அஷ்ட பைரவர் தலங்களில் ஒன்றானதும்,
#நகரத்தார்_கோயில் ("சிற்பக்கோயில்")
என்று அழைக்கப்படும்
#இரணியூர் என்ற #ஹிரண்யனூர்
#ஆட்கொண்டநாதர் (இரணிஸ்வரன்)
என்ற #நரசிம்மேஸ்வரர்
#சிவபுரந்ததேவி திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரணியூர் கோயில். நகரத்தாரின் 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்பக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் 1941 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் நகரத்தார் புதுப்பித்து கட்டினர்.
நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும். இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.
அதிகமான சிற்பங்கள் அமைந்திருப்பதால் இச்சிவாலயத்தினை சிற்பக் கோயில் என்றும் அழைக்கின்றார்கள். ஆலையத் தூண்களில் அஷ்டலட்சுமி, வல்லப கணபதி, வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், நவதுர்க்கை, இரணிய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சிவாலயத்தின் மூலவர் ஆட்கொண்ட நாதர் எனவும், அம்பிகை சிவபுரந்த தேவி எனவும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்திற்கு சிவாகமப் படி பூசைகள் செய்யப்படுகின்றன. தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.
கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, திருவாதிரை, கார்த்திகை மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.
இரணியூர் தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஆட்கொண்டநாதர், தொழிலில் வெற்றி அருளும் ஈசனாக போற்றப்படுகிறார். பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை அனைவரும் மயில் வாகனத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
இப்பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும், இது நகரத்தார் சமூகத்தின் தனி குலங்களுடன் (பிரிவு) தொடர்புடையது.
கி.பி 713-ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற இரணியூர் ஈசனை வணங்கினான்.
ஈசனும் சிங்க முகமும், மானிட உடலும், மிருகத்தின் காலும், வாலும், பறவையின் இறக்கையும், இணைந்த வீரசபேஸ்வராய் உருவெடுத்து நரசிம்மரை ஆட்கொண்டு சாந்தப்படுத்தினார் என்பது வரலாறு
இதனால் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசனை ஆட்கொண்ட நாதர் என்றும் இரணிஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆட்கொண்ட நாதரால் இத்திருத்தலத்தில் நரசிம்மர் குளிச்சி பொருந்திய நீலமேக பெருமாளாக இத்திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் உள்ள தூண்களில் கலை நயமிக்க சிற்பங்கள் காண்பவரை வியக்க வைக்கிறது. மேலும் இச்சிற்பங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகிறது.
ஆட்கொண்ட நாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சியகிக்கிறார். இக்கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் விமானம் சுவாமி அம்சம் என்பது ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சாமியையும் விமானத்தையும் தரிசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இவற்றுள் அம்பாள் முன் உள்ள தூர்க்கை மண்டபத்தில் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நவதூர்க்கை சிற்ப வல்லுனர்களால் போற்றும் பொக்கிஷமாய் திகழ்கிறது.
#கோயில்_குறிப்புகள்:
*மூலவர்: ஆட்கொண்ட நாதர்
*அம்மன்: சிவபுரந்ததேவி
*தல விருட்சம்: வில்வம்
*ஆகமம்: சிவாகமம்
*ஊர்: இரணியூர்
*மாவட்டம்: சிவகங்கை
#தல_வரலாறு:
திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், திருமாலுக்கு காட்சி அருளி தோஷம் நீக்கினார். திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் ‘ஆட்கொண்ட நாதர்’ என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, ‘நரசிம்மேஸ் வரர்’ என்றும் பெயருண்டு.
திருமாலின் உக்கிரம் கண்டு அம்பிகையும் உக்கிரமடைந்தார். அதனால் நவகாளியாக வெளிபட்டு சிவனை வணங்கினார்.சிவனை வழிபட்டு சாந்தம் அடைந்தமையால் சிவபுரந்த தேவி என்று அழைக்கப்படுகிறார்.
அஷ்ட பைரவர் எழுந்தருளிய எட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனாலேயே இங்கு கால பைரவர் சிறப்புடன் வழிபடப்படுகிறார். இங்குள்ள மற்ற புராணங்களின்படி, குபேரனும் வாயுவும் இக்கோயிலிலும் வழிபட்டுள்ளனர்.
*கோயில் சிறப்பு:
சுயம்பு மூர்த்தியாக ஆட்கொண்ட நாதர் அருள்பாலிக்கிறார். கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் நடைபெறுகிறது.
*கல்வெட்டுகள்:
கோயில் இணையதளத்தின்படி, இந்த இரணியூர் கோயில் கி.பி. 714 ஆம் ஆண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, மூலக் கோயில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இந்தக் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் 34 கிராமங்களில் வசிக்கும் 3800 குடும்பங்களுக்குச் சொந்தமானது. நாட்டுக்கோட்டை நகரத்தரின் வரலாற்றின்படி, கவிரிபூம்பட்டினம் கிழக்கு வீதியில் வசித்து வந்த 502 குடும்பங்கள், பாண்டிய மன்னரின் வேண்டுகோளை ஏற்று இளையதாங்குடியில் குடியேறினர். 7 ஆம் நூற்றாண்டில், அந்த 502 குடும்பங்களில் இருந்த இரண்டு சகோதரர்கள் இவ்விடத்திற்கு வந்து ஸ்ரீ அட்கொண்டநாதர் கோயிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தினர்.
இக்கோயில் தொடர்பான பதிவேடுகளின்படி, இந்த இடம் நகரத்தார் சமூகத்திற்கு கிபி 714 இல் வழங்கப்பட்டது (கலியுகம் ஆண்டு 3815 என பதிவு செய்யப்பட்டுள்ளது). முக்கிய கோவில் அந்த தேதிக்கு முன்பே இருந்ததாக நம்பப்படுகிறது. பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனின் ஆட்சியின் கீழ் நகரத்தார் சமூகத்திற்கு பல்வேறு நிலங்களும், கோயில்களை (9 நகரத்தார் கோயில்கள் உட்பட) பராமரிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிகள் வழங்கப்பட்டன.
அசல் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படுகிறது; இருப்பினும், இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக புதுப்பிக்கப்பட்டது, அன்றிலிருந்து வழக்கமான புதுப்பிப்புகள் மற்றும் பராமரிப்புகள் உள்ளன. இப்பகுதிக்குள், சிற்ப கோயில் அல்லது சிற்பங்களின் கோயில் என்று பிரபலமாகக் அழைக்கப்படுகிறது – காரணம் இல்லாமல் அல்ல. இங்குள்ள சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள சிற்பங்களின் எண்ணிக்கையும், அந்த சிற்பங்களில் உள்ள விவரங்களும் கிட்டத்தட்ட ஒப்பிடமுடியாது.
பிற சிவாலயங்களை விட மிக முக்கியமான ஒன்று இத்திருத்தலத்தில் நவக்கிரக சன்னதியின் அருகில் மேலே குபேரர் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தில் காட்சியாளிக்கிறார். இரணியூர் கோவிலில் உள்ள குபேரர் தன் வாகனமான குதிரையில் உள்ளபடி கட்சியாளிக்கிறார்.
மேலும் இங்கு தமிழ் வருடப் பிறப்பன்றும், அட்சய திருத்தி அன்றும் குபேர பூஜையானது நடைபெறும்.
வரலாற்று சிறப்பு மிக்க கலைநய மிக்க கற்சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினை அதிகமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடை விடுமுறை நாட்களில் காண வருகின்றனர்.
ஆட்கொண்ட நாதரை தரிசித்து விட்டு அங்கு ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை அருகில் சென்று கண்டு வியக்கின்றனர். சிற்ப கலையில் முன்னோர்களின் செயல்மிகு திறனை ரசிக்கின்றனர்.
இத்தகைய சிறப்புக்கு சொந்தமான கோவிலானது சிவகேங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் இந்த ஊரானது திருப்பத்தூர் இருந்து சுமார் 13 கீ.மீ தொலையில் உள்ளது.சென்று ஆட்கொண்ட நாதரையும், அழகிய சிற்பங்களையும் தரிசித்து விட்டு வாருங்கள்.
*கோவில் நேரங்கள்:
கோயில் காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 16.30 மணி முதல் 19.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
*சென்றடைவது எப்படி?
இரணியூரில் உள்ள கோயில், திருப்பத்தூரிலிருந்து சுமார் 14 கி.மீ., திருமயத்திலிருந்து 18 கி.மீ., காரைக்குடியிலிருந்து 26 கி.மீ., திருச்சிராப்பள்ளியிலிருந்து 86 கி.மீ. மற்றும் சென்னையிலிருந்து 412 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.