Showing posts with label # thirumitur Lalitha #Ambika nykula #peralam #Thiruvarur #Tamilnadu #hindu India. Show all posts
Showing posts with label # thirumitur Lalitha #Ambika nykula #peralam #Thiruvarur #Tamilnadu #hindu India. Show all posts

Monday, October 30, 2023

திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை #நெய்குளம் தரிசனம்.

#திருமீயச்சூர் 
ஶ்ரீ லலிதாம்பிகை #நெய்குளம் தரிசனம்.
திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
திருமீயச்சூர் 
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
#தோன்றிய_திருத்தலம்.
இங்குதான் ஶ்ரீ ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு
ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இதன் பெருமையைப்
பற்றி விவரித்தார். 
இதைக்கேட்டஅகத்தியர்,"ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன்கிடைக்கும்?''என கேட்டார். 
அதற்கு ஶ்ரீ ஹயக்கிரீவர்," பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன்கிடைக்கும் என்றார்.அகத்தியர் தன்மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று ஶ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்தி இருக்கிறாள்.
அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடதுகாலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த
அம்பிகையைக் காண்பது அரிது, 
இவ் லலிதாம்பிகையை தரிசித்து,
ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். 
அப்போது அகத்தியர்,லலிதா நவரத்தின மாலை என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
நெய் குள தரிசனம்
திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகை அம்மனின்
நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி
காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது.
#விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
அத்துடன் புளி சாதம்,தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின்முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலைஆகியவற்றின் மீது 15 அடி நீளம்,4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைப்பர். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். 
இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது.இதுதான் நெய்க்குள தரிசனம்.
நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி
பெற்ற தரிசனம்.
திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் நெய்குளம் தரிசனம்.
மென்மையானவள் :

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம். லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலபமானவள் என்றும் அர்த்தம். விளையாடுபவள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் - நம் எதிரிகளுடனும் நம் துன்பங்களுடனும் விளையாடி அவைகள் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்பவள் 

என்னை விட என் நாமங்கள் உயர்ந்தவை , 

என் நாமங்களை விட என்னை பற்றிய சிந்தனைகள் உயர்ந்தவை - 

என்னைப்பற்றிய சிந்தனைகளைவிட மற்றவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று என்னை வணங்குபவர்கள் மிகவும் சிறந்தவர்கள் ...

அம்மா  ஸ்புடம் போட்ட பொன் போல ஜொலிக்கும்  ஸ்ரீ வித்யாவாகிய, லலிதாம்பிகே, 

சிவந்த உடை உடுத்த, அமைதி தவழும் புன்னகை பூத்த திவ்ய முகத்தாளே ,  

தாமரை ஆசனத்தில் அமர்ந்த  மாதா,  

தாமரைக்கும் மேல் மலர்ந்த  உருண்ட கருணை  விழி கொண்ட ஜகன்மாதா, 

தங்கத்தாமரை கரத்திலேந்தியவளே,  

பக்தர் விரும்புவதெல்லாம் அருளும் பவானி,  

சகல லோக ரக்ஷகி,  

பக்தர்களை கனிவோடு காப்பவளே, 

சர்வ தேவாதி தேவர்களும்  தொழும் தாயே, தயாளு,  

செல்வங்களை வளங்களை வாரி வழங்கும்  உன்னை  மனதார பிரார்த்திக்கிறேன், தியானிக்கிறேன் பிறர் நலம் வேண்டி ...

சிரித்துக்கொண்டே  நகர்ந்தாள் 

உத்யத்பானு-ஸஹஸ்ராபா 
சதுர்பாஹு-ஸமன்விதா
ராகஸ்வரூப-பாசாட்யா 
க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா

எல்லாமாய் இருப்பவள் .....

கொலுசு கேட்கும் கொடைவல்லி -3

 . அந்த ஸஹஸ்ரநாம நாயகியின் கருணையைப்போல அவளைப்பற்றிய விஷயங்களும் நீண்டு  வளர்ந்த ஒன்று . 
அம்மா தாங்கள் யாரோ ஸ்ரீ லலிதாம்பிகை யாரோ என்று பிரித்து சொல்வதைப்போல இருக்கிறதே --- சிரித்தாள் சிங்காரவல்லி ஒரு வினாடி அவளை என்னிலிருந்து பிரித்து சொல்லும் போது என்னால் பல விஷயங்கள்  அதனால் கொஞ்சம் வேறு வேறாக பிரித்து சொல்கிறேன் ... சொல்லி முடிக்கும் வரை நான் வேறு அவள் வேறு என்றே நினைத்துக்கொள் .. 

சரி இன்று கோயில் அமைப்பை பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாக சொல்கிறேன் - அங்கே கொஞ்சி  விளையாடும்  கிளியைப்பற்றியும் சொல்கிறேன் - மதுரை ஞாபகத்திற்கு வரலாம் ....

அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் :

சர்வலாங்கார அம்பிகையாக கைகளில் வளையல்களும் அமர்ந்த நிலையில் கால்களில் கொலுசும் இடுப்பில் ஒட்டியானமும் கழுத்தில் சகல விதமான ஆபரணங்களும் அணிந்து அற்புதமாக காட்சி அளிக்கின்றாள் திருமீயச்சூர் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.

சிறப்பு வாய்ந்த ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மாசி மாத அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஆதி சைவ சிவாச்சார்யர்களும் அன்னையின் பக்தர்களும் அம்பாள் உபாசகர்களும் கூடி இணைந்து ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஹோமம் பள்ளயம் எனப்படும் அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் போன்ற வழிபாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

லட்சார்ச்சனையின் போது 10 காலத்திற்கும் 10 விதமான பிரசாதங்கள் காலம் ஒன்றிற்கு 10 கிலோ வீதம் 100 கிலோ பிரசாதம் நைவைத்தியம் செய்யப்படுகின்றது. உச்சிகாலத்தில் விசேஷமாக பிரண்டை சாதம் 10 கிலோ நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

அர்ச்சனையின் போது காலை முதல் மாலை வரை 10 ஆயிரம் ஆவர்த்தி ஹோமமும் அதன் அங்கமாக ஆயிரம் ஆவர்த்தி தர்ப்பணமும் நடைபெற்று அம்பிகைக்கு மகா அபிஷேகமாக பால், பழம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்றவை செய்விக்கப்பட்டு கலசாபிஷேகம் செய்து சர்வலாங்கார பூஷிதையாக அலங்காரம், மலர் கிரீடம் தரித்து காட்சி தரும் அம்பிகைக்கு மஹா நைவேத்தியம் செய்யப்படும்.

அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர் சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

சர்க்கரைப்பொங்கலில் பச்சைக்கர்ப்பூரம் , நாட்டு சர்க்கரை , மலைத்தேன் , சுத்தமான அக்மார் நெய் , பாதாம் , பிஸ்தா , ஏலக்காய் , கற்கண்டு , பனைவெல்லம் எல்லாம் சேர்க்கப்படும் . 

சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டுகளித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.

சூரியன் அருள் பெற்ற  திருமீயச்சூர்  :

அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அருளும் அற்புதத்தலம் திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர். இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ள தலம். திருமீயச்சூர் மற்றும் இளங்கோவில் இரண்டும் ஒரே ஆலயத்துககுள் திகழ்கின்றன. இவை சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்றன.

மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி (மேகநாதர்), அம்பாள் சவுந்தரநாயகி, லலிதாம்பிகை, கோபுரங்கள் கஜப்பிருஷ்ட விமான அமைப்பில் உள்ளன. இக்கோவிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள இளங்கோவில் இறைவன் ஸ்ரீசகலபுவனேஸ்வரர். அம்பிகை மின்னல் மேகலாம்பாள்.

உட்பிராகாரத்தில் விநாயகர், வில்லேந்திய முருகர், பஞ்ச பூதலிங்கங்கள் தனித்தனியே அஷ்ட திக் பாலகர்கள், சப்த மாதர்கள் பூஜித்த லிங்கங்கள், சேத்ர புராணேஸ்வரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோவி லின் உட்பிராகாரங்களில் மொத்தம் 25 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இங்கே 12 ராசிகளுக்கான 12 நாகர்களையே அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். அருணனும் சூரியனும் வழிபட்ட தலம். 

சூரியன் சுவாமியையும் அம்பாளையும் யானை மீது வைத்து மேக மண்டலத்திலிருந்து பூஜை செய்ததால் சுவாமிக்கு மேகநாதர் என்று பெயர். எமனும், சனிபகவானும் இத்தலத்தில் சூரியனுக்கு மகன்களாகப் பிறந்தனர். 

சங்கு புஷ்பங்களை தாமரை இலையில் வைத்து அர்ச்சனை செய்தும், வஸ்ரவள்ளி எனப்படுகின்ற பிரண்டையால் சாதம் செய்து நிவேதித்துவம் எமன் வழிபட்டாராம்.

இன்றும் இங்கே பக்தர்கள் தங்களின் தேக ஆலோக்கியத்துக்காக, 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்தும், சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும், பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்தும் கோவிலில் விநியோகித்து வழிபடுகிறார்கள்.

கிளியை தூது அனுப்பும் துர்க்கை :

திருமீயச்சூர் தலத்துக்கு நாம் எதை வேண்டி ஸ்ரீ லலிதாபர மேஸ்வரியை வழிபட வந்துள்ளோமோ அதனை ஸ்ரீ துர்க்கையிடம் “தாயே நான் இன்ன கோரிக்கையாக வந்துள்ளேன். 

நீதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியிடம் சிபாரிசு செய்ய வேணும்” என பிரார்த்தித்தால், ஸ்ரீ துர்க்கை தன் கையில் உள்ள கிளியை நமக்காக தூது செல்ல அனுப்பி வைக்கிறாள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சந்நிதி எதிரிலுள்ள கொடி மரத்தில் அந்தக் கிளி அமர்ந்து நமது கோரிக்கைகளை அம்பாளிடம் சமர்ப்பிக்கிறதாம்.

ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் சாந்தம் :

சூரியன் இங்கே மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளி பெற்று இன்புற்றார். மேகநாதர் சந்நிதி கோஷ்ட தெய்வமாக விளங்குவது சேத்திர புராணேஸ்வரர் சிற்பம். சிவசாபத்திலிருந்து விமோசனம் பெற சூரியன் திருமீயச்சூரில் தங்கினான்.

சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார்....

இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.

பிறவிகள் பாவம் தீரும் :

இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது. பீஷ்ம பிதாமகர் முக்தி அடைந்த தினம். பரமேஸ்வரனால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் (கருமை நிறம்) நீங்கி மேகநாதரையும், லலிதாம்பிகையையும் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்து முழுமையான பிரகாசம் அடைந்த தினம் இது.
ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார். அப்போது, எருக்கம் இலை, அருகம்புல், பசுஞ்சாணம் மூன்றையும் சிரசில் வைத்து சங்கல்ப ஸ்நானம் செய்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கப் பெறும் என்பது முன்னோர் வாக்கு.

பிரண்டை சாத நைவேத்தியம் :

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக்காலம் உள்ளது என்பதால், சத்ய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளை சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தல விருட்சமான பிரண்டை கலந்து சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார்.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...