Showing posts with label #Rathnagireeswarar Temple #Ayyarmalai #Hindu temple #Ayyarmalai #Tamil nadu #India. Show all posts
Showing posts with label #Rathnagireeswarar Temple #Ayyarmalai #Hindu temple #Ayyarmalai #Tamil nadu #India. Show all posts

Saturday, September 13, 2025

ரத்தினகிரீஸ்வரர் கோவில் அய்யர் மலை

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் (அய்யர் மலை)
1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ளநவத்துவாரங்களின் வழியேசிவலிங்கத்தின் மீது விழுகின்றது.  

இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது.

பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது.

இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 64வது தேவாரத்தலமாகும்.

இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரமாகும்.

சோதிலிங்க வடிவமானது. மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.

ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான்.

இதனால் சுயம்புவில்இருந்து ரத்தம் வந்தது, மன்னன் தன் தவறைஉணர்ந்துஇறைவனை வணங்கினான்.  

இதையடுத்து இறைவன் தோன்றிமன்னனுக்கு
அருளாசி வழங்கி
இரத்தினங்களை வழங்கினார் அந்த தழும்பு இன்னும் சுவாமியின் மீது உள்ளது.

இறைவன் 9 ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன.  

சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாகஎழுந்தருளியுள்ளார்.. இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...