Showing posts with label #Neelakandeswarar Temple #Hindu temple #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Neelakandeswarar Temple #Hindu temple #Tamil Nadu #India. Show all posts

Wednesday, July 10, 2024

திருநீலக்குடியில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவில்...



✾ ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிசிறப்பு உள்ளது. அதுபோல தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன..? அப்படி என்ன அதிசயம் இருக்கு இந்த கோவிலில்!
✾ அருள்மிகு திருநீலக்குடியில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவிலில் இறைவன் மனோக்யாநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

✾ பொதுவாக இறைவனுக்கு பால், நீர், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி என பலவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

✾ இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது, பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.

✾ எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.
✾ இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் லிங்கத்தின் திருமேனியைப் பார்த்தால், சுமார் ஒரு வருடமாக எண்ணெயே தடவாதது போல் உலர்ந்து காய்ந்து காணப்படும்.

✾ அவ்வளவு எண்ணெயும் எங்கு மாயமாகிறது என இன்னும் தெரியவில்லை. ஈசன் தொண்டையில் இருக்கும் விஷத்தன்மையை குறைக்கவே இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.

✾ இத்தலத்தின் உள்ளே ஒரு பலாமரம் உள்ளது. அதை முழுபழமாக எடுத்துச் செல்லக்கூடாதாம். இறைவனைக்கு படைத்த பிறகே எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் இறைவன் தண்டித்து விடுவார் என்பது ஐதீகம்.

✾ இத்தலத்தின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். இந்த மரம் பஞ்ச வில்வ மரம் என அழைக்கப்படுகிறது. ஒரே காம்பில் ஐந்து இதழ்களுடைய இலைகள் இருப்பது அதிசயமாகும்.


ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...