Wednesday, May 20, 2026

எந்த அலங்காரத்தில் பழநி முருகனை தரிசனம் செய்யலாம்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்....
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. 

அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை.

 மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

அதாவது முடி முதல்,அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான்.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். 

பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். 

ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையை சுற்றி  (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத)எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. 

அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு  தகவல் உண்டு.

தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில்
(கற்சிலை) தரிசிக்க வேண்டுமா? 
எது ‌சிற‌ந்தது?

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். 

முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம்.

வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 

20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். 

தீராத நோய்,என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. 

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். 

நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, May 19, 2026

கால பைரவருக்கு உகந்த நாள்...

கால பைரவர் வழிபாடு...
தேய்பிறை அஷ்டமி - கால பைரவருக்கு உகந்த நாள்...

ஒவ்வொரு மாசமும் வர்ற *தேய்பிறை 8ம் நாள்* தான் தேய்பிறை அஷ்டமி. இது *கால பைரவருக்கு* ரொம்ப விசேஷமான நாள்.

---

_1. தேய்பிறை அஷ்டமி சிறப்புகள்_

1. *பைரவர் அவதார தினம்* - சிவபெருமான் *பைரவரா* அவதரிச்ச நாள். காலத்துக்கே அதிபதி கால பைரவர்.

2. *கால தோஷம் நீங்கும்* - "கால" = நேரம், மரணம். பைரவர் வழிபட்டா அகால மரணம், கால தோஷம், ஏவல், பில்லி சூனியம் எல்லாம் போகும்.

3. *கடன் தீரும்* - ருணம் + ரோகம் + தரித்திரம் = 3ம் தீர்குற தெய்வம் பைரவர். தேய்பிறை அஷ்டமி அன்னிக்கு வேண்டினா கடன் சீக்கிரம் அடையும்.

4. *எதிரி விலகும்* - கோர்ட் கேஸ், வழக்கு, எதிரி தொல்லை இருந்தா பைரவர் காப்பாத்துவார். 

5. *ராகு-கேது தோஷம் போகும்* - நவகிரகத்துல ராகு-கேதுவுக்கு அதிபதி பைரவர். சர்ப தோஷம், நாக தோஷம் உள்ளவங்க இந்த நாள்ல வழிபடணும்.

6. *காவல் தெய்வம்* - ஊர், வீடு, கடை, வாகனம் எல்லாத்தையும் காக்குறவர். திருட்டு பயம் போகும

---

_2. வழிபாட்டு முறை - எப்படி செய்யணும்_

*நேரம்:* மாலை *4:30 PM - 6:00 PM ராகு காலம்* தான் பெஸ்ட். பைரவருக்கு ராகு காலம் ரொம்ப பிடிக்கும்.

*செய்முறை:*

 1: சுத்தம்*  
காலைல குளிச்சி, கருப்பு/சிவப்பு வேட்டி சட்டை போட்டுக்கோங்க. பைரவருக்கு கருப்பு பிடிக்கும்.

 2: விளக்கு*  
மாலைல பைரவர் சன்னதி முன்னாடி *நல்லெண்ணெய் விளக்கு / எள் விளக்கு* 8 தீபம் ஏத்துங்க. 8 தீபம் = அஷ்டமி.

3: நைவேத்தியம்*  
- *சுண்டல்* - கொண்டைக்கடலை சுண்டல் முக்கியம்
- *தயிர் சாதம்* - குளிர்சி
- *பன்னீர்* - பைரவருக்கு ரொம்ப பிடிக்கும்
- *தேங்காய்* - உடைக்கணும்

4: அர்சனை*  
பைரவருக்கு *செவ்வரளி பூ, வடை மாலை* சாத்துங்க. உyங்க பேர், நட்சத்திரம் சொல்லி அர்சனை பண்ணுங்க.

5: வலம் வருதல்*  
கோவிலை *8 முறை* வலம் வாங்க. ஒவ்வொரு வலமும் ஒரு தோஷம் போகும்.

 6: நாய் சேவை*  
பைரவரோட வாகனம் நாய். கோவில் பக்கம் நாய்கு *பிஸ்கட், சாதம்* கொடுங்க. இது ரொம்ப பெரிய புண்ணியம்.

*வீட்ல செய்றவங்க:* பைரவர் படம் வச்சி மேல சொன்ன மாதிரி விளக்கு ஏத்தி வழிபடலாம். கோவிலுக்கு போறது இன்னும் விசேஷம்.

---

_3. சொல்ல வேண்டிய மந்திரங்கள்_

_. மூல மந்திரம் - 108 முறை_m
`ஓம் ஹ்ரீம் பம் கால பைரவாய நம:`

*பலன்:* கடன், எதிரி, நோய், தோஷம் எல்லாம் போகும்.

_. காயத்ரி மந்திரம் - 11 முறை_
`ஓம் கால காலாய வித்மஹே கால ஹஸ்தாய தீமஹி தன்னோ காலபைரவ: ப்ரசோதயாத்`

*பலன்:* ஞானம், தைரியம், கால தோஷ நிவாரணம்.

_. ருண விமோசன மந்திரம்_
`ஓம் பம் பைரவாய ருண விமோசனாய நம:`

*பலன்:* கடன் அடைய, வரவு கூட.

_. பைரவர் கவசம் - சுருக்கம்_
`ஓம் அஸ்ய ஸ்ரீ பைரவ கவச மந்திரஸ்ய...`

*பலன்:* உடம்பு முழுக்க கவசம் மாதிரி பாதுகாப்பு. தீய சக்தி அண்டாது.

_. எளிய மந்திரம் - எப்போ வேணா_
`ஓம் பைரவா போற்றி`

*பலன்:* பயம் வரும்போது, கஷ்டம் வரும்போது சொன்னா உடனே மனசு தெளியும்.

---

_. தேய்பிறை அஷ்டமி அன்னிக்கு செய்ய கூடாதது_

1. மாமிசம் சாப்பிட கூடாது
2. மது அருந்த கூடாது 
3. யாரையும் ஏச கூடாது
4. வீட்ல சண்டை போட கூடாது


*சுருக்கமா:* கடன், கோர்ட், எதிரி, கேது தோஷம் இருந்தா *தேய்பிறை அஷ்டமி அன்னிக்கு* பைரவரை வணங்குங்க. ராகு காலம் 4:30-6:00 PM மறக்காம 8 தீபம் ஏத்தி `ஓம் ஹ்ரீம் பம் கால பைரவாய நம:` 108 முறை சொல்லுங்க.

தஞ்சாவூர் பெருவுடையார் ஆலய வளாகத்தில ஸ்ரீ வராகி அம்மன்.

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வராகி அம்மன் திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ராஜராஜ சோழனின் வாழ்க்கையோடும், இந்த பிரம்மாண்டக் கோவிலின் உருவாக்கத்தோடும் வராகி அம்மன் வழிபாடு மிக நெருங்கிய தொடர்புடையது.
​அதன் வரலாறு, சிறப்புகள் மற்றும் தரிசன பலன்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதோ:

​1. ஆலய வரலாறு மற்றும் ராஜராஜ சோழன்
​வராகி அம்மன், சப்தகன்னியர்களில் (ஏழு கன்னிமார்கள்) ஐந்தாவது தாயாவார். இவர் பன்றி முகமும், மனித உடலும், நான்கு கரங்களும் கொண்ட வாராஹி வடிவினள். சிவபெருமானின் போர்ப்படையின் தளபதியாக விளங்குபவர்.
​ராஜராஜனின் தளபதி: மாமன்னன் ராஜராஜ சோழன் எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும், போருக்குப் புறப்படுவதற்கு முன்பும் இந்த வராகி அம்மனை வழிபட்டு அனுமதி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் இவரைச் சோழர்களின் "வெற்றித் தெய்வம்" என்று அழைப்பர்.
​பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு: பெரிய கோவில் கட்டுவதற்குப் பல தடைகளும், சவால்களும் ஏற்பட்டபோது, ராஜராஜ சோழன் வராகி அம்மனை வழிபட்டு, அவளது அருளாலேயே அனைத்து தடைகளையும் நீக்கி, கோவிலை வெற்றிகரமாகக் கட்டி முடித்தார் என்று வரலாறு கூறுகிறது.

​2. ஆலயத்தின் சிறப்புகள்
​முன்னிறுத்தப்படும் வழிபாடு: வழக்கமாகச் சிவன் கோவில்களில் முதலில் விநாயகரை வழிபடுவதுதான் முறை. ஆனால், தஞ்சைப் பெரிய கோவிலில் எந்த ஒரு வழிபாட்டைத் தொடங்குவதற்கும், திருவிழாக்கள் ஆரம்பிப்பதற்கும் முன்பாக முதலில் வராகி அம்மனுக்குத்தான் சிறப்பு வழிபாடுகளும், காப்புக்கட்டுதலும் நடைபெறுகின்றன.

​அதிசய வடிவமைப்பு: இங்குள்ள வராகி அம்மன் சிலை மிகவும் கம்பீரமானது. இவளது திருவுருவம் அசுரர்களை அழிக்கும் உக்கிர வடிவம் என்றாலும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்குக் கருணை பொழியும் தாயாக விளங்குகிறாள்.

​ஆஷாட நவராத்திரி: ஆடி மாதத்தில் வரும் 'ஆஷாட நவராத்திரி' இந்த அம்மனுக்குரிய மிக முக்கிய திருவிழாவாகும். இந்த 10 நாட்களும் அம்மனுக்குப் பல வகையான காய்கறிகள், பழங்கள், மலர்கள், தானியங்கள் மற்றும் நவதானியங்களால் விசேஷ அலங்காரங்கள் (உதாரணமாக: தேங்காய் அலங்காரம், மாதுளை அலங்காரம்) செய்யப்படும். இதைக் காண உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

​3. தரிசன பலன்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்
​வராகி அம்மன் "வாக்கு பலிதம்" தருபவள் மற்றும் எதிர்ப்புகளை அழிப்பவள் என்பது ஐதீகம். அவளை வணங்குவதால்

 கிடைக்கும் நன்மைகள்:
​எதிரிகள் மற்றும் திருஷ்டி நீங்குதல்: உங்களைச் சுற்றியுள்ள பொறாமை, கண் திருஷ்டி, செய்வினை மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் அம்மனின் அருளால் காணாமல் போகும்.

​தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி: தொழிலில் முடக்கம் இருப்பவர்கள் அல்லது புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் வராகி அம்மனை வழிபட, தடைகள் நீங்கி அமோக லாபம் கிடைக்கும்.
​வழக்குகளில் வெற்றி: நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
​மன தைரியம்: பய உணர்வு நீங்கி, வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய துணிச்சலும், மன அமைதியும் கிடைக்கும்.

​வழிபடும் முறை:
​வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி (வளர்பிறை/தேய்பிறை பஞ்சமி) மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிக விசேஷமான நாட்கள்.
​இவருக்கு உகந்த மலர் செம்பருத்தி (சிவப்பு நிற மலர்கள்) மற்றும் செவ்வரளி.
​அம்மனுக்குக் கிழங்கு வகைகள் (சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு), தோல் நீக்காத உளுந்த வடை, மற்றும் மாதுளம்பழம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடலாம்.
​நெய் விளக்கு அல்லது தேங்காய் மூடியில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுவது நினைத்த காரியத்தை விரைவில் நிறைவேற்றும்.

​முக்கிய குறிப்பு: தஞ்சை பெரிய கோவிலுக்குச் செல்லும் போது, ராஜகோபுரத்தைக் கடந்ததும் இடது புறம் திரும்பினால், தெற்கு நோக்கிய சந்நிதியில் இந்த அன்னை வீற்றிருப்பாள். பெரிய கோவிலின் முழு பலனையும் பெற வராகி அம்மனின் தரிசனம் மிக அவசியமானது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, May 10, 2026

திருநாவுக்கரசு நாயனார். ‘நாமார்க்கும் குடியல்லோம்! அப்பர் வரலாறு

அப்பர் வரலாறு
அப்பர்
அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திருநாவுக்கரசு நாயனார். ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்று வீர முழக்கம் செய்த மாபெரும் சிவ ஞானியான இவர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில் தோன்றினார். தந்தையார் புகழனார்; தாயார் மாதினியார். தமக்கையார் திலகவதியார். இளமை இயற்பெயர் ‘மருள் நீக்கியார்’. 

மருள் நீக்கியார் இளமையில் சமண சமயம் சார்ந்து, கலை நூல் பலவும் கற்றுத் தேர்ந்தார். தருமசேனர் என்னும் பட்டம் பெற்று, வித்தகராய் சமண சமயத் தலைமை பெற்று விளங்கினார். தமக்கையார் திலகவதியார் பலகாலும் பணிந்து விண்ணப்பித்துக்கொண்டபடி, திருவதிகை வீரட்டானேசுவரர் இவரைச் சூலைநோய் தந்து வருத்தித் தடுத்து ஆட்கொண்டார். அப்போது “கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கப்பெற்றார். அவரது செந்தமிழ்ப் பாமாலையைச் செவியாரக் கேட்ட சிவபெருமான் இவருக்குத் ‘திருநாவுக்கரசன்’ என்னும் திருநாமத்தை அருளினான்.

சமண சமயத்தை விட்டு சைவ சமயம் சார்ந்தமைக்காக வெகுண்ட மகேங்திரவர்ம பல்லவன் (கி.பி. 600-630), இவரைப் பெருந்தீயின் வெப்பம் கொண்ட நீற்றறையில் அடைத்து வைக்கும்படி தன் ஏவலாளர்களுக்கு ஆணையிட்டான். அப்போது திருநாவுக்கரசர் சிவபெருமானைத் துதித்து “மாசில் வீணையும் மாலை மதியமும்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவாய்மலர்ந்தருளினார். அந்த நீற்றறை அவருக்கு இளவேனிலும், தென்றல் காற்றும், பொய்கையும், வெண் நிலவும், வீணையோசையும் போலக் குளிர்ந்திருந்தது. 

நீற்றறையில் இட்டும் நாவரசருக்கு ஒன்றும் நேராமல் இருந்ததைக் கண்ட சமணர்கள், அவரை விஷம் கலந்த அன்னத்தை உண்ணும்படி செய்தார்கள். நஞ்சை உண்டும் அவருக்கு ஒன்றும் ஆகாததைக் கண்ட சமணர்கள் யானையை விட்டு அவரை மிதிக்கச் செய்யுமாறு அரசனுக்கு அறிவுறுத்தினார்கள். சீறி வரும் யானையைக் கண்டும் சிறிதும் அஞ்சாமல் சிவபெருமானைத் தியானித்த வாகீசர், ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை’ என்று பதிகம் பாடித் தொழுதார். யானையும் நாவரசரை வலமாக வந்து பணிந்து எழுந்தது திரும்பிச் சென்றது.

யானையின் செயலைக் கண்டு அவமானப்பட்ட சமணர்கள், வாகீசரைக் கல்லோடு கட்டிக் கடலில் விடுமாறு அரசனுக்கு ஆலோசனை சொன்னார்கள். சினம் கொண்டிருந்த அரசனும் சமணர்கள் சொல்லைக் கேட்டு அவ்வாறே செய்ய ஆணையிட்டான். கடலில் தள்ளப்பட்ட அந்த நிலையிலும் சிறிதும் மனம் தளராத திருநாவுக்கரசர், இறைவனைத் துதித்து ‘சொற்றுணை வேதியன்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். உடனே கல்லும் கடலில் மிதந்தது; நாவுக்கரசரும் கரை சேர்ந்தார்.
சமணர்களின் கொடிய செய்கைகளால் தமக்கு ஒன்றும் தீங்கு நேராமல் வெற்றி கொண்ட திருநாவுக்கரசரின் பக்திச் சிறப்பை உணர்ந்த பல்லவ மன்னன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்; தான் சமணர்களோடு சேர்ந்து, அறியாது செய்த குற்றங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினான். சுவாமிகளும் பல்லவ மன்னனைச் சிவபெருமானுடைய திருவடிகளில் பணியச்செய்து சைவ சமயத்தில் சேர்ப்பித்து அருளினார்.

திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தில் ‘பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்’ என்று பாடி ‘சூல முத்திரையும் இடப முத்திரையும் அடியேன்மேல் பொறித்து அருளவேண்டும்’ என்று சிவபெருமானிடம் விண்ணப்பித்து சூல இடப முத்திரைகளைத் தம் திருத்தோளில் பொறிக்கப்பெற்றார்.

சீகாழிப் பதிக்கு எழுந்தருளிய நாவரசர், திருஞானசம்பந்த சுவாமிகளைச் சந்தித்து அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். சம்பந்தர் அவரை எதிர் வணங்கி ‘அப்பரே!’ என்று இருகைகளையும் பற்றி எடுத்தார். அந்த நாள் முதல், திருநாவுக்கரசர் ‘அப்பர்’ என்னும்  திருப்பெயராலும் வழங்கப்பெற்றார். 

திருநல்லூரில் சிவபெருமானை வணங்கி எழுந்த அப்பரின் திருமுடிமீது பரமன் தன் பதமலரைச் சூட்டி அருளினான். உடனே, ஈசனின் இன்னருளை எண்ணி, ‘நினைந்து உருகும் அடியாரை’ எனத் தொடங்கும் திருதாண்டக மாலையைச் சாற்றி, ‘தாண்டக வேந்தர்’ என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

திங்களூரில் அப்பூதி அடிகள் என்னும் தொண்டரின் இல்லத்தில் வாகீசர் எழுந்தருளி இருந்தபோது அவர் அமுது செய்வதற்காக வாழை இலை அரிந்து வரச் சென்ற அப்பூதியாரின் புதல்வனைப் பாம்பு தீண்டி அவன் இறக்க நேரிட்டது. இதை அறிந்த நாவரசர், ‘ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை’ என்றும் தொடங்கும் பதிகத்தைப் பாடி அச்சிறுவனை மீண்டும் உயிர் பெற்று எழச் செய்து அருளினார். 

திருஞானசம்பந்தருடன் பலத் திருத்தலங்களை வழிபட்டுத் திருமறைக்காடு சென்றடைந்தார் திருநாவுக்கரசர்.  அவர்கள் இருவரும் மறைக்காடருடைய ஆலயத்திற்குச் சென்று, அக்கோவில் கதவு அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அக்கதவினைத் திறக்கப் பாடுமாறு சம்பந்தர் நாவரசரிடம் வேண்ட,  அவரும் ‘பண்ணின் நேர் மொழியாள்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கதவைத் திறக்கச்செய்தார். அப்பரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கதவினை மீண்டும் அடைக்கவும் திருப்பதிகம் பாடி அருளினார் சம்பந்தர்.

திருமறைக்காட்டில் அப்பர் சம்பந்தரோடு தொண்டு செய்து இருக்கும்போது, பாண்டிய நாட்டில்  கூன்பாண்டியன் என்னும் அரசன் சமண சமயத்தைத் தழுவி இருந்தான். அப்போது பாண்டி மாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும் சமணர்களை வெல்லும்பொருட்டு சம்பந்தரை அழைத்துவரத் தூதுவரை அனுப்பினார்கள். அது கேட்டு சம்பந்தரும் பாண்டியநாட்டிற்குப் புறப்பட, சமணர்களால் நேரக்கூடிய இடர்களை எடுத்துக்கூறி அவரைத் தடுத்தார் அப்பர் சுவாமிகள்.  தாமும் கூட வரவும் துணிந்தார். ஆனால், சம்பந்தர் அதற்கு சம்மதிக்காமல் ‘கோளறு பதிகம்’ பாடி, பாண்டிய நாட்டிற்குத் தாமே சென்றார். அதனால், அப்பர் சம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு பிறதலங்களை வணங்கச் சென்றார்.

திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தில் மிகவும் களைத்துச் சோர்வடைந்திருந்த அப்பருக்குப் பொதிச்சோறும் குடிநீரும் கொடுத்தருளினான் பரமன். திருக்கயிலையைக் கண்ணினால் காண வேண்டும் என்று விரும்பிய அப்பருக்கு திருவையாற்றிலே கயிலைக் கோலத்தில் காட்சிதந்தான். அப்போது ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே’ என்று திருத்தாணடகம் பாடி உள்ளம் குழைய உருகி ஆடினார். 

திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் எழுந்தருளியிருந்தபோது, அவரைத் தரிசிப்பதற்காகத் திருஞானசம்பந்தப் பெருமான் அந்தத் திருத்தலத்தை நோக்கிச் சென்றார். அவரை எதிர் சென்று வரவேற்கச் சென்ற அப்பர், யாரும் அறியாதபடி சம்பந்தருடைய முத்துச் சிவிகையைத் தாங்கினார். சம்பந்தர் திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசரைக் காணாமல் ‘அப்பர் எங்கு உற்றார்?’ என்று வினவ, நாவுக்கரசர் ‘தங்களைச் சுமக்கும் பேறு பெற்ற நான் இங்கு உற்றேன்’ என்றார். அதைக் கேட்டுப் பதைபதைத்த திருஞானசம்பந்தர் சிவிகையிலிருந்து இறங்கி வந்து நாவரசரை வணங்க, நாவரசரும் அவரை வணங்கி நின்றார். 

சம்பந்தரிடம் விடைபெற்றுக்கொண்ட அப்பர், மதுரை, திருவிராமேச்சுரம், திருநெல்வேலி முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு ‘புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்’ என்று  புகலூர்த்தாண்டகத்தைத் திருவாய் மலர்ந்தருளி, சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

Saturday, May 9, 2026

ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள ஸ்ரீ அம்மன் திருக்கோயில்கள்..

ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி 
பெற்ற ஸ்ரீ அம்மன் திருக்கோயில்கள்..
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
லலிதா ஸஹஸ்ர நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.

பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம்* *ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.

கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.

சென்னை-காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

த்ரிபங்க நிலையில் வீற்றருளும் இவள் மிக்க வரப்பிரசாதி.

சென்னை-நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்ரங்களும் விக்ரகங்களும் இரு புறங்களிலும் திகழ, 16 படிகளின் மேல் மகாமேருவுடன் கோலோச்சுகிறாள், ராஜராஜேஸ்வரி.

நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீசக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்.

அதில் பொங்கி வரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு பிரசாதமாகவும்* உட்கொள்ளலாம்.

திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்ரத்தை தனி சந்நதியில் தரிசிக்கலாம்.

தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வாராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கிறது.

கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் ஸ்ரீசக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது.

காசி-அனுமன் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்ரம் வைத்து வழிபடப்ப டுகிறது.

திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.
புன்னை நல்லூர் மாரியம்மனின் முன் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்தவர், மகான் சதாசிவபிரம்மேந்திரர்.

Friday, May 8, 2026

திருநீறு (விபூதி) அணியும் பெருமாள்

திருநீறு (விபூதி) அணியும் #பெருமாள் ..
எனக்கும்  முதலில்  வியப்பாக தான் இருந்தது, திருக்கண்ணபுரத்திலும் இதே போன்றதொரு நடைமுறை இருப்பதும் அது பற்றி அறிந்து முந்தைய காலங்களில் அதற்கான காரணங்களோடு பதிவு செய்துள்ளேன். 

அதேபோன்று பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றான திருக்கண்ணங்குடியிலும்  உள்ளதாக அறிந்தேன். வெகுகாலம் இதனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்த எனக்கு நேற்று அப்பகுதியை சார்ந்த அடியார் மூலம் இந்த விழா நடைபெறுவதை பற்றி  தெரியவந்தது. உடனே நானும் எனது நபருடன் இரவில் கோயில் சென்றடைந்தோம்.

 திருக்கண்ணங்குடி ஸ்ரீ தாமோதர நாராயண பெருமாள்  திருக்கோயிலில் சித்திரை  பிரம்மோற்சவம் ஏழாம் திருநாளான நேற்று இரவு பெரிய திருவாச்சியில் பெருமாள் புறப்பாடு   கண்டருளிய பின் நடு ஜாமம் மேல் (1மணி அளவில்) அலங்காரம் களைந்து , வெள்ளை நிற வஸ்திரம், பூ மாலை சாற்றி சிவ கைலாய உடல் வாத்தியம் முழங்க வேகமான நடையில் நடனமாடி தியாகராஜர் போன்று எழுந்தருளினார். 

அது சமயம் பெருமாள் சிவ ரூபமாக விபூதி, ருத்ராட்ச மாலை அணிந்து வருவதால் அதனை திருநீறு அணியும் விழாவாக பக்தர்கள் கொண்டாடியுள்ளனர், அப்போது வைணவ பட்டர்கள் உட்பட அனைவரும்  திருநீறு தரித்துக் கொள்வார்களாம். 

ஆனால் அவை எல்லாம் தற்போது படிப்படியாக குறைந்து பெருமாள் சந்தன திலகம் மட்டும் வைத்து புறப்படுகிறார். பட்டர்கள்  சமய பிடிப்பு என்று அதனை மட்டும் தவிர்த்து விடுவதாக தெரிகிறது. 

வேதத்தில் பஸ்ம தாரணம் (திரிபுண்டரமாக விபூதி தரித்தல்)  வேதத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து  சமயத்திற்கும் பொதுவானதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

( மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பெருமாள் புறப்பாட்டின் போது பதினெட்டாம்படி கருப்பசாமியிடம் உத்தரவு வாங்குவார் அது சமயம் வைணவ பட்டர்கள் தீபாராதனை பின் விபுதியையும்  பிரசாதம் ஆக நெற்றியில் இட்டுக் கொள்வர் அதனை அடியேன் பார்த்து உள்ளேன்)

உபரிசரவஸு என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கு   இணங்க பெருமாள் இங்கு ஒரு நாளிகை சிவ ரூபமாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. 

இந்த விழா எதனால் நடக்கிறது என்று அறிந்து  உணர்ந்து கொள்வதன் மூலம் இவையெல்லாம் மாறாமல் இருக்கும் என்று நம்புகிறேன். 

மந்திரம் ஆவது நீறு; 
வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; 
துதிக்கப்படுவது நீறு;

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Wednesday, May 6, 2026

அக்கினி நட்சத்திரம் சிவன் ஆலயத்தில் ஜல தாரை ஏன்❓

 #சிவபெருமானுக்கு_செய்யும்_முக்கியமான_வழிபாடு என்ன தெரிந்து கொள்வோம்.
கத்திரி நாட்களில் சிவபெருமானுக்கு
* பன்னீர்
* சந்தனம்
* இளநீர்
* ஜாதிக்காய்
* ஜாபத்திரி
* லவங்கம்
* பச்சை கற்பூரம்
* குங்குமபூ
* வெட்டிவேர்
* ஏலக்காய் 
☘️
போன்ற வாசனை திரவிய பொருட்களை அருகில் உள்ள சிவாலயத்திற்கு வழங்கவும். தங்களால் முடிந்ததை முடிந்த அளவு. 
☘️
இறைவன் அருளால் உஷ்ணம் குறைந்து மழை பொழிந்து நாட்டுமக்களும் நாமும் நண்மை அடைவோம்.
☘️
வசதி உள்ளார்கள் செம்பினால் ஆன தாரா பாத்திரம் சிவாலயங்களுக்கு வழங்கலாம்.
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.
☘️
இந்த அக்னி நட்சத்திரம் நாளில் சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.
☘️
நாளை மே 04 ( திங்கட்கிழமை ) அக்கினி நட்சத்திர காலம் தொடங்கும். மே-28ம் தேதிதான் அக்கினி நட்சத்திரம் நிவர்த்தியாகும். இந்த இடைப்பட்ட நாட்களில் வெயில் வாட்டி வதைத்து விடும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதுபோல நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் கோடை வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உண்டு. இதற்கான பூஜை முறைகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
☘️
அதாவது சூரிய பகவான் 20 டிகிரியில் இருந்து 43 டிகிரி வரை பயணிக்கும் காலமாகும். இந்த காலக் கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. அவர் குளிர்ச்சியை விரும்புபவர். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
☘️
அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.
☘️
இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
☘️
எனவே அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.
தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும். இந்த தாரா அபிஷேகத்துக்காக  பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
☘️
அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார். 
☘️
ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவ பெருமான் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டேv இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.
☘️
சைவத்தில் சிவபெருமானே.... நாம் வாழும் உலகமாக கருதப்படுகிறார். சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிர வேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.
☘️
பொதுவாக லிங்கத்துக்கு சந்தனப் பொட்டு வைத்து, "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை சொல்லி, வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தாலே பலன் கிடைக்கும் என்பார்கள். ஜலதாரை  எனப்படும் தாரா அபிஷேகம் செய்யும்போது சிவபெருமான் மனம் குளிர்ந்து அதிகமான பலன்களை வாரி வழங்குவார் என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட உண்மை.
☘️
தாரா அபிஷேகம் செய்ய, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தன விருத்தி ஏற்படும். நோய்கள் நீங்கும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் sகெட்ட சக்திகள் நம்மை அணுகாது. தீய எண்ணத்துடன் நம்முடன் பழகுபவர்கள் விலகி சென்று விடுவார்கள். பயம் நீங்கும்.
☘️
தாராபிஷேகம் தவிர பொதுவாக சிவபெருமானுக்கு  தேன் அபிஷேகம் செய்தால் தோல் நோய் குணமாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் முக்தி பெறலாம்.
☘️
இதுபோல அக்கினி நட்சத்திர நாட்களில் எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் பெறலாம் என சிவ ஆகமங்களில் ரிஷிகளினால் கூறப்பட்டுள்ளது.
☘️
1, அருகம்புல் தண்ணீரால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
☘️
2, நல்லெண்ணை அபிஷேகத்தினால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
☘️
3, பசும்பால் அபிஷேகத்தினால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.
☘️
4, தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம் கிடைக்கும்.
☘️
5, பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.
☘️
6, சர்க்கரை அபிஷேகம் துக்கத்தை போக்கும்.
☘️
7, புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் லாபம் வரும்.
☘️
8, இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.
☘️
8, ருத்ராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
☘️
9, அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
☘️
10, வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.
☘️
11, அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.
☘️
12, திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.
☘️
13, பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.
☘️
14, நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.
☘️
15, மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.
☘️
16, மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.
☘️
17, எலுமிச்ச பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும். 
☘️
18, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம்.
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியானm ஒரு நாளில் சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம். 
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக மதியம் தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைப்பதும் வழக்கத்தில் உள்ளது.
☘️
அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு  மட்டுமின்றி வறுமையில் வாடும் அவரது அடியார்களுக்கும் உதவி, சேவை செய்தால் அபரிதமான பலன்களைப் பெற முடியும்.
☘️
ஒரே ஒரு சிவனடியாருக்கு அக்கினி வெயிலை சமாளிக்க நீங்கள் குடை வாங்கி கொடுக்கலாம். கதராடை, செருப்பு, விசிறி போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்கள் மனம் குளிர்ச்சி அடைந்தால் சிவபெருமானும்
மனம் குளிர்ந்து உங்களை ஆசிர்வதிப்பார்.

Followers

எந்த அலங்காரத்தில் பழநி முருகனை தரிசனம் செய்யலாம்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்.... ...