Showing posts with label #sangameshwarar #SivanTemple #Hindu temple #kooduthurai #Bhavani #Erode #Tamil Nadu #india. Show all posts
Showing posts with label #sangameshwarar #SivanTemple #Hindu temple #kooduthurai #Bhavani #Erode #Tamil Nadu #india. Show all posts

Wednesday, May 14, 2025

பவானி (திரு நணா) சங்கமேஸ்வரர் திருக்கோயில்

*⚜️ பவானி*  (திரு நணா)   *சங்கமேஸ்வரர் திருக்கோயில்*. 
             *வழிபட்டவர்கள்*  :   அரி அயன் சரஸ்வதி காயத்திரி சாவித்திரி பராசக்தி லட்சுமி சப்த மாதர்கள் முருகன் வீரபத்திரர் இராமன் அனுமன் சனி  குபேரன் விசுவா மித்திரர் பராசரர் என தெய்வங்களும் தேவர்களும் முனிவர்களும் விரதிகளும் அடியார்களும் மற்றும் புலி மான் போன்ற விலங்குகளும் மற்றும் பிறவும்.       
          
  பவானி  (திரு நணா)    ஈரோடுக்கு அருகே உள்ளது. *காவிரி பவானி அமுத நதி என்ற மூன்று நதிகள் சங்கமம் ஆகும்*  இடத்தில், கூடும் இடத்தில் லிங்கப் பரம்பொருள் வெளிப்பட்டு இருந்ததால் *பவானி முக் கூடல்*  என்றும் தட்சிணப் பிரயாகை என்றும் பெயர்.      
பரமேஸ்வரனுக்கு சங்கமேஸ்வரர் என்று திருநாமம். 

மூலஸ்தான கோபுரத்திற்கு எதிரே பவானி முக்கூடல் நதி உள்ளது.                          

  🕉️        *தானாகத் தன்னை வெளிப் படுத்திக் காட்சி கொடுத்தால் தவிர யாராலும் தன் விருப்பப்படி பரமன் திருக்காட்சி காண  முடியாத அணுக முடியாத  காரணத்தால் நணா* 
என்று பெயர். 
✡️    *வினை கெடுக்கும் திரு நணாவே*    (சம்பந்தர்) 

என தொழுது வழிபடும் அடியார்களைத் *தீவினை நணுகாத வகை காக்கும்* திருத்தலம் ஆதலாலும் நணா என்று பெயர் பெற்றது. 
        
🔯  *வானோர் ஐய அரனே  பெருமான் அருள் என்று ஆதரிக்க எங்கும் நானா விதத்தால் விரதிகள் நல் நாமமே ஏத்தி வாழ்த்தத் தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே*       
       
☸️   *வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே*      

        🛑  *புலியும் மானும் அல்லாத சாதிகளும் அங்கழல் மேல் கை கூப்ப அடியார் கூடிச் செல்லா வரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே*          (சம்பந்தர்)
              
என அரி அயன் சரசுவதி காயத்திரி சாவித்திரி பராசக்தி லட்சுமி சப்த மாதர்கள் முருகன் வீரபத்திரர் இராமன் அனுமன் சனி குபேரன் விசுவா மித்திரர் பராசரர் என தெய்வங்களும் தேவர்களும் முனிவர்களும் விரதிகளும் அடியார்களும் மட்டுமன்றி *அடித்து உண்ணும் புலி கூட அன்போடு மானுடன் வந்து சங்கமேஸ்வரரைப் பூஜித்து வணங்கி நலம் பெற்றது*. 

இவர்கள் உண்டாக்கிய தீர்த்தங்களும் இவர்கள் உருவங்களும் சந்நிதிகளிலும் பிரகாரத்திலும் உள்ளன. 

இராம லிங்கம் சோதிலிங்கம் பஞ்ச பூத லிங்கம் காசி லிங்கம் ஆயிர லிங்கம் காயத்திரி லிங்கம் அமுத லிங்கம்  எனப் பல லிங்கச் சந்நிதிகள் உள்ளன. 

தல மரமான இலந்தை மரத்தடியிலும் சுயம்பு லிங்கப் பரம்பொருள் காட்சி தருகிறது. நடராஜர் சந்நிதி பக்க வாசலுடன் அமைந்துள்ளது.  

☸️       *பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச் செய்யார் எரியாம் உருவம் உற வணங்கும் திருநணாவே* (சம்பந்தர்) 
              
 என இரு புறமும் நின்று *அரி அயன் தொழுது போற்ற* அருட்பெருஞ்சோதி லிங்கோற்பவர் கருவறைச் சுவற்றில் உள்ளார்.

  *பிணி போக்கும் மூன்று முகம் மூன்று கரம் மூன்று  பாதம் உடைய   ஜுரஹரேஸ்வரர்* தனிச் சந்நிதியில் நந்தி வாகனத்துடன் உள்ளார். 

சந்நிதி வாசலிலும் இரு புறமும் ஜுரஹரேஸ்வரர்  திருவுருவம் உள்ளது.  

        *பந்தார் விரல் மடவாள் பாகமா*   (சம்பந்தர்) 
      
என சங்கம லிங்கப் பரம்பொருளை வழிபட்ட உமையவளுக்குப் பந்தார் விரல் மங்கை என்ற பெயருடன் தனிச் சந்நிதி.  ஈசனுக்கு இடது புறம் அதே திசையில் கட்டப்பட்டுள்ளது.  

பங்தார் விரல்  மங்கை  என்பது  பந்து விளையாடும்  மண்ணுலகப் பெண்ணைக் குறிக்கும் சொல்.   
மண்ணுலக வாசி பர்வத மகள்  மகள் பார்வதியைக் குறிக்கும் சொல்.  

  எந்த அம்மனும் அல்ல, அம்மன் பெயரும் அல்ல.          
                    
 🔯     *ஞானத் தாய் உனை* (அப்பர்)

     என  *தாயுமான தட்சிணா  மூர்த்தியையும்  சரஸ்வதியையும் குறிக்கும் வேத மங்கை என்ற பெயரை அஞ்ஞான நிர்வாகம் உமைக்கு ஏற்றிக் கூறுகிறது.*  

சங்கமேஸ்வரரை வழிபட்ட திருமாலுக்கும் லட்சுமிக்கும் ஆதி கேசவப் பெருமாள் சுந்தரவல்லித் தாயார் என்ற பெயரில் பெரிய தனிச் சந்நிதி உள்ளது .

*சுந்தர வல்லி   என்பதுவும் அம்மையான சுந்தரேசர் திருநாமம்*.   

தூணில் மட்டுமே செதுக்கப்பட்டு இருக்கும்  அனுமானுக்குத் தற்காலத்தார் சந்நிதி கட்டியுள்ளனர்.    

பிள்ளையார் முருகன் சந்நிதிகள் ஒன்றை ஒன்று நோக்கியவாறு அமைந்துள்ளன.

சிவப்பிரியா

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...