட்டை போட்டுக்கோங்க. பைரவருக்கு கருப்பு பிடிக்கும்.

 2: விளக்கு*  
மாலைல பைரவர் சன்னதி முன்னாடி *நல்லெண்ணெய் விளக்கு / எள் விளக்கு* 8 தீபம் ஏத்துங்க. 8 தீபம் = அஷ்டமி.

3: நைவேத்தியம்*  
- *சுண்டல்* - கொண்டைக்கடலை சுண்டல் முக்கியம்
- *தயிர் சாதம்* - குளிர்சி
- *பன்னீர்* - பைரவருக்கு ரொம்ப பிடிக்கும்
- *தேங்காய்* - உடைக்கணும்

4: அர்சனை*  
பைரவருக்கு *செவ்வரளி பூ, வடை மாலை* சாத்துங்க. உyங்க பேர், நட்சத்திரம் சொல்லி அர்சனை பண்ணுங்க.

5: வலம் வருதல்*  
கோவிலை *8 முறை* வலம் வாங்க. ஒவ்வொரு வலமும் ஒரு தோஷம் போகும்.

 6: நாய் சேவை*  
பைரவரோட வாகனம் நாய். கோவில் பக்கம் நாய்கு *பிஸ்கட், சாதம்* கொடுங்க. இது ரொம்ப பெரிய புண்ணியம்.

*வீட்ல செய்றவங்க:* பைரவர் படம் வச்சி மேல சொன்ன மாதிரி விளக்கு ஏத்தி வழிபடலாம். கோவிலுக்கு போறது இன்னும் விசேஷம்.

---

_3. சொல்ல வேண்டிய மந்திரங்கள்_

_. மூல மந்திரம் - 108 முறை_m
`ஓம் ஹ்ரீம் பம் கால பைரவாய நம:`

*பலன்:* கடன், எதிரி, நோய், தோஷம் எல்லாம் போகும்.

_. காயத்ரி மந்திரம் - 11 முறை_
`ஓம் கால காலாய வித்மஹே கால ஹஸ்தாய தீமஹி தன்னோ காலபைரவ: ப்ரசோதயாத்`

*பலன்:* ஞானம், தைரியம், கால தோஷ நிவாரணம்.

_. ருண விமோசன மந்திரம்_
`ஓம் பம் பைரவாய ருண விமோசனாய நம:`

*பலன்:* கடன் அடைய, வரவு கூட.

_. பைரவர் கவசம் - சுருக்கம்_
`ஓம் அஸ்ய ஸ்ரீ பைரவ கவச மந்திரஸ்ய...`

*பலன்:* உடம்பு முழுக்க கவசம் மாதிரி பாதுகாப்பு. தீய சக்தி அண்டாது.

_. எளிய மந்திரம் - எப்போ வேணா_
`ஓம் பைரவா போற்றி`

*பலன்:* பயம் வரும்போது, கஷ்டம் வரும்போது சொன்னா உடனே மனசு தெளியும்.

---

_. தேய்பிறை அஷ்டமி அன்னிக்கு செய்ய கூடாதது_

1. மாமிசம் சாப்பிட கூடாது
2. மது அருந்த கூடாது 
3. யாரையும் ஏச கூடாது
4. வீட்ல சண்டை போட கூடாது


*சுருக்கமா:* கடன், கோர்ட், எதிரி, கேது தோஷம் இருந்தா *தேய்பிறை அஷ்டமி அன்னிக்கு* பைரவரை வணங்குங்க. ராகு காலம் 4:30-6:00 PM மறக்காம 8 தீபம் ஏத்தி `ஓம் ஹ்ரீம் பம் கால பைரவாய நம:` 108 முறை சொல்லுங்க.

தஞ்சாவூர் பெருவுடையார் ஆலய வளாகத்தில ஸ்ரீ வராகி அம்மன்.

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வராகி அம்மன் திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ராஜராஜ சோழனின் வாழ்க்கையோடும், இந்த பிரம்மாண்டக் கோவிலின் உருவாக்கத்தோடும் வராகி அம்மன் வழிபாடு மிக நெருங்கிய தொடர்புடையது.
​அதன் வரலாறு, சிறப்புகள் மற்றும் தரிசன பலன்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதோ:

​1. ஆலய வரலாறு மற்றும் ராஜராஜ சோழன்
​வராகி அம்மன், சப்தகன்னியர்களில் (ஏழு கன்னிமார்கள்) ஐந்தாவது தாயாவார். இவர் பன்றி முகமும், மனித உடலும், நான்கு கரங்களும் கொண்ட வாராஹி வடிவினள். சிவபெருமானின் போர்ப்படையின் தளபதியாக விளங்குபவர்.
​ராஜராஜனின் தளபதி: மாமன்னன் ராஜராஜ சோழன் எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும், போருக்குப் புறப்படுவதற்கு முன்பும் இந்த வராகி அம்மனை வழிபட்டு அனுமதி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் இவரைச் சோழர்களின் "வெற்றித் தெய்வம்" என்று அழைப்பர்.
​பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு: பெரிய கோவில் கட்டுவதற்குப் பல தடைகளும், சவால்களும் ஏற்பட்டபோது, ராஜராஜ சோழன் வராகி அம்மனை வழிபட்டு, அவளது அருளாலேயே அனைத்து தடைகளையும் நீக்கி, கோவிலை வெற்றிகரமாகக் கட்டி முடித்தார் என்று வரலாறு கூறுகிறது.

​2. ஆலயத்தின் சிறப்புகள்
​முன்னிறுத்தப்படும் வழிபாடு: வழக்கமாகச் சிவன் கோவில்களில் முதலில் விநாயகரை வழிபடுவதுதான் முறை. ஆனால், தஞ்சைப் பெரிய கோவிலில் எந்த ஒரு வழிபாட்டைத் தொடங்குவதற்கும், திருவிழாக்கள் ஆரம்பிப்பதற்கும் முன்பாக முதலில் வராகி அம்மனுக்குத்தான் சிறப்பு வழிபாடுகளும், காப்புக்கட்டுதலும் நடைபெறுகின்றன.

​அதிசய வடிவமைப்பு: இங்குள்ள வராகி அம்மன் சிலை மிகவும் கம்பீரமானது. இவளது திருவுருவம் அசுரர்களை அழிக்கும் உக்கிர வடிவம் என்றாலும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்குக் கருணை பொழியும் தாயாக விளங்குகிறாள்.

​ஆஷாட நவராத்திரி: ஆடி மாதத்தில் வரும் 'ஆஷாட நவராத்திரி' இந்த அம்மனுக்குரிய மிக முக்கிய திருவிழாவாகும். இந்த 10 நாட்களும் அம்மனுக்குப் பல வகையான காய்கறிகள், பழங்கள், மலர்கள், தானியங்கள் மற்றும் நவதானியங்களால் விசேஷ அலங்காரங்கள் (உதாரணமாக: தேங்காய் அலங்காரம், மாதுளை அலங்காரம்) செய்யப்படும். இதைக் காண உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

​3. தரிசன பலன்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்
​வராகி அம்மன் "வாக்கு பலிதம்" தருபவள் மற்றும் எதிர்ப்புகளை அழிப்பவள் என்பது ஐதீகம். அவளை வணங்குவதால்

 கிடைக்கும் நன்மைகள்:
​எதிரிகள் மற்றும் திருஷ்டி நீங்குதல்: உங்களைச் சுற்றியுள்ள பொறாமை, கண் திருஷ்டி, செய்வினை மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் அம்மனின் அருளால் காணாமல் போகும்.

​தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி: தொழிலில் முடக்கம் இருப்பவர்கள் அல்லது புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் வராகி அம்மனை வழிபட, தடைகள் நீங்கி அமோக லாபம் கிடைக்கும்.
​வழக்குகளில் வெற்றி: நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
​மன தைரியம்: பய உணர்வு நீங்கி, வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய துணிச்சலும், மன அமைதியும் கிடைக்கும்.

​வழிபடும் முறை:
​வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி (வளர்பிறை/தேய்பிறை பஞ்சமி) மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிக விசேஷமான நாட்கள்.
​இவருக்கு உகந்த மலர் செம்பருத்தி (சிவப்பு நிற மலர்கள்) மற்றும் செவ்வரளி.
​அம்மனுக்குக் கிழங்கு வகைகள் (சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு), தோல் நீக்காத உளுந்த வடை, மற்றும் மாதுளம்பழம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடலாம்.
​நெய் விளக்கு அல்லது தேங்காய் மூடியில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுவது நினைத்த காரியத்தை விரைவில் நிறைவேற்றும்.

​முக்கிய குறிப்பு: தஞ்சை பெரிய கோவிலுக்குச் செல்லும் போது, ராஜகோபுரத்தைக் கடந்ததும் இடது புறம் திரும்பினால், தெற்கு நோக்கிய சந்நிதியில் இந்த அன்னை வீற்றிருப்பாள். பெரிய கோவிலின் முழு பலனையும் பெற வராகி அம்மனின் தரிசனம் மிக அவசியமானது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, May 10, 2026

திருநாவுக்கரசு நாயனார். ‘நாமார்க்கும் குடியல்லோம்! அப்பர் வரலாறு

அப்பர் வரலாறு
அப்பர்
அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திருநாவுக்கரசு நாயனார். ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்று வீர முழக்கம் செய்த மாபெரும் சிவ ஞானியான இவர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில் தோன்றினார். தந்தையார் புகழனார்; தாயார் மாதினியார். தமக்கையார் திலகவதியார். இளமை இயற்பெயர் ‘மருள் நீக்கியார்’. 

மருள் நீக்கியார் இளமையில் சமண சமயம் சார்ந்து, கலை நூல் பலவும் கற்றுத் தேர்ந்தார். தருமசேனர் என்னும் பட்டம் பெற்று, வித்தகராய் சமண சமயத் தலைமை பெற்று விளங்கினார். தமக்கையார் திலகவதியார் பலகாலும் பணிந்து விண்ணப்பித்துக்கொண்டபடி, திருவதிகை வீரட்டானேசுவரர் இவரைச் சூலைநோய் தந்து வருத்தித் தடுத்து ஆட்கொண்டார். அப்போது “கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கப்பெற்றார். அவரது செந்தமிழ்ப் பாமாலையைச் செவியாரக் கேட்ட சிவபெருமான் இவருக்குத் ‘திருநாவுக்கரசன்’ என்னும் திருநாமத்தை அருளினான்.

சமண சமயத்தை விட்டு சைவ சமயம் சார்ந்தமைக்காக வெகுண்ட மகேங்திரவர்ம பல்லவன் (கி.பி. 600-630), இவரைப் பெருந்தீயின் வெப்பம் கொண்ட நீற்றறையில் அடைத்து வைக்கும்படி தன் ஏவலாளர்களுக்கு ஆணையிட்டான். அப்போது திருநாவுக்கரசர் சிவபெருமானைத் துதித்து “மாசில் வீணையும் மாலை மதியமும்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவாய்மலர்ந்தருளினார். அந்த நீற்றறை அவருக்கு இளவேனிலும், தென்றல் காற்றும், பொய்கையும், வெண் நிலவும், வீணையோசையும் போலக் குளிர்ந்திருந்தது. 

நீற்றறையில் இட்டும் நாவரசருக்கு ஒன்றும் நேராமல் இருந்ததைக் கண்ட சமணர்கள், அவரை விஷம் கலந்த அன்னத்தை உண்ணும்படி செய்தார்கள். நஞ்சை உண்டும் அவருக்கு ஒன்றும் ஆகாததைக் கண்ட சமணர்கள் யானையை விட்டு அவரை மிதிக்கச் செய்யுமாறு அரசனுக்கு அறிவுறுத்தினார்கள். சீறி வரும் யானையைக் கண்டும் சிறிதும் அஞ்சாமல் சிவபெருமானைத் தியானித்த வாகீசர், ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை’ என்று பதிகம் பாடித் தொழுதார். யானையும் நாவரசரை வலமாக வந்து பணிந்து எழுந்தது திரும்பிச் சென்றது.

யானையின் செயலைக் கண்டு அவமானப்பட்ட சமணர்கள், வாகீசரைக் கல்லோடு கட்டிக் கடலில் விடுமாறு அரசனுக்கு ஆலோசனை சொன்னார்கள். சினம் கொண்டிருந்த அரசனும் சமணர்கள் சொல்லைக் கேட்டு அவ்வாறே செய்ய ஆணையிட்டான். கடலில் தள்ளப்பட்ட அந்த நிலையிலும் சிறிதும் மனம் தளராத திருநாவுக்கரசர், இறைவனைத் துதித்து ‘சொற்றுணை வேதியன்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். உடனே கல்லும் கடலில் மிதந்தது; நாவுக்கரசரும் கரை சேர்ந்தார்.
சமணர்களின் கொடிய செய்கைகளால் தமக்கு ஒன்றும் தீங்கு நேராமல் வெற்றி கொண்ட திருநாவுக்கரசரின் பக்திச் சிறப்பை உணர்ந்த பல்லவ மன்னன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்; தான் சமணர்களோடு சேர்ந்து, அறியாது செய்த குற்றங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினான். சுவாமிகளும் பல்லவ மன்னனைச் சிவபெருமானுடைய திருவடிகளில் பணியச்செய்து சைவ சமயத்தில் சேர்ப்பித்து அருளினார்.

திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தில் ‘பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்’ என்று பாடி ‘சூல முத்திரையும் இடப முத்திரையும் அடியேன்மேல் பொறித்து அருளவேண்டும்’ என்று சிவபெருமானிடம் விண்ணப்பித்து சூல இடப முத்திரைகளைத் தம் திருத்தோளில் பொறிக்கப்பெற்றார்.

சீகாழிப் பதிக்கு எழுந்தருளிய நாவரசர், திருஞானசம்பந்த சுவாமிகளைச் சந்தித்து அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். சம்பந்தர் அவரை எதிர் வணங்கி ‘அப்பரே!’ என்று இருகைகளையும் பற்றி எடுத்தார். அந்த நாள் முதல், திருநாவுக்கரசர் ‘அப்பர்’ என்னும்  திருப்பெயராலும் வழங்கப்பெற்றார். 

திருநல்லூரில் சிவபெருமானை வணங்கி எழுந்த அப்பரின் திருமுடிமீது பரமன் தன் பதமலரைச் சூட்டி அருளினான். உடனே, ஈசனின் இன்னருளை எண்ணி, ‘நினைந்து உருகும் அடியாரை’ எனத் தொடங்கும் திருதாண்டக மாலையைச் சாற்றி, ‘தாண்டக வேந்தர்’ என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

திங்களூரில் அப்பூதி அடிகள் என்னும் தொண்டரின் இல்லத்தில் வாகீசர் எழுந்தருளி இருந்தபோது அவர் அமுது செய்வதற்காக வாழை இலை அரிந்து வரச் சென்ற அப்பூதியாரின் புதல்வனைப் பாம்பு தீண்டி அவன் இறக்க நேரிட்டது. இதை அறிந்த நாவரசர், ‘ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை’ என்றும் தொடங்கும் பதிகத்தைப் பாடி அச்சிறுவனை மீண்டும் உயிர் பெற்று எழச் செய்து அருளினார். 

திருஞானசம்பந்தருடன் பலத் திருத்தலங்களை வழிபட்டுத் திருமறைக்காடு சென்றடைந்தார் திருநாவுக்கரசர்.  அவர்கள் இருவரும் மறைக்காடருடைய ஆலயத்திற்குச் சென்று, அக்கோவில் கதவு அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அக்கதவினைத் திறக்கப் பாடுமாறு சம்பந்தர் நாவரசரிடம் வேண்ட,  அவரும் ‘பண்ணின் நேர் மொழியாள்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கதவைத் திறக்கச்செய்தார். அப்பரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கதவினை மீண்டும் அடைக்கவும் திருப்பதிகம் பாடி அருளினார் சம்பந்தர்.

திருமறைக்காட்டில் அப்பர் சம்பந்தரோடு தொண்டு செய்து இருக்கும்போது, பாண்டிய நாட்டில்  கூன்பாண்டியன் என்னும் அரசன் சமண சமயத்தைத் தழுவி இருந்தான். அப்போது பாண்டி மாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும் சமணர்களை வெல்லும்பொருட்டு சம்பந்தரை அழைத்துவரத் தூதுவரை அனுப்பினார்கள். அது கேட்டு சம்பந்தரும் பாண்டியநாட்டிற்குப் புறப்பட, சமணர்களால் நேரக்கூடிய இடர்களை எடுத்துக்கூறி அவரைத் தடுத்தார் அப்பர் சுவாமிகள்.  தாமும் கூட வரவும் துணிந்தார். ஆனால், சம்பந்தர் அதற்கு சம்மதிக்காமல் ‘கோளறு பதிகம்’ பாடி, பாண்டிய நாட்டிற்குத் தாமே சென்றார். அதனால், அப்பர் சம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு பிறதலங்களை வணங்கச் சென்றார்.

திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தில் மிகவும் களைத்துச் சோர்வடைந்திருந்த அப்பருக்குப் பொதிச்சோறும் குடிநீரும் கொடுத்தருளினான் பரமன். திருக்கயிலையைக் கண்ணினால் காண வேண்டும் என்று விரும்பிய அப்பருக்கு திருவையாற்றிலே கயிலைக் கோலத்தில் காட்சிதந்தான். அப்போது ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே’ என்று திருத்தாணடகம் பாடி உள்ளம் குழைய உருகி ஆடினார். 

திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் எழுந்தருளியிருந்தபோது, அவரைத் தரிசிப்பதற்காகத் திருஞானசம்பந்தப் பெருமான் அந்தத் திருத்தலத்தை நோக்கிச் சென்றார். அவரை எதிர் சென்று வரவேற்கச் சென்ற அப்பர், யாரும் அறியாதபடி சம்பந்தருடைய முத்துச் சிவிகையைத் தாங்கினார். சம்பந்தர் திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசரைக் காணாமல் ‘அப்பர் எங்கு உற்றார்?’ என்று வினவ, நாவுக்கரசர் ‘தங்களைச் சுமக்கும் பேறு பெற்ற நான் இங்கு உற்றேன்’ என்றார். அதைக் கேட்டுப் பதைபதைத்த திருஞானசம்பந்தர் சிவிகையிலிருந்து இறங்கி வந்து நாவரசரை வணங்க, நாவரசரும் அவரை வணங்கி நின்றார். 

சம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்ட அப்பர், மதுரை, திருவிராமேச்சுரம், திருநெல்வேலி முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு ‘புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்’ என்று  புகலூர்த்தாண்டகத்தைத் திருவாய் மலர்ந்தருளி, சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

Followers

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர்! பக்திக்கும் இறைவனுக்கும் உள்ள அழகான பிணைப்பை விளக்கும் ஒரு தலம்...