மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் சிறப்புகள் பற்றிய ஓர் பதிவு!
கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று இந்தத் தலத் தைப் போற்றுகின்றன புராணங்கள்.
அம்பிகை மயிலாக வந்து வழிபட்ட தலம் ஆதலால், இவ்வூர் மயிலை என்று பெயர் பெற்றது.
அம்பிகை கற்பகவல்லி எனும் திருப்பெயருடன் அருள்கிறாள்.
‘கற்பகம்’ என்பதற்கு வேண்டும் வரம் தருபவள் என்று பொருள்.
இவளைத் தரிசித்துவிட்டே ஸ்வாமியைத் தரிசிக்கும்படியான அமைப்பு, இக்கோயிலின் சிறப்பம்சம்.
சைவ சித்தாந்தங்களும் சக்தியின் மூலமாகவே சிவத்தை அடையமுடியும் என்கின்றன.
அதற்கு உகந்த முறையில் திகழ்கிறது கபாலீஸ்வரர் ஆலயம்.
இங்கு வந்து அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.
ஏழு என்ற எண்ணை அடிப் படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச்சிறப்பு.
கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர் ஆகிய மயிலையில் உள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் எல்லாப் பேறுகளும் கிடைக்கும்.
அதேபோல் மயிலாப்பூரில் ஏழு தீர்த்தங்களும் சிறப்புடன் திகழ் கின்றன.
அவை: கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம்,
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.