Wednesday, June 3, 2026

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்

உலகப் புகழ்பெற்ற 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
திருமால் வராக வடிவில் ஈசனை வழிபட்ட தலமாகவும்,
சிவபெருமானே நேரில் வந்து "அவள் இவள்" என்ற சாட்சி சொன்ன இடமான, பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திருஅவளிவநல்லூர் என்ற #அவளிவணல்லூர் 
(புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,
#அவளிவள்நல்லூர்)
#சாட்சிநாதர் என்ற ஸ்ரீகம்பரிஷியுடையார்
#சௌந்தர_நாயகி என்ற 
சௌந்தர வல்லி
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது.
காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும்.
திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வராகமூர்த்தியும் (திருமால்) காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.
#கோயில்_குறிப்புகள்:

*மூலவர் : சாட்சிநாதர், தம்பரிசுடையார்.

*அம்மன்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.

*தல மரம்: பாதிரி

*தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.

*புராண பெயர்கள்: புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,அவளிவள் நல்லூர்,அவளிவநல்லூர்

ஊர்: அவளிவநல்லூர்

மாவட்டம்: திருவாரூர் 

*பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர் மற்றும் சேக்கிழார் , வள்ளலார் 

#அவளிவள்நல்லூர் தேவாரப் பாடல்கள்:

1."கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித்
தம்பரிசி நோடுசுடு நீறுதட வந்திடபம் ஏறிக்
கம்பரிய செம்பொனொடு மாடமதில் கல்வரைவி லாக
அம்புஎரிய வெய்தபெரு மான்உறைவது அவளிவள் நல் லூரே
          ...... திருஞானசம்பந்தர்

2."தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று
வீற்றினை யுடையவனாகி வெடுவெடுத்து எழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவள் இவள் நல்லூரே.
     ...... திருநாவுக்கரசு சுவாமிகள்
                                                            

3.-“ சரதத்தால்
ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி
ஓதும் அவளிவணல் லூருடை யோய்”
                ___வள்ளலார்

#பஞ்ச_ஆரண்ய தலங்கள்:

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்யத் தலங்கள் என்று ஐந்து திருத்தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து திருத்தலங்களை வரிசையாகச் சொல்வதானால்

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்காலம்
2. அவளிவணல்லூர் (பாதிரி வனம்) -  காலை.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் -  உச்சிக்காலம்.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாமம்

#தல வரலாறு:

இத்தலம் "புல்லாரண்யம்", "சட்சிநாதபுரம்", "பத்திரிவனம்" என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு, பிரம்மா, காஷ்யப  மகரிஷி, முருகன், சூரியன், அகஸ்தியர், கண்வ மகரிஷி ஆகியோர் இக்கோயிலின் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது .

மகா விஷ்ணு, வராக அவதாரத்தின் போது , அவருடைய கொம்பு உடைந்துவிட்டது . அதனால் அவர் இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு முன்பைப் போலவே கொம்புகளை அருளினார். காஷ்யப மகரிஷியும் இந்தக் கோவிலின் சிவபெருமானை வழிபட்டார். 

பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.

சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு.

பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது.

வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப்பேறு பெற்றார்.

*தல வரலாறு: 

பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.

தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

இக்கோவிலில், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டு சோழர் காலத்தவை. மற்றவை மிகச் சிதைந்துள்ளன.

முல்லைவனமாகிய 
திருக்கருகாவூரில்   
உஷக் காலத்திலும், 
பாதிரி வனமாகிய 
அவளிவ நல்லூரில்   
கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்  )   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்  ) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், குரு, சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.

*அனுஷம் நட்சத்திர நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத சருமப் பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.

*பரணி நட்சத்திரம் அல்லது பூராடம் நட்சத்திர நாளில் சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி தினையை நைவேத்தியம் கொடுத்தால் எப்பேர்பட்ட கண் பிரச்னைகளும் ஒரு கண் பார்வை பிரச்னையாக இருந்தாலும் விரைவாக குணமடையும்.

*புனர்பூசம் நட்சத்திர நாளில் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு மாமரத்தில் செய்யப்பட்ட சிறிய தொட்டில் செய்து வெண்பட்டு அல்லது மஞ்சள் பட்டுநூலால் இம்மரத்தில் கட்டி பின்பு பார்லி அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் தொடர்ந்து மூன்று மாதம் செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.

*கர்ப்பிணி பெண்களும் சுவாமிக்கு பார்லி அரிசி நைவேத்தியம் பிரசாதத்தை சாப்பிட்டுவந்தால் சுகப்பிரசவம் உண்டாகி நல்ல படியாக குழந்தை பிறக்கும்.

*இத்திருத்தலத்தில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் கணவன் - மனைவி பிரச்னை தீரும். கணவன் - மனைவி ஒன்றுபட்டு வாழ்வர்.

பௌர்ணமி நாளில் மஹா வில்வச் செடியை இக்கோயிலில் நட்டு அதனைப் பாதுகாப்பாக வளர்த்தால் வில்வம் வளர வளர உங்களின் கர்மா குறைந்து வாழ்வில் சுபகாரியங்கள் உண்டாகும்

 
*கல்வெட்டுகள்:

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசுவின் சுவாமிகளும் இக்கோயிலின் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருப்பதால், மூலக்கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம். இக்கோயில் சோழர் காலத்தில் கற்கருவியாகப் புனரமைக்கப்பட்டு, நாயக்கர் / மராட்டியர் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இக்கோயிலில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுகள் குலோத்துங்க சோழ-III ( கி.பி. 1246 – 1279) க்கு சொந்தமானது. நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்து அவளிவநல்லூரில் உள்ள சிவபெருமான் இருந்த இத்தலம் “தம்பரிசுடையார்” என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது  .

இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், மூன்றாம் ராஜராஜ சோழனின் மகனான மூன்றாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1246 – 1279) 7 -வது மற்றும் 22 -வது ஆட்சிக் காலங்களைச் சேர்ந்தவை. மேலும், மன்னரின் பெயரும் காலமும் குறிப்பிடப்படாத சில சிதைந்த, சேதமடைந்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.  கல்வெட்டின்படி, சிவபெருமான் “தாம்பரீசுதய நாயனார்” என்று அழைக்கப்பட்டார்.

மூன்றாம் ராஜேந்திர சோழனின் 7 ஆம் ஆண்டு கல்வெட்டு, யாசித்த பிறகு விளக்கேற்றியதையும் (..?), சேவையின் போது அதன்  பல பகுதிகள் சேதமடைந்ததையும் பதிவு செய்கிறது. மற்றொரு 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, நிலம் தானமாக வழங்கப்பட்டு விளக்கேற்றப்பட்ட கொடையைப் பதிவு செய்கிறது (அந்தக் கல்வெட்டு முழுமையடையாமலும் சேதமடைந்தும் உள்ளது).

மூன்றாம் இராஜராஜ சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்துஅவளிவநல்லூர் தம்பிசுதய நாயனார் கோயில்,  விநாயகர், அம்பேரிந்தப் பெருமான் (திருப்புராந்தகர் என சிவபெருமான் இருக்கலாம்), நாச்சியார், ஆட்கொண்டநாயக்கர் மற்றும் நாச்சியார், பள்ளியாருடைய நாச்சியார், ஆலியாருடைய நாச்சியார் ஆகியோரால் நிறுவப்பட்டது. அமரகோன் என்கிற தம்பிசுடையான் ஆதிச்ச தேவன்.

மார்கழி மற்றும் சித்திரைத் திருநாளைக் கொண்டாட ஏமலூருடையான் திருப்பங்குடையான் திருவந்தானின் தந்தையான கிளியுடையான் அனுக்கன் (கல்வெட்டு பல பகுதிகளிலும் சேதம் அடைந்துள்ளது) என்பவரால் வாங்கிய நிலத்தை தானமாக அளித்தார்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*செல்லும் வழி:

கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, May 25, 2026

குரு பெயர்ச்சி குருபகவானின் விசேஷப் பார்வைகள்.

12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையக் கூடிய குருபகவான், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் பொதுவாக எல்லா ராசியினருக்குமே நன்மைகள் அதிகமாகவே நடக்கும். அதேசமயம், மற்ற கிரஹங்களின் சேர்க்கை, குருபகவானின் விசேஷப் பார்வைகள் பதியும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் பலாபலன்களின் அளவு கூடும் அல்லது குறையும். இந்தப் பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
திருக் கணிதப்படி 2.6.2026 அன்று பெயர்ச்சி ஆகிறார்.  அவரது விசேஷ பார்வைகளான 5,7,9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளில் பதிகின்றன. இந்த அமைப்பின் காரணமாக எந்தெந்த ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என ஜோதிடர் கணித்துள்ளார். அதை விரிவாக பார்க்கலாம்.
 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
மேஷம்: எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி மகிழ்வு தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. வரவுக்கு ஏற்ப செலவும் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம். 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசுப்பணியில் இருப்போர் அடக்கத்தைக் கையாளவது நல்லது. அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவால் பெருமை சேரும். கலைஞர்கள், படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது நல்லது. வாகனப் பழுதினை உடனுக்குடன் சீர் செய்வது நல்லது. தூக்கமின்மை, அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்.. உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள்..!
ரிஷபம்:திட்டமிட்டு செயல்பட்டால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் தடைபடலாம். அது நன்மைக்கே என்பதை உணருங்கள். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் கைகூடும். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். புதிய உறவுகளிடம் வீண் கடுமை வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து லாபம் தரும். செய்யும் தொழிலில் நிதானமே ஏற்றம் தரும்.

பங்குவர்த்தகத்தில் பெரும் முதலீடு வேண்டாம். அரசுத்துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் வரும். அரசியலில் இருப்போர்க்கு ஆதரவு நிலைக்கும். அனுபவம் மிக்கவர்களிடம் சர்ச்சைகள் வேண்டாம். கலைஞர்கள், படைப்புது துறையினருக்கு திறமை பளிச்சிடும். மாணவர்கள் மறதிக்கு இடம்தர வேண்டாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மைகள் சேர்க்கும்.

மிதுனம்: உழைப்பினால் உயர்வுகள் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் தளராத உழைப்பினால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடனிருக்கும் யாருடனும் வீண் உரசல் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். கடினமான வார்த்தைகளால் அதை விரட்டிவிட வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்காள். பழைய கடன்களை நேரடியாகச் சென்று பைசல் செய்யுங்கள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. அரசுத்துறையில் இருப்போர்க்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கிட்டும் அறிகுறிகள் தெரியத்தொடங்கும்.

அரசியலில் இருப்போர் நாவடக்கத்தால் நல்ல பெயர் வாங்கலாம். பொது இடத்தில் நிதானம் முக்கியம். கலைஞர்கள், படைப்பாளிகள் படைப்பு சார்ந்த ரகசியங்களைப் பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குவது நல்லது. இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கண்கள், முதுகு, அலர்ஜி உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.

கடகம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.. அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பணி தேடுவோர்க்கு வாய்ப்புகள் தேடி வரும்.  குடும்பத்தில் குழப்ப சூழல் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதில் நேரான கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாகும்.
அரசுத் துறையில் இருப்பவர்கள் கையெழுத்து இடும் சமயங்களில் கவனமாக இருப்பது முக்கியம். கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். மேலிடத்திடம் வீண் ரோஷமும் கூடாது. கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். இரவில் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம்.கழுத்து, மூட்டு, பல் உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

சிம்மம்:பொறுமையுடன் செயல்பட்டால், பெருமைகள் கூடும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். பலகாலக் கனவுகள் கைகூடி வரும் அறிகுறிகள் தெரியும். தேவையற்ற படபடப்பு தவிர்ப்பது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் கைகூடிவரும். பெற்றோர் பெரியோர் உடல்நலம் சீராகும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சிப்பாதை தெரியத்தொடங்கும்.
கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் தவிருங்கள். அரசுத்துறையில் இருப்பவர்கள்  அவசரம் அலட்சியம் தவிர்ப்பது அவசியம். அரசியலில் இருப்பவர்கள் யாருக்கும் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம். அனுபவம் மிக்கவர்களிடம் சர்ச்சை தவிருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். மாணவர்கள்  பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டவே வேண்டாம். இடுப்பு, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு சிறப்பான நன்மை தரும்.
கன்னி: சிந்தித்து செயல்பட்டால், சீரான நன்மைகள் ஏற்படக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் வந்துசேரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக்கொடுத்துப் போனால் நிம்மதி நிரந்தரமாகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழிலில் நேரடி கவனமும் முயற்சிகளும் முக்கியம். பிறரை நம்பி பெரும் முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுத்துறையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். புறம்பேசும் நபர்களைப் புறம் தள்ளுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் அரசு வழிப் பாராட்டு பரிசுகள் பெற வாய்ப்பு உண்டு. செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை கவனமாகக் கடைபிடியுங்கள். மாணவர்கள் இரவில் நெடுநேரம் விழித்திருக்க வேண்டாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். மன அழுத்தம், நரம்பு, தலைவலி உபாதைகள் வரலாம். விநாயகர் வழிபாடு, விசேஷ நன்மை தரும்.

துலாம்: திட்டமிட்டு செயல்பட்டால் தித்திக்கும் காலகட்டம். பணியிடத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும்.  அதேசமயம், யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். இப்போதைய உழைப்பே எதிர்கால ஏற்றமாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும்.அநாவசிய செலவுகளைத் தவிருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். புதிய அறிமுகங்களை நம்பி பெரிய முதலீடுகள் வேண்டாம்.

அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றங்கள் தொடர்ச்சியாகும். தேவையற்ற சகவாசத்தை உடனடியாக உதறுவது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் மேலிடத்திடம் வீண் ரோஷப்பட வேண்டாம். வாக்குறுதி எதுவும் தரும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு அமோகமான காலகட்டம். சிறிய வாய்ப்பானாலும் சின்சியராகச் செய்யுங்கள். மாணவர்கள் சோம்பலுக்கு இடம்தரவேண்டாம். இரவு நேரப் பயணத்தில் இடைவழியில் இறங்குவதைத் தவிருங்கள். ஒற்றைத் தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு வாழ்வைத் துளிர்க்கச் செய்யும்.

விருச்சிகம்: ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். சிலருக்கு எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். உங்கள் வாக்கில் இனிமை இருந்தால், அது நிலைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் முன் நின்று நடத்துவீர்கள். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் சேதாரம் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் முக்கியம். அரசுத்துறையில் இருப்போர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும்.

மேலிடத்தின் ஆதரவால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். அரசியலில் இருப்போர் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. சிலருக்கு பதவி, பொறுப்பு மாற்றங்கள் வரலாம். கலைஞர்கள், படைப்பாளிகள் உழைப்புக்கு ஏற்ற உயர்வினைப் பெறுவீர்கள். புதிய நட்புகளிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு மதிப்பு மதிப்பெண் உயரும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். வயிறு, பல், சளித்தொந்தரவு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு வாழ்வை பிரகாசிக்கச் செய்யும்.

தனுசு: தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அதைத் தலைகனம் ஆக்காதவரை உயர்வுகள் தொடரும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். வீண்  தர்க்கமும் வேண்டாத வாக்குறுதியும் யாரிடமும் வேண்டாம். மேலதிகாரிகள் தரும் பொறுப்பை நேரடி கவனத்துடன் செய்யுங்கள். எதிர்பாராத மாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் வசந்தம் வீசும். சிலருக்கு புதிய வாழ்க்கை அமைவதற்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலனில் முன்னேற்றம் உருவாகும். குழந்தைகளால் பெருமை உண்டு. வரவு அதிகரித்தாலும் செலவுகளும் சேர்ந்து வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் கவனம் தேவை.

அரசுத்துறையில் உள்ளோர் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாட்டுப் பயண வாய்ப்பு தடைபடலாம். அது நன்மைக்கே. அரசியலில் உள்ளோர் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். முகமூடி நட்புகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்கள் மறதியைத் தொலைப்பது முக்கியம்.  வாகனத்தில் வேகம் கூடாது. ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகள், ஒற்றைத் தலைவலி வரலாம்.  பழநி முருகன் வழிபாடு பலவிதத்திலும் நன்மை தரும்.
மகரம்: மேன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றமும் ஏற்றமும் கைகூடி வரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு உயர்வுகளுக்கு உத்தரவாதமாகும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். உங்கள் வாக்கில் நிதானம் இருந்தால், அது நிலைக்கும். வாரிசுகளால் பெருமை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும்.தரல் பெறலை நேரடியாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி நிலையாகும்.
அயல்நாட்டு வர்த்தகம் லாபம் தரும். அரசியல் துறையில் உள்ளோர் திடீர் பதவி, பாராட்டுகளைப் பெற வாய்ப்பு உண்டு. மேலிடத்துக்கு எதிரான வார்த்தைகளை கனவிலும் பேச வேண்டாம். அரசியல் துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்போர் தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் எதிர்கால ஏற்றத்திற்கான அஸ்திவாரம் இட இப்போது வாய்ப்பு அமையலாம். வாகனத்தில் கவனச் சிதறல் கூடாது. அடிவயிறு, முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு, மங்களங்கள் 
கும்பம்:பொறுப்புடன் செயல்பட்டால் பெருமைகள் நிலைக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் நிச்சயம் வரும். உயரதிகாரிகளிடம் வீண் உரசல் வேண்டாம். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். இடமாற்றம், பதவி மாற்றத்தில் பொறுமை முக்கியம். பொறுப்புகள் எதையும் தட்டிக்கழிக்க வேண்டாம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். வாரிகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துகளில் பிடிவாதம் வேண்டாம். செய்யும் தொழிலில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.

பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட்டில் பெரும் முதலீடுகள் வேண்டாம். அரசியல் துறையில் இருப்போர் சிலருக்கு பதவி, பொறுப்புகள் மாறலாம். வீண் ரோஷத்தால் அதைத் தவிர்க்க வேண்டாம். எதிர்காலம் நிச்சயம் ஏற்றமாகும். அரசுத்துறையினர் கவனமாகச் செயல்படுவது நல்லது. கோப்புகளில் கையெழுத்திடும் முன் கவனமாகப் படியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிகளால் முன்னேறலாம். அயல்நாட்டு வாய்ப்பில் உடன் வருவோரிடம் கவனமாகப் பழகுங்கள். மாணவர்கள் மனம்போல உயர்வுகள் வரும். வாகனத்தை ஓட்டுவதில் வித்தைகாட்டல் கூடாது. கழுத்து, முதுகு, அடிவயிறு, தோல் உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

மீனம்: முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில்  திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். எந்த சமயத்திலும் வீண் ரோஷம் வேண்டாம்.  மேலதிகாரிகளிடம்  தர்க்கம்  தவிருங்கள். யாருடைய குறையையும் விமர்சிப்பது கூடவே கூடாது. பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் ஏற்பது நல்லது. குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளைக் கேட்டால் சுபகாரியத் தடைகள் நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பணவரவை சேமிக்கப் பழகுங்கள். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். தேவையற்ற வர்த்தகக் கடன்களைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளோர் அடக்கமான செயல்களால் முன்னேறலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

காலுக்குக் கொலுசு கேட்ட திலலிதாம்பிகை திருமீயச்சூர்

*காலுக்குக் கொலுசு கேட்ட லலிதாம்பிகை*
                                      
லலிதாம்பிகை தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.  

திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். 

தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.

பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். 

அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார்.

1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. 
ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது.

திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாய் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார்.

மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். 

யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.

பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். 

ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை.

இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது.

அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார்.

தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.

திருமீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார். 

தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார்.

ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள். 

கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார்.

அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில்தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். 

அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.

ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர். 

பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். 
                                  -  வேலாயுதம் செ 
அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள்.

ஆதிபராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறாள்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, May 21, 2026

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர்!
பக்திக்கும் இறைவனுக்கும் உள்ள அழகான பிணைப்பை விளக்கும் ஒரு தலம் உண்டென்றால், அது திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் இது மிக முக்கியமான தளம்.

வரலாறும் சிறப்பும்: 

சிவபெருமானின் 'வேடுபறி' திருவிளையாடல்
இந்தக் கோயிலின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், சேரமான் பெருமாளிடம் பொன்னும் பொருளும் பெற்றுக்கொண்டு இவ்வழியே சென்றார். சுந்தரரின் பாடலில் மகிழ்ந்த சிவபெருமான், அவரோடு ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.

தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி, சுந்தரரிடம் இருந்த செல்வங்களை அபகரிக்கச் செய்தார். மனம் நொந்த சுந்தரர், இக்கோயில் இறைவனிடம், "எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே!" (பொருளைப் பறி கொடுக்கவிட்டு இங்கு ஏன் இருக்கிறீர்கள்?) என்று கோபமாகவும் உருக்கமாகவும் பாடினார். அவர் பக்தியில் மகிழ்ந்த இறைவன், பறிபோன பொருட்கள் அனைத்தையும் மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார்.

பலன்: 

இழந்த சொத்துக்கள், செல்வம் மற்றும் பதவிகளை மீண்டும் பெற விரும்புவோர் வழிபட வேண்டிய மிகச்சிறந்த தலம் இது.
கோயிலின் முக்கிய சிறப்பம்சங்கள்:
முருகன் வழிபட்ட தலம்: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க, முருகப்பெருமான் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனாலேயே இத்தலம் 'திருமுருகன்பூண்டி' என அழைக்கப்படுகிறது.

மேற்கு நோக்கிய சன்னதி: பொதுவாகக் கோயில்கள் கிழக்கு நோக்கி இருக்கும், ஆனால் இங்கு சுவாமியும் அம்பாளும் மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

மன நிம்மதி தரும் தீர்த்தம்: 

இங்குள்ள 'பிரம்ம தீர்த்தம்' மிகவும் விசேஷமானது. மனக்குழப்பம், சித்த பிரம்மை மற்றும் தீராத மனக்கவலைகளால் அவதிப்படுபவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால் உடனடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிற்பக்கலை அதிசயம்: சோழர் மற்றும் பாண்டியர் காலத்துக் கட்டிடக்கலைக்குச் சான்றாக இக்கோயில் திகழ்கிறது. குறிப்பாக 16 கால் மண்டபமும், நந்தி தேவர் சிலையும் காண்போரை வியக்க வைக்கும்.

வழிபட வேண்டிய நேரம்:
காலை 5:30 மணி முதல் 12:45 மணி வரை.

மாலை 3:30 மணி முதல் இரவு 8:15 மணி வரை.

அமைவிடம்:


திருப்பூர் - அவினாசி சாலையில், திருப்பூரில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

உங்கள் வாழ்வில் இழந்த சந்தோஷமும், செல்வமும் மீண்டும் கிடைக்க ஒருமுறை இந்தத் திருத்தலத்திற்குச் சென்று வாருங்கள்!

 ஓம் நமச்சிவாய!
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தெய்வங்களின் வாகனங்கள்பற்றிய தகவல்கள்...

தெய்வங்களின் வாகனங்கள்
பற்றிய தகவல்கள்...
இந்துப் புராணங்களில் கடவுள்கள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரமும், அவர்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு வாகனமும் கூட ஒரு ஆழமான அர்த்தத்தையும் வாழ்க்கைப் பாடத்தையும் நமக்கு உணர்த்துகிறது. பக்தர்களை காக்கவும், தீய சக்திகளை அழிக்கவும் மட்டுமல்ல, மனிதனின் உள்ளார்ந்த குணங்களை மாற்றவும் இவை உதவுகின்றன.

அப்படியான 9 முக்கிய தெய்வங்களின் வாகனங்களின் வரலாறும், அதன் பின்னாலுள்ள ஆன்மீக ரகசியங்களையும் விரிவாகப் பார்ப்போம்.

1. துர்கை அம்மன் – சிங்கம் 

அசுரர்களை அழிக்க உருவெடுத்த அம்பாள், ஒருமுறை கடும் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு சிங்கம் அவரை சுற்றி பாதுகாப்பாக இருந்தது. அதன் உண்மை விசுவாசமும் வீரமும் அம்பாளை கவர்ந்தது.
அதனால் அந்த சிங்கத்தை தன் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
அர்த்தம்: பயத்தை வெல்லும் தைரியம் – நம் உள்ளத்தில் இருக்கும் அச்சங்களை அடக்க வேண்டும்.

2. சரஸ்வதி – அன்னப்பறவை 

அன்னப்பறவை பாலையும் தண்ணீரையும் பிரித்து உணரும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
அர்த்தம்: நல்லது–கெட்டது என பிரித்து அறியும் அறிவு.
அதனால் அறிவின் தெய்வமான சரஸ்வதி, அன்னத்தைத் தனது வாகனமாக எடுத்துக் கொண்டார்.

3. மகாலக்ஷ்மி – ஆந்தை 

இருள் சூழ்ந்த நேரத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தையின் திறன், செல்வத்தின் பாதுகாப்பைக் குறிக்கிறது.
 அர்த்தம்: செல்வம் இருந்தாலும் விழிப்புணர்வு அவசியம்.
அதனால் லக்ஷ்மி தேவிக்கு ஆந்தை வாகனமாக அமைந்தது.

4. சிவபெருமான் – நந்தி 

நந்தி பகவான் கடும் தவம் செய்து சிவனின் அருளைப் பெற்றார்.
அர்த்தம்: பக்தி, பொறுமை, ஒழுக்கம்.
நந்தி எப்போதும் சிவனை நோக்கி இருப்பது, மனம் இறைவனை நோக்கி நிலைத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. மகாவிஷ்ணு – கருடன் 

கருடன் ஒரு அதிசய சக்தி வாய்ந்த பறவை.
அர்த்தம்: வேகம், உயர்ந்த சிந்தனை, தீயவற்றை வெல்வது.
அதனால் விஷ்ணுவின் வாகனமாக கருடன் விளங்குகிறார்.

6. விநாயகர் – மூஞ்சூரு (எலி) 

ஒரு அகந்தை கொண்ட உயிர், விநாயகரிடம் அடைக்கலம் அடைந்தபோது, அவன் எலியாக மாறினான்.
 அர்த்தம்: ஆசைகள் சிறியதாகத் தோன்றினாலும், அவை பெரிதாகி வாழ்க்கையை ஆளலாம்.
அதை கட்டுப்படுத்தும் சக்தி விநாயகர்.

7. காலபைரவர் – நாய் 

நாய் விசுவாசத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடையாளம்.
 அர்த்தம்: எச்சரிக்கை, காவல், நேர்மை.
அதனால் காலபைரவரின் வாகனமாக நாய் அமைந்தது.

8. முருகன் – மயில் 

முருகன் அசுரர்களை வென்றபோது, மயில் அவருக்குப் பரிசாக கிடைத்தது.
 அர்த்தம்: அகந்தையை அழித்து, அழகையும் ஆன்மீகத்தையும் இணைத்தல்.
மயில் தனது நச்சை கட்டுப்படுத்துவது போல, மனிதனும் தனது குறைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

9. இந்திரன் – ஐராவதம் 

பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த வெள்ளை யானை ஐராவதம்.
 அர்த்தம்: ஆட்சிசக்தி, பெருமை, பொறுப்பு.
இந்திரனின் வாகனமாக அது விளங்குகிறது.

 ஆன்மீகப் பாடம்

இந்த வாகனங்கள் வெறும் சின்னங்கள் அல்ல.
ஒவ்வொன்றும் நமக்கு ஒரு வாழ்க்கை பாடம்:

தைரியம் (சிங்கம்)
அறிவு (அன்னம்)
விழிப்புணர்வு (ஆந்தை)
பக்தி (நந்தி)
உயர்வு (கருடன்)
ஆசைக் கட்டுப்பாடு (எலி)
விசுவாசம் (நாய்)
அகந்தை ஒழிப்பு (மயில்)
பொறுப்பு (யானை)

நாம் எந்த குணத்தை வளர்க்கிறோம் என்பது தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஈரோடு பள்ளிபாளையம் - நவபிருந்தாவனம் :

ஈரோடு பள்ளிபாளையம் - நவபிருந்தாவனம் :
ஸ்ரீ பாதராஜர் மடத்தின் நவ பிருந்தாவனம் தமிழகத்தின் ஈரோடு அருகாமையில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஒன்பது பேர் ஒரே இடத்தில் சமாதி கொண்டருளும் அற்புத திருத்தலம். உண்மையில் மிகவும் அமைதியான இடம்.

எத்தனையோ சித்தர்களும் மகான்களும், யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத பூமி. அந்தவகையில் அண்மை கண்ட அழகிய அமையான ஜீவசமாதியை உங்களுடன்பகிர்வதில் பெருமகிழ்வுருகிறேன்.

அமைவிடம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் சாலையில் வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில்கரைகாண முடியாத பல அற்புதங்கள் கொண்ட நவ பிருந்தாவனம் ஸ்ரீ பாதராஜ மடம் அமைந்துள்ளது. இப்பகுதிமக்களால் சந்தியாசி மடம் என்றும் முளபாகல் மடம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ நவவிருந்தாவனம்

காலம்:

கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது அல்லது 300 வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஆய்விற்குரியது.

ஸ்ரீபாதராஜர்:

ஸ்ரீ பாதராஜ மடத்தின் நிறுவனர் ஸ்ரீ பாதராஜர் ஆவார், இவர்கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர், லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும். சேஷகிரியாச்சார் கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளுபாகல் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம்அமைந்துள்ளது கி.பி 1486 ல் பிருந்தாவனஸ்தரானார். இவ்விடம் நரசிம்மதீர்தம் என அழைக்கப்படுகிறது. இந்த முளபாகல்மடம் தான் நாம் பார்க்க உள்ள நவபிருந்தாவனத்தின் தலைமை இடமாக கருதப்படுகிறது.

ஈரோடு நவ பிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது மகான்கள் பின்வருமாறு:

1.ஸ்ரீ லக்ஷ்மி மனோகர தீர்த்தரு (1670-1708)

2.ஸ்ரீ லக்ஷ்மிபதி தீர்த்தரு (1700-1715)

3.ஸ்ரீ ஸ்ரீநிதி தீர்த்த (1781-1787)

4.ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தரு (1772-1795)

5.ஸ்ரீ சுதிநிதி தீர்த்தரு (1888-1908)

6.ஸ்ரீ ஸ்ரீ மேதாநிதி தீர்த்தரு (1908-1926)

7.ஸ்ரீ தேஜநிதி தீர்த்தரு (1770-1806)

8.ஸ்ரீ தபோநிதி Increment (1806-1838)

9.ஸ்ரீ யசோநிதி தீர்த்தரு 

பாதராஜமடத்தின் 36 வது மடாதிபதியாக 1987 முதல் 23 ஆண்டுகாலம் நிர்வாகம் செய்தவர் ஸ்ரீவிக்ஞான நிதி தீர்த்தர் ஆவார். இவர் பொறுப்பேற்ற பின்னரே நவபிருந்தாவனத்தில் அன்றாட பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்புற நடைபெறுகிறது.ஸ்ரீ விக்ஞான தீர்த்த சுவாமிகள் 95வது வயதில் கர்நாடக மாநிலம்முளுபாகலில் உள்ள நரசிம்ம தீர்த்ததில் பிருந்தாவனஸ்தராகி (ஜீவசமாதி)விட்டார்.

பள்ளிபாளையத்தில் நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற நவநாயகர்கள் :

1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர்:

கர்நாடகாவில் பிறந்த இவர் கி.பி 1670முதல் 1708 வரை வாழ்ந்தவர். ஸ்ரீ பாதராஜர் மடத்தின் 8வது பீடாதிபதியாவார். பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்து வேததர்மம், ஒழுக்கம் பக்தி ஆகியவற்றை மக்களுக்கு போதித்தவர். இவர் ஒசூர் பகுதி யாத்திரையின் போது கடும் பஞ்சம் நிலவுதை கண்டு மக்கள் குறையால் மனமுருகி ஸ்ரீ ஆஞ்சநேயவிக்கிரகத்துடன் ஓர் ஆலயத்தை ' அமைத்து ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க கடும் மழை பெய்து அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்ததாக வரலாறு. சர்வதாரி வருடம் தைமாதம் பெளர்ணமி தினத்தில் முதல் ஜீவசமாதியாக நவ பிருந்தாவனத்தில் முதல் பிருவனஸ்தராகிவிட்டார்..

2. ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர்:

இவர் ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தரின் சீடர் ஆவார். திரிகால ஞானி ஸ்ரீ ஹரி கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வியாதிகளில் இருந்து காத்து அருளியவர் இவர்

3.ஸ்ரீ நிதி தீர்த்தர்:

ஸ்ரீ பாதராஜ அஷ்டாகம் என்ற ஹ்தோத்திரத்தை உலகிற்கு உணர்த்திய கொண்டவர் மகான்மகாவிஷ்ணுவிடம் அதீத பக்தி கொண்டவர்.

4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்:

ஜபதவ அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தவர் இவர் தியானத்தை மெச்சி இறைவனேஸ்ரீ பாண்டுரங்க விட்டல சுவாமி தம்பதி சமேதாராக காட்சி அளித்தவர், 14வது பீடாதிபதியானவர் வித்வான், எழுத்தாளர், இலக்கியவாதியாவார், மைசூர் மகாராஜவிற்கு தர்மநெறிப்படி மன்னர் ஆட்சி செய்யும் நெறிமுறைகளை உபதேசித்த மகான் இவரை வணங்குபவர் கல்வியில் சிறப்பர்

5. ஸ்ரீ சுதிநிதிதீர்த்தர்:

23வது மடாதிபதியாவார். மத்வ சிந்தாந்தத்தின்

உயர்ந்த கிரதமான ஸ்ரீ மந்நியாயசுதா என்ற கடினமான கிரந்தத்தை மிக எளிய முறையில்அநேகர்க்கு கற்பித்த மகான். தன் வாழ்நாழ் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நீராடி ஸ்ரீ கிருஷ்ண பகவானை பூஜித்து வந்த சிவ்ய புருஷர்.

6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர்:

இவர்ஸ்ரீ சதிநிதி தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றவராவார். மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் அருளிய சந்திரிகா என்ற கிரந்தத்தின் மூலப்பிரதியை கைப்பட எழுதியவர், விலைமதிக்க முடியாத இவரின் கையெழுத்துப்பிரதி மைசூர் ஓரியண்டல் நூலகத்தில் அமைந்துள்ளது. ஆந்திராவில் யாத்திரையின் போது புலி வர பயப்படாமல் அபிஷேக தீர்த்தம் கொடுத்து மந்திர அட்சத்தையால்புலியை ஆசிர்வதித்தாக வரலாறு

7.ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர்:

இராமநாதபுரம் மாவட்டம் இளையான் குடி வட்டத்தை சேர்ந்தவராவார். துவைத சிந்தாந்த கொள்கையை கடைபிடிப்பதே உண்மையான முக்கிநிலை என்று உணர்ந்தவர். இவர் ஸ்ரீ லட்சுபதி தீர்த்தர் காலத்தில் சேவை புரிந்தவராவார்

8.ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்:

ஸ்ரீதோஜோநிதி தீர்த்தரின் சீடர் தம் 37 வது வயதில் துறவறம் பூண்டு கி.பி 1806 முதல் 1838 வரை ஓடப்பள்ளி ஸ்ரீ பாதராஜ மடத்தை நிர்வாகம் ப்தவராவார்

9.நீயசோநிதி தீர்த்தர்:

கி.பி1840ஆம் ஆண்டு தை நம் வளர்பிறை தசமியன்று தம் குரு ஸ்ரீ பாநிதி தீர்த்த மகான் அருகில் பிருந்தாவனம்.

தொடர்பு முகவரி: 

நவ பிருந்தாவன்
பள்ளிபாளையம்
வசந்த நகர்
ஈரோடு


காலை 11 மணிக்குள்ளாக வந்தால் மட்டுமே தரிசிக்க இயலும். ஒருமுறை தரிசிக்கவும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, May 20, 2026

எந்த அலங்காரத்தில் பழநி முருகனை தரிசனம் செய்யலாம்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்....
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. 

அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை.

 மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

அதாவது முடி முதல்,அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான்.

இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். 

பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். 

ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையை சுற்றி  (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத)எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. 

அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு  தகவல் உண்டு.

தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில்
(கற்சிலை) தரிசிக்க வேண்டுமா? 
எது ‌சிற‌ந்தது?

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். 

முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம்.

வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 

20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். 

தீராத நோய்,என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. 

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். 

நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்

உலகப் புகழ்பெற்ற  தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், திருமால் வராக வடிவில் ஈசனை வழிபட்ட தலமாகவும், சிவபெருமானே ...