Showing posts with label #pragathieswara Temple #Sivan temple #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #pragathieswara Temple #Sivan temple #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Tuesday, October 22, 2024

தஞ்சை பெரிய கோவில் கட்ட 7 வருடம் ஆனது...

ஸ்ரீ ராஜராஜ சோழன் கட்டிய
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள்
*⚜ராஜராஜ சோழன் காலத்தில் ‘இராஜராஜீஸ்வரம், இராஜராஜேச்சரம்’ என்றழைக்கப்பட்டு,* 

*⚜பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் ‘ பெருவுடையார் கோயில்’ என்றழைக்கப்பட்டு,* 

*⚜பிறகு 17-ம் நூற்றாண்டுகளில் ஆண்ட சரபோஜி போன்ற மராட்டிய மன்னர்களால் ‘பிரஹதீஸ்வரர் கோயில்’ என்றழைக்கப்பட்டது.*

*🔯ராஜராஜ சோழன் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் காஞ்சிக்கு வெளியே நிர்மாணித்திருந்த கைலாசநாதர் கற்கோயிலின் பேரழகில் மயங்கி 
" கச்சிப்பேட்டுப் பெரிய தளி' என்று போற்றினார்.* 

அப்போது அவர் உள்ளத்தில் எழுந்த எழுச்சி மிக்க கனவே பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோவிலாக உருவெடுத்தது.

இக்கோவிலைக்கட்டிய 
தலைமைச் சிற்பியின் பெயர் குஞ்சர மல்லன். 

கோவிலைப் பாதுகாக்க 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள். 

கோவிலில் வழிபாட்டிற்கு பயன்பட்ட கற்பூரம் சுமத்ரா தீவிலிருந்து வரவழைக்கப்பட்டது.

பெரிய கோவில் முழுவதும் கட்டுமானப்பணி 1006ல் தொடங்கி 1010ல் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது

தஞ்சை பெரிய கோவில் கட்ட 7 வருடம் ஆனது

உறுதியான கற்கள் திருச்சியின் மானமலையிலிருந்தும் புதுக்கோட்டை குன்னாண்டார் கோயில் பகுதியிலிருந்தும் 
பெரிய சிலைகளுக்கான கற்கள் பச்சைமலையிலிருந்தும் 
பெரிய லிங்கத்திற்கான கல் திருவக்கரையிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கற்பாறையில்லாத தஞ்சை பூமியில் ஏறத்தாழ 2 லட்சம் டன் எடையுள்ள கற்களைக்கொண்டு 216 அடி உயரமுள்ள ஒரு மலையாகவே ராஜராஜன் பெரிய கோவிலைக்கட்டியுள்ளார்.

இடம் தேர்வானதும் சமய நெறிகள் கடைபிடிக்கப்பட்டு, திசை வாஸ்து பார்க்கப்பட்டு, கோவில் கட்டிய பகுதி முழுவதும் பசுக்களை பல வருடங்கள் கட்டி வைத்து அவற்றின் சாணம் கோமியம் இவற்றால் தோஷங்கள் நீக்கப்பட்டு சுத்தமாக்கி, மண் கெட்டிப்பட யானைகளைக் கட்டி வைத்து பதப்படுத்தி, பூஜைகள் பல செய்து கட்டுமானப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். 

இன்று கடைக்கால் நடுவதற்கு முன் நிலத்தைக் கோடுகளால் பிரிப்பது போல, அன்றைக்கு இடத்தை நெல்லால் பரப்பி, கோடுகளும் கட்டங்களும் போட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். 

தஞ்சைக்கோவிலைக்கட்டிய குஞ்சர மல்லன், அவன் கீழ் பணி செய்த 1600 தொழிலாளர்கள், அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்த தொழிலாளி அனைவருக்குமே தன் பெயரான ‘ராஜராஜன்’ என்பதையே பட்டப்பெயராக அறிவித்து அவர்களது பெயர்களைக் கல்வெட்டுகளில் பொறித்திருப்பது ராஜராஜனின் விசால மனதுக்குச் சான்று!! 

மற்ற கோவில்களில் தானங்கள் செய்தவர்கள் பெயர்கள் மட்டுமே கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். 

ராஜராஜன் காலத்துக் கோயில்களில் மட்டும்தான் தானங்கள் செய்தவர்கள் மட்டுமல்லாது, 

வேதம் ஓதிய சட்டர்கள், ஆடல் மகளிர், தச்சர்கள், பக்திப்பாடல்கள் இசைத்த பிடாரர்கள், நட்டுவனார்கள், கணக்கர்கள், விவசாயிகள், வணிகர்கள், கோவிலைக்காத்த வீரர்கள் இப்படி அனைவரது பெயர்களும் மன்னனுக்கு இணையாக கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது ராஜராஜ சோழனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

மற்ற கோவில்களில் சுற்றுப்புற கோபுரங்கள் பெரியதாயும் கருவறைக்கோபுரம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் பெரிய கோவிலில் சுற்றுக்கோபுரங்கள் சிறியதாயும் கருவறைக்கோபுரம் பெரியதாயும் அமைந்துள்ள விதம் ‘யுனெஸ்கோ’ இந்தக் கோவிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஒரு காரணம்.

கற்ப கிரகத்துக்குள் இருந்து பார்த்தால் விமானத்தின் உச்சி தெரியும். இதை பார்த்து வியக்காத வெளிநாட்டவரே இல்லை என்று சொல்லலாம்.

கோபுரத்தின் உட்பகுதியில் மணலைப் பரப்பி அதன்மீது ஏறி நின்று கொண்டு கட்டுமான வேலைகளைச் செய்து, உச்சி விமான கற்களைப்பதித்த பிறகு மணல் அத்தனையையும் நீக்கியிருக்கிறார்கள்.

இக்கோவிலின் விமானமான ‘ தக்ஷிணமேரு’ 216 அடி உயரமானது. விமானத்தளக்கல்லின் நான்கு மூலைகளிலும் இரண்டிரண்டு நந்திகள் உள்ளன. கோபுரம் முழுவதும் செப்புத்தகடுகளால் போர்த்தி பொன் வேய்ந்து குடமுழுக்கு நடத்தியிருக்கிறார் ராஜராஜர். 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். 

பிற்காலத்தில் எதிரிகளின் படையெடுப்பின்போது அவை அத்தனையும் சூறையாடப்பட்டு விட்டது. 

கருவறைக்கு மேல் மகாமண்டபம் வழியாக இரண்டாம் தளம் சென்றால் அங்கிருந்து கோபுரத்தின் உட்புறம் பிரமிட் வடிவத்தில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து, கடைசியாக 8.7 மீட்டர் பக்க அளவுகள் உள்ள சதுர தளத்தை உண்டாக்கியிருப்பதைப் பார்க்க முடியும். விமானத்தினுள் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கீழ்தளத்தின் உள்ளே இரு சுவர்கள் உள்ளன. அதற்கிடையே உள்ள அகலம் 2 மீட்டர். இரண்டு தளம் வரை அப்படியே சென்று, அதன் பின் சிறிது சிறிதாகக் குறுக்கி ஒரே சுவராக்கியுள்ளனர். 

அதன் மேல்தான் அந்த வானளாவும் விமானம் நிற்கிறது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. க்ஷ

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...