Showing posts with label #Appar #Tirunavukkaracar #Navukkarasar #sivanadi argal #63 nayanmargal #Hindu temples #Thiruvarur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Appar #Tirunavukkaracar #Navukkarasar #sivanadi argal #63 nayanmargal #Hindu temples #Thiruvarur #Tamil Nadu #India. Show all posts

Friday, August 30, 2024

திருநாவுக்கரசு சுவாமிகள் வரலாறு.



திருநாவுக்கரசு சுவாமிகள் வரலாறு. 
திரு அவதாரம். 

தென்னார்க்காடு மாவட்டம் என பின்னர் அழைக்கப்பட்ட திருமுனைப் பாடி நாட்டில் பெண்ணை ஆறு வளம் கொழிக்க சைவம் தழைக்க விளங்கியது திருவாமூர். 

ஆங்கு மேன்மைமிகு சைவ வேளாளர் குலத்தில் பெருமைமிகு குறுக்கையர் குடியில் புகழனார் என்பவர் கற்பின்மிக்கநங்கையாகிய மாதினியார் என்பவருடன் இல்லறம் இனிது நடத்தி வந்தார். அவர்களுக்குதிலகவதியார்திருமகளாகதோன்றினார் . அதன்பின் உலகிருள் நீக்கும் கதிரொளி போன்று "மருள் நீக்கியார்" என்னும் புதல்வர் தோன்றினார்.

திலகவதியார் திருமண பருவம் அடைந்த நிலையில் சைவ குலத்தைச் சார்ந்த சீலராக விளங்கிய கலிப்பகையார் என்பார்க்கு திருமணம் பேசினர். அத்தருணம் அரச கட்டளை என்பது அவர் போர் முனைக்குச் செல்லவேண்டியதாயிற்று.

"நெருநல்உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்னும் நெறிப்படி புகழனார் தனது பொன்னுடலை நீத்தார். அவரைத் தொடர்ந்து கற்பின் மாண்பறிந்த பொற்பின் திருவாகியமாதினியாரின் உயிரும் பிரிந்தது.

இளமைப் பருவத்தில் தவழ்ந்து கொண்டிருந்த திலகவதியாரும் மருள்நீக்கியாரும் ஆற்றொணாத் துயர் கடலில் அழுந்து துடிக்கும் ஞான்று திலகவதி யாருக்கு திருமணம் பேசிய கலிப்பகையார் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த செய்தி வந்து தாக்கியது.

தன்னை மணம் பேசிய கழிப்பகையாறு தனது கணவர் இனி உலகில் வாழ்வேன் எனக்கொன்று திலகவதியார் உயிர் துறக்க துணிந்தார். அந்நிலையில் மருள் நீக்கியர் தாய் தந்தையரை பிரிந்த பின்னர்தமக்கையாரையும் இழப்பேனாயின் உயிர் தரியேன் என வேண்டத் திலகவதியார்தம்பியாரின் நலத்தை கருத்தில் கொண்டு மனைத் தவம் பூண்டு ஒழுகலானார்.

திலகவதியாரும் மருள்நீக்கியாரும் அறச்சாலைகள் வைத்தும் விருந்தளித்தும்சோலைகளை அமைத்தும் எழில் பெருக விளங்கினர்.

திலகவதி யார் சிவாலயம் சார்ந்த சிவத்துண்டாற்றி வணங்கி வரும் நாளில் மறுமைக்கு யார் சமண நெறியால் ஈர்க்கப் பெற்று சமணநெறியில்அச்சமயத்தின்பால் எய்தி அங்கு சிறந்து விளங்கி, "தர்மசேனர்" என்னும் சிறப்பு பெயர் பூண்டு இருந்தார்.

சூலைத் தந்து ஆட்கொள்ளல்.

திலகவதியார்சிவத்தொண்டாற்றி தன் தம்பியை சமணத்தில் இருந்து மீட்டு உய்விக்க வேண்டும் என வேண்டுதல் செய்யலானார். "வேண்ட முழுதும் தருவாய் நீ! வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில் அதுவும் உன்றன் விருப்பன்றே" என்னும் வாசகத்திற்கு இணங்க திலகவதி யாரின் வேண்டுதலும் இறைவனின்திருக்குறிப்பும்சேர்ந்து விளக்கமுறும் காலம் கனிவுற்றது.

ஈசன் திலகவதியாரின் கனவில் தோன்றி "சூலை நோய்தந்துஆட்கொள்வம்" என அருளிச் செய்தனர். இதனை சேக்கிழார் பெருமான் "உன்னுடைய மனக்கவலை ஒழி நீ! உன்னுடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனையடைய தவம் முயன்றான் அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வம்"என உரைத்தருளினார். மருள் நீக்கியார் சூலை நோயால் துன்புறலானார். ஈசனால் தருவிக்கப்பட்ட நோய் ஈசனாலன்றி வேறு எவ்வகையால் தீரும்? மருந்தால் தீரவில்லை. சமணர் ஆற்றும் மந்திர முறைகளாலும்தீரவில்லை. இந்த நிலையில் அவர் தமது தமைக்கையாரை நினைவு கூர்ந்தார்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...