Showing posts with label ashtmi Bhojai #Vallabhbhai Ashtami #Kala bhairavar #Ananda Kala Bhairava #Sivan temple #Hindu temple #Cuddalore #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label ashtmi Bhojai #Vallabhbhai Ashtami #Kala bhairavar #Ananda Kala Bhairava #Sivan temple #Hindu temple #Cuddalore #Tamil Nadu #India. Show all posts

Thursday, July 3, 2025

வளர்பிறை அஷ்டமி விரத பூஜை


🌹வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 
******************************************
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட  சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. 
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெரு மான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத் து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக் கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

🌹பைரவரை வணங்கினால் நன்மைகள்
*************************************************
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு கால த்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர் பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவ ப்பெருமானை வழிபடலாம். 

நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவா க்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கு ம், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். 

அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, அக்கா, அண்ண ன், தம்பி, தங்கை, கணவன், மனை வி இவர்க ளிடையே இருந்து வரும் காழ்ப்பு ணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.

🌹பைரவரின் அருள்
*************************
சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவ ரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமை யான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

🌹சனியால் பாதிப்பு இருக்காது
**************************************
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக் கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தா ல் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பிரமாணம் பெற்றுக் கொண்டார்

🌹மனம் தெளிவடையும்
*****************************
அஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசியி னர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை /தொழிலை அடைவார்கள். கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்டம ச்சனியால் தடு மாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.

🌹ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
****************************************
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெரு மானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவல கத்திலோ அல்லது வணிக நிறுவனங்களி லோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறுவாரங்கள் 48 நாட்கள் விரதமி ருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷ ண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

🌹தைரியம் பிறக்கும்
**************************
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்க ளுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். 

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்து ம் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர் கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபா டு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.

🌹பொன்னும் பொருளும் கிடைக்கும்
*********************************************
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திரபிரபை சூடி திருக்கழுத்தில் நாகபர ணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர் ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந் து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவ பெருமானின் இடையை தழுவியவா று மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத் துட ன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னை யும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்..

♦️ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
♦️ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ...
♦️ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி....
🌹02.07.2025... நேசமுடன் விஜயராகவன்....
******************************************
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட  சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. 

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெரு மான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத் து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக் கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

🌹பைரவரை வணங்கினால் நன்மைகள்
*************************************************
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு கால த்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர் பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவ ப்பெருமானை வழிபடலாம். 

நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவா க்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கு ம், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். 

அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, அக்கா, அண்ண ன், தம்பி, தங்கை, கணவன், மனை வி இவர்க ளிடையே இருந்து வரும் காழ்ப்பு ணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.

🌹பைரவரின் அருள்
*************************
சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவ ரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமை யான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

🌹சனியால் பாதிப்பு இருக்காது
**************************************
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக் கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தா ல் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பிரமாணம் பெற்றுக் கொண்டார்

🌹மனம் தெளிவடையும்
*****************************
அஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசியி னர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை /தொழிலை அடைவார்கள். கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்டம ச்சனியால் தடு மாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.

🌹ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
****************************************
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெரு மானை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவல கத்திலோ அல்லது வணிக நிறுவனங்களி லோ வைத்தால் வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறுவாரங்கள் 48 நாட்கள் விரதமி ருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷ ண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

🌹தைரியம் பிறக்கும்
**************************
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்க ளுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். 

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்து ம் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர் கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபா டு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.

🌹பொன்னும் பொருளும் கிடைக்கும்
*********************************************
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திரபிரபை சூடி திருக்கழுத்தில் நாகபர ணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர் ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந் து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவ பெருமானின் இடையை தழுவியவா று மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத் துட ன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னை யும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். வளர்பிறை அஷ்டமியில் வழிபட துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...