Showing posts with label #Sivan temple #Vishnu temples #Hindu temples #Coimbatore #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Sivan temple #Vishnu temples #Hindu temples #Coimbatore #Tamil Nadu #India. Show all posts

Sunday, September 22, 2024

சிவபெருமான் சுயம்பு வடிவமாகவும், சிவலிங்க வடிவமாகவும் நமக்கு காட்சியளிக்கிறார்....

கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவின் மிக உயர்ந்த சிகரம் (1615 மீ) மேல்முடி. ஒரு நாள் மலையேற்றத்திற்கு ஒரு நல்ல இடம். 
புரட்டாசி மாதத்தில் வனத்துறை முன் அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

கோயில் சிகரத்தை அடைய இரண்டு வழிகள் உள்ளன
1. பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக காட்டு பகுதியில் நடந்து சென்று கோவிலை பார்க்கலாம்.
வழிப்பாதை மேடு பள்ளங்களாக, சமதளமாக செல்லும்.
2. தடாகம் ஆனைகட்டி மலை பகுதி வழியாக இந்த கோவிலை சென்று பார்க்கலாம்.இந்த வழிப்பாதை செங்குத்தாக செல்லும் மற்றும் சீக்கிரத்தில் அரங்கநாதர் கோவிலை அடைந்து விடலாம்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேல்முடி ரங்கநாதர் கோவில், கடல்மட்டத்திலிருந்து, 4100 அடிகளுக்கு மேல் உள்ளது. கோவையில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சின்னத்தடாகம், கோவனுார், பாலமலை வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சென்று கொண்டுள்ளனர். இயற்கை வளமும், மூலிகை செடிகளும், சுத்தமான காற்றும் நிறைந்த அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் பெருமாள். இங்கு, ஆஞ்சநேயர், முருகன், சிவன்,அம்மன், கருடாழ்வார், விநாயகர், சப்த கன்னியரை பக்தர்கள் வழிபடுகின்றனர். 1973ம் ஆண்டில் தான் கோவிலுக்கு சுவர் எழுப்பி, ஸ்தலம் அமைத்து, 1977ல் கும்பாபிஷேகம் நடந்தது.மேல்முடி ரங்கநாதர் கோவில் பராமரிப்பு, பூசாரிகளை தேர்ந்தெடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த, கோவில் வழிபாட்டு கமிட்டி, செயல்பட்டு வருகிறது. தற்போது, சின்னத்தடாகம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய உள்ளூர்களிலும், திருப்பூர், சென்னை என, வெளி மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது.

மேல்முடி அரங்கநாதர் கோவிலில் இருந்து இடது புறமாக நாடுகண்ட போலி சிவன் மலைக்கு வழிப்பாதை செல்லும். சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு பாதைகள் பிரியும்.வலது புறமாக சென்றால் அரங்கநாதரின் மூலஷ்தானத்தை அடையலாம்.

ஆம்..இங்கிருந்து தான் சுயம்பு அரங்கநாதரை எடுத்துச் சென்று, கோவில் எழுப்பி கீழே பக்தர்கள் வணங்குகிறார்கள்.அங்கிருந்து இடதுப்புறமாக 1 மணி நேரம் மலை ஏறினால் நான் ஆகாயத்தில் இருக்கும் ஈசனை அடையலாம்.

செல்வது அவ்வளவு சுலபம் இல்லை.மலை சற்று செங்குத்தாகவே செல்லும்..ஆனால் சுற்றியுள்ள இயற்கை அழகுக் காட்சிகள் நமக்கு கலைப்பே தெரியாமல் அவரிடம் நம்மை சரணடைய செய்துவிடும்.

மலையின் உச்சியில் இருந்து நாம் பார்க்கும் போது கோவை மாவட்டத்தின் அழகையும்,அருகே உள்ள குருடி மலை,பவானி சாகர் அணை மற்றும் ஓதி மலை என அனைவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலைக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய மலை இந்த மேல்முடி - நாடுகண்ட போலி மலை என்பதில் ஆச்சர்யம் இல்லை.

இங்கு சிவபெருமான் சுயம்பு வடிவமாகவும், நம்மவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்க வடிவமாகவும் நமக்கு காட்சியளிக்கிறார்.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...