Showing posts with label #Somavaram #Karthigaimadam #Sivan temple #Sangu Abhishekam #Sivan festival #Hindu temple #Thirupadri Puliyur #Thiruvaiyaru #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Somavaram #Karthigaimadam #Sivan temple #Sangu Abhishekam #Sivan festival #Hindu temple #Thirupadri Puliyur #Thiruvaiyaru #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Monday, November 17, 2025

சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது ஏன்?

சிவனுக்கு கார்த்திகை சோம வாரத்தில் சங்காபிஷேகம் செய்வது ஏன்?


கார்த்திகை சங்காபிஷேகம்
கார்த்திகை சங்காபிஷேகம்
சிவபெருமான் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் என்கிறவர்கள் இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.

சங்காபிஷேகம் செய்வது ஏன்?

வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குருக்ஷேத்ரமே நடுங்கியது என்பார்கள். சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

இன்று கார்த்திகை சோமவார பிரதோஷம் : வழிபாட்டின் சிறப்புக்களும், பலன்களும்

சங்கு காயத்ரி மந்திரம்

சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும். அவரவர் வசதிப்படி 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தலாம். சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது.

‘ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே

பவமா நாய தீமஹி

தந்நோ சங்க ப்ரேசோதயாத்’

கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் உமா மகேஸ்வர விரத முறையும், பாராயணம் செய்ய வேண்டிய பாடலும்

சங்கில் ஒலிக்கும் ஓம்

ஓம் காரத்தால் ஓம்கார அபிஷேகம்

சங்கு தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்வதானது, அந்தப் பிரணவமாகிய ஓம் காரத்தினாலேயே, அந்தப் பிரணவத்தின் வடிவமே ஆகிய பரம்பொருளுக்கு அபிஷேகம் செய்வது போன்றதாகும். சங்கை நம் காதில் வைத்து உற்றுக் கேட்டால், கடலில் இரைச்சல் போன்ற சப்தம் கேட்கும். உண்மையில் அது பொருளற்ற வெற்று இரைச்சல் அல்ல. பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார ஸ்ருதியான ‘‘ஓம்’’ காரத்தின் ஒலி.

ஒலி மாசு மறுவே இல்லாத கடற்கரைக்குச் சென்று, மனதை தியான நிலையில் ஒருமுகப்படுத்தி, கடல் அலைகளில் ஓசையை உற்றுக்கேட்டால், அது ஓம்காரமாக ஒலிப்பதை உணரலாம். அதேபோல் அந்தக் கடலில் இருந்து தோன்றக் கூடிய சங்குகளிலும் கடலைப் போலவே ‘‘ஓம்’’காரம் ஒலிப்பதைக் கேட்கலாம். எனில் ‘‘ஓம்’’காரம் ஒலிக்கும் சங்கில் தீர்த்தம் நிரப்பி, ‘‘ஓம்’’காரப் பொருளாகிய அந்தப் பரம் பொருளுக்கு அபிஷேகம் செய்வது என்பது தனிச்சிறப்பு கொண்டது.

கார்த்திகை மாதம் சிவபெருமானை தீப ஒளியால் மகிழ்விக்க வேண்டும் என்பது சிவாகம சாத்திரங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் தீப ஒளியாலும், யோகாக்னியாலும் ஏற்படும் வெப்பத்தைச் சமன் செய்யவும் சிவ ரூபத்தைக் குளிர்விக்கவும் சங்காபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது. சங்காபிஷேகத்தைப் பார்த்தாலோ, சிவமூர்த்தத்திலிருந்து விழும் தீர்த்தத்தைப் பருகினாலோ நம் உடல்நிலை சமன் நிலை அடையும். தோஷம் நீங்கும் பிணிகள் அண்டாது.

சபரிமலையில் ஐயப்பனுக்கு நடக்கும் தினசரி பூஜைகளின் முழு விபரம்

சங்காபிஷேகம் நடத்துவது ஏன்?
இறைவன் ஒருவனே

வாழை இலை மீது தானியங்களை பரப்பி அதன் மீது சங்குகளை ஒழுங்கு முறையாக வைத்து நீர் வார்த்து மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகிப்பர். சங்காபிஷேகம் நடக்கும் முக்கியமான கோயில்கள் திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருவானைக்கோயில், பேரூர், போளுர், திருவேடகம், திருப்பாதிரிப் புலியூர், ராமேஸ்வரம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆகிய கோயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு வலம்புரிச்சங்கு கோடி இடம்புரிச் சங்குகளுக்கு சமம், எனவே சுவாமிக்கு வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால் விசேஷமானது.

108, 1008 சங்குகளையும் இறைவன் திருச்சந்நதியில், பன்னிரண்டு ராசிக்குண்டங்களாகப் பிரித்து, ஒவ்வோர் ராசி குண்டங்களிலும் ஒன்பது சங்குகள் வீதம் 12 ராசிகளிலும் 108 சங்குகள் வைத்து, எட்டுதிக்குகளுக்கும் எட்டுப் பிரதான சங்குகளையும் நடுவில் வலம்புரி, இடம்புரி என்ற இரு சங்குகளையும் ‘‘சிவசக்தி’’என அமைத்தல் வேண்டும். வலம்புரி, இடம்புரிச் சங்குகளைச் சுவாமியாகவும், அம்பாளாகவும் பாவித்து பிரதிஷ்டை செய்ய வேண்டும், இவ்வாறு அமைக்கப்பெற்ற 118 சங்குகளிலும் ‘‘1+1+8=10=1’’ எல்லாம் ‘‘ஒருவனே’’ என்ற தத்துவப் படியும் அமைத்தல் வேண்டும்.

சங்காபிஷேகம் செய்யும் முறை

* இரண்டு வெள்ளிக் குடங்களில் நன்னீர் நிரப்பி அவற்றில் கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கோரோசனை, புனுகு, விளாமிச்சை வேர், ஏலம், பன்னீர், மஞ்சள் முதலிய வாசனைத் திரவியங்களைச் சேர்த்து, ஒவ்வொரு சங்கிலும் மாவிலை, தர்ப்பை, மலர்வைத்து யாக குண்டத்தில் எதிரில் அமைத்தல் வேண்டும்.

* பூஜைமுறை சங்குகள் ஒவ்வொன்றும் ‘ஓம், ஓம்’ என்று ஒலித்துக் கொண்டிருக்கும். யாககுண்டத்தைச் சுற்றி ஐந்து நாழிகை நேரம் ஓங்கார மந்திரம் செபிக்க அம்மந்திரம் தீர்த்தத்தில் கலக்கிறது. தர்ப்பைப்புல் மூலம் தெய்வச் சக்திகளையும், மாவிலையில் உள்ள துவர்ப்பு சக்தியையும் ஈர்த்துக் கொள்கிறது.

சங்காபிஷேகம் எப்படி செய்வது?
* வேதசாஸ்திரங்களின் ஜெப மந்திரங்களும் ஓதி ஒவ்வோர் ராசி மண்டலத்திற்கும் எட்டுத் திக்குகளிலுள்ள சங்குகளுக்கும் வலம்புரி, இடம்புரிச் சங்குகளுக்கும் முறையே பூஜைகள் செய்தல் வேண்டும்.

* வேள்வி மண்டபத்தில் யாக குண்டத்தில் ஆகவணீயம், தட்சிணாக்கினியம், காருகாபத்தியம் என்னும் முத்தீயை முறையே அத்தி, ஆல், அரசு, மா, பலா, வெள்ளெருக்கு, வன்னி, நாயுருவி, தர்ப்பை முதலிய சமித்துக்களால் வளர்த்து, நவதானியம், வாசனாதிதிரவியம், கனிவகை, தேன், தேங்காய், பீதாம்பரம், இலவங்கம், தாம்பூலம், பொரி முதலியவற்றோடு நறுநெய் தாரையாகப் பெய்து ஒரே ஜோதிப்பிழம்பாக அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணைக் கடவுளுக்கு அக்னிமூலமாகக் கொடுத்து பலி போட வேண்டும்.

* காரியாக்கினியிலிருந்து மூலாக்கினியாகிய இரு சங்குகளிலும் பிரதிஷ்டை முடித்து தூபதீப, நிவேதனம், கற்பூரார்த்தி முதலியவற்றைச் செய்து, வாத்தியங்களோடு பிரகாரம் வலம் எழுந்தருளச் செய்து உலகம் தீங்கின்றி உய்யும் பொருட்டு வேண்டிக் கொண்டு, ஆசிபெற்று ஒவ்வொரு சங்கு தீர்த்தத்தாலும் இறைவனை முறையே அபிஷேகம் செய்வித்தல் வேண்டும்.

* பல தீபங்கள் ஏற்றி கண்கவர் அலங்காரங்கள் செய்து நவகிரக அலங்கார தீபத்தால், பஞ்சபூதம், பஞ்சஇந்திரியம்(ஐம்புலன்கள்) ஐந்து முகங்களுக்கு பஞ்சமுக தீபாராதனையாக ஜீவன்கள் சுகவாழ்வு பெற வேண்டி கற்பூரார்த்தி முதலிய மங்களகரமான ஆராதனைகள் செய்தல் வேண்டும்.

சங்காபிஷேகத்தின் பலன்

சங்காபிஷேகத்தால் சகோதர ஒற்றுமையும் வளரும். சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். இதைத் தரிசிப்பவர்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடுகளில் நுழைவு வாயிலின் தரையில் சங்கு பதிக்கும் வழக்கம் இருக்கிறது. சில வீடுகளின் வாசல் முன்பும் சங்கைக் கட்டுவதுண்டு. இதனால் திருஷ்டி தோஷம் நீங்கி செல்வம் விருத்தியாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...