Showing posts with label #thanam #Dharmam #annadhanam #aadaithhanam #arichidhanam #manjaldaanam #tanneerthanam #Hindu India #Tamil Nadu. Show all posts
Showing posts with label #thanam #Dharmam #annadhanam #aadaithhanam #arichidhanam #manjaldaanam #tanneerthanam #Hindu India #Tamil Nadu. Show all posts

Tuesday, December 19, 2023

தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்துகொள்ள.....

_தானங்களும் அதன் பலன்களும்....._


மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.

அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.

ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.

எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.
 தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.

நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்

தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.

கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி

பால் தானம் – சவுபாக்கியம்

பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி

தயிர் சாதம் / பால் சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.

தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.

வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.

சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்

பூமி தானம் – இகபரசுகங்கள்

வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி

கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்

குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி

சந்தனக்கட்டை தானம் – புகழ்

விதை தானம் – வம்ச விருத்தியை தரும்

மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.

பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.

தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும்.

பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

 அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அத்தகைய தானங்கள் பல வகைப்படும்.
கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.

கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.

பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம்.வைகுண்ட வாசம் உண்டு.

குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.

ஆலயத்துக்கு யானை தானம் – இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.

குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –வாயுலோகத்தில் வாழ்வார்.

தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

பயன் கருதாது தானம் – மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் – நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.

சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.

தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.

நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பபெறுவோம. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...