Showing posts with label # Kula Deivam #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label # Kula Deivam #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Monday, October 9, 2023

குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும்.

_குல தெய்வ கோயிலிலிருந்து இதை ஒரு கைப்பிடி மண் கொண்டு வந்தால், கஷ்டமெல்லாம் காணாமல் போகும்!**_
கிரக நிலைகளின் பெயர்ச்சி, காலத்தின் கட்டாயம், விதியின் சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக குடும்பத்திற்கு வரக் கூடிய துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே வரும்.

இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது என்னவோ நம்முடைய குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் தான். குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும்.

மாதந்தோறும் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. அப்படி மாதந்தோறும் செல்ல முடியாதவர்கள், 2 மாதங்களுக்கு ஒரு முறை, 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு 3, 4 முறை என்று சென்று வழிபாடு செய்ய வேண்டும். குல தெய்வ வழிபாடு ஒன்று பெரிய கஷ்டம் இல்லையே. வீட்டில் கஷ்டம், துன்பம் துயரம் என்று எதுவும் வராமல் இருக்க குல தெய்வ கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும். அது என்ன என்றால், ஒரு கைப்பிடி மண் தான். குல தெய்வ கோயிலில் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி இருவரும் சேர்ந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து அதனை மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ள வேண்டும்.

அதனை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொள்ள வேண்டும். ஒரு செம்புத் தகட்டில் உங்களது குல தெய்வத்தின் பெயரை எழுதி சின்ன செம்பு தகடை இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணியிலேயே முடிச்சு போட்டு கட்டி வீட்டில் ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிட வேண்டும். அதாவது உயரமான இடத்தில் வைத்து விட வேண்டும். தினந்தோறும் பூஜை செய்யும் போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி, தீபாராதனை காண்பிக்க வேண்டும்.

எப்போதெல்லாம் குல தெய்வ கோயிலுக்கு செல்கிறீர்களோ அப்போதெல்லாம் புதிய மண்ணை எடுத்து வரலாம். பழைய மண்ணை உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் கொட்டி விட வேண்டும். இவ்வாறாக குல தெய்வ கோயிலிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் குல தெய்வமே குடி கொண்டிருக்கும். உங்களது முன்னோர்கள் வந்து சென்று காலடி பட்ட இடம். இனி, நீங்களும், உங்களது சந்ததியினரும் செல்லக் கூடிய இடம் தான். அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண் உங்கள் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.

தீராத கஷ்டம், குலதெய்வக் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அந்த முடிச்சை பிரித்து அதிலிருக்கும் மண்ணை கொஞ்சமாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு குல தெய்வத்தின் பெயரை சொல்லி வர, எல்லா கஷ்டமும் தீரும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதனை செய்து பார்க்கலாம்..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Saturday, August 5, 2023

குலதெய்வங்கள் என்றால் என்ன?விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது.அவர்களின் பெருமை என்ன ?அனைவரும் தெரிந்து கொள்வோம்.!_நமது குலதெய்வம் :-

🙏🕉️ வணக்கம் 🕉️🙏

குலதெய்வங்கள் என்றால் என்ன?
விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது.

அவர்களின் பெருமை என்ன ?
அனைவரும் தெரிந்து கொள்வோம்.!

_நமது குலதெய்வம் :-

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். 
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். 
சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். 

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது? 
நம் முன்னோர்கள்… அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை… இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்… இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று… அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!…

_*விஞ்ஞான முறையில் யோசித்தால்…*_

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே… ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். 
இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. 
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்… இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்… பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. 
பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. 
அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து… இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு… தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்.

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர். பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
என விஞ்ஞானிகள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.!

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். 
பிறந்த வீட்டில் ஒரு குல தெய்வம். புகுந்த வீட்டில் ஒரு குல தெய்வம்.

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி 
(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அவரவர் வசதிக்கேற்ப குலதெய்வத்தின் போட்டோவை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.!

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்.

“தாயிற் சிறந்த கோவிலுமில்லை. 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.”

அனுதினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வோம் வாழ்வில் முன்னேற்ற அடைவோம்.!
எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்…

_*நமது முன்னோர்கள் உருவாக்கித் தந்த மிகவும் புனிதமான குலதெய்வத்தின் சிறப்புகளை...*_
_*வருகின்ற இளைய தலைமுறைக்கும் முக்கியமாக நம் குழந்தைகளுக்கும் எடுத்து சொல்லுங்கள்...*_
🌹🍫🪴🕉️🛕🤝🔯🙏.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...