Showing posts with label #Marakkanam Boomeeswarar #Villupuram district #Hindu India #Tamil Nadu #Pondicherry. Show all posts
Showing posts with label #Marakkanam Boomeeswarar #Villupuram district #Hindu India #Tamil Nadu #Pondicherry. Show all posts

Saturday, February 24, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பூமீஸ்வரர் கிரிஜாம்பிகை அம்மன்.

#முதலாம்_இராஜராஜசோழன் தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பழைமையான தலமான, 
#விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள #மரக்காணம்
#பூமீஸ்வரர்
#கிரிஜாம்பிகை அம்மன் திருக்கோயில் வரலாறு:

பூமிக்கு அடியில் பரவியிருக்கும் நீர் ஊற்றுக்கண் வழியாக வெளிப்படுவது போல், எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவருள் கடாட்சம் நமக்காக வெளிப்படும் இடம் திருக்கோயில்கள். நம் மனதைச் செம்மைப்படுத்தி, செயல்களைச் சிறப்பாக்கி வாழ்வைப் புனிதமாக்கும் வல்லமைகொண்டவை ஆலயங்கள்.
எனவேதான், நம் தேசத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் நாட்டு மக்கள் நன்மை அடையும்பொருட்டு, எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்தார்கள். அவ்வகை யில் சோழர்கள் அமைத்த ஆலயங்கள் பலவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நானிலம் சிறக்க நல்லருளைப் பொழிந்து திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அருள்மிகு பூமீஸ்வரர் திருக்கோயில்.

சோழா் காலத்து அரசியல் மற்றும் சமுதாய நிகழ்வு களை இன்றும் நமக்கு எடுத்துக்காட்டும் பொக்கிஷமாக விளங்கும் ஈசனின் இந்த ஆலயம்,  கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணம் நகாில் அமைந்துள்ளது.

தமிழா்களின் தொன்மையான நாகாிகம் மற்றும் பண்பாட்டுக்கு ஆதாரமான திருத்தலம் மரக்காணம். 2005-ம் ஆண்டில் இங்கு நிகழ்ந்த அகழ்வாய்வின் மூலம், இவ்வூரின் தொன்மைக்கு ஆதாரமான பல சான்றுகள் கிடைத்தன. சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள்,  மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அலெக்ஸாண்டிாியா நாட்டின் வணிகா் ஒருவரால் எழுதப்பட்ட நூல் `செங்கடல் பயணக் கையேடு'. இதில், `சோபட்மா' என்று குறிப்பிடப்படும் மரக்காணம் துறை முக நகரமாகத் திகழ்ந்த தகவல் உள்ளது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்' என்று குறிப்பிடுகின்றன. `எயில்' என்பதும் `சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு `எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.

மரக்காணத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமீஸ்வராின் திருக்கோயில், திருமுறைகண்ட சோழ மன்னன் ராஜராஜனால் தஞ்சை பொியகோயில் நிா்மாணிக்கப்படுவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மரக்காணம் தலத்திலிருந்த ஈசனின் திருக்கோயில், அக்காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை  சீற்றத்தால் மண்மூடிப் போனதாகவும், பின்னா் மீண்டும் ராஜராஜ சோழனின் காலத்தில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிாியா்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.

மரக்காணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமீஸ்வரா், சோழர்கள் காலத்தில் ஸ்ரீபூமீஸ்வர தேவா், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வாா், திரு பூமீசுவரமுடையாா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனாா் என்று பல திருநாமங்களுடன் வணங்கப்பட்டதைக் கல்வெட்டு தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.

விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி எல்லையாகவும், புதுச்சேரி மாநிலம், செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது மரக்காணம். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கருங்கற்கலைக் கொண்டு கற்றளி முறையில் அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பூமீஈஸ்வரர் கோயில். இக்கோயிலின் வடக்கு புரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கற்களைகொண்டு கட்டப்பட்ட பெரியகுளம் உள்ளது. இப்பகுதி பண்டைய காலத்தில் எயிர் பட்டினம் என அழைக்கப்பட்டது. எயிர் என்றால் அரண் என்று பொருள் ஆகும். கி.மு 300 ம் ஆண்டு இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகபட்டினமாக திகழ்ந்துள்ளது. அதன் பிறகு ஒய்மா நாட்டு நல்லியகோடன் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது. அந்த மன்னன் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இதனால் இந்த மன்னன் கிடங்கல் கோமான் எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.

#புராண முக்கியத்துவம் :

கோயிலில் 47 கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் விஜய ராஜேந்திரன் ராஜாதிராஜா சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர வம்சம்.

சிவபெருமான் பூமீஸ்வர தேவர், பொம்மீஸ்வரத்தாழ்வார், திருபூமீஸ்வரமுடைய நாயனார், பூமிஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரான் (விஜயநகர காலம்) என்று அழைக்கப்பட்டார். கல்வெட்டின்படி மரக்காணம் இராஜராஜ பேரளம், பட்டினம், எயில் பட்டினம், கண்டராதித்த நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்காணம் பட்டின நாட்டுக்கு உட்பட்டது, ராஜராஜ சோழன் காலத்தில், கண்டரரித்த நல்லூர் பட்டின நாட்டில், விஜய ராஜேந்திர சோழ வளநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்தது. விக்ரம சோழன் காலத்தில் மரக்காணம் பிராமணர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுகள் சில இந்த இடத்தை மணற்கானம் என்று குறிப்பிடுகின்றன, கடற்கரை மணல் மற்றும் பின்னர் மரக்காணம் திரும்பியது.

புராணத்தின் படி, சிவபெருமான் முனிவர் வடிவில் ஒரு பக்தரின் வீட்டிற்கு வந்தார். பக்தர் உணவு அளித்தபோது, முனிவர், பூஜை செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வார் என்றார். பக்தர் தனது மரக்கால் (நெல் அல்லது உப்பை அளவிடும் பாத்திரம்) தலைகீழாக வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பூஜை முடிந்து முனிவர் உணவு உண்டுவிட்டு கிளம்பினார். பக்தர் அகற்ற முயன்றார் ஆனால் முடியவில்லை. மாறாக காணாமல் போனது. இதைப் பார்த்த பக்தர் மரக்கால் காணோம் என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் அவர் கடலோரத்தில் உள்ள மரக்காலை கண்டு அங்கு  கோவிலைக் கட்டினார். “மரக்கால் காணோம்”, பின்னர் மரக்காணம் என்று மாறியது.

 
 இங்கு அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்ககோயில் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி 996 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலை கட்டியுள்ளனர். அப்போது இந்த ஊர் ஒய்மா நாட்டு பட்டினநாட்டு பட்டனமான மரக்காணம் என அழைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ராஜேந்திரசோழன் காலத்தில் ஒய்மா நாட்டு பட்டன நாட்டு பட்டனம் என அழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க மன்னர் காலத்தில் மீண்டும் எயிர்பட்டினம் என அழைத்துள்ளனர். அதன் பிறகு விஜயராஜமன்னன் கம்பண்ண உடையார் ஆட்சியின் போது மரக்காணம் என பெயர் மாற்றி அழைத்துள்ளனர்.
 இந்த கோயிலின் தல விருட்சம் வில்வம். இத்தனை வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலின் தெற்குபுரத்தில் பிச்சாடனார், தட்சணாமூர்த்தி சிலைகளும், மேற்கு பக்கம் விஷ்ணு சிலையும், வடக்குபக்கம் பிரம்மன் மற்றும் துர்க்கையும் அமைந்துள்ளது. இது போல் இந்த கோயிலை தினமும் வந்து தரிசனம் செய்தால் நிலம் சம்மந்தமான பிரச்னைகள் தீரும். பூமி வாங்கவும், விற்கவும் பூமி சம்மந்தமான கோயில் என்பதால் பூமீஈஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். 
இங்குள்ள சிவலிங்கம் தான்தோன்றி லிங்கம் என்று கூறுகின்றனர். இந்த கோயிலுக்கு கூறப்படும் சிறப்புக்கள் ஒருவர் தனது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த கோயிலுக்கு வந்து இங்கு இருக்கும் சிவனை வணங்கிவிட்டு கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து சென்று பிரச்னை உடைய நிலத்தில் தூவினால் சில நாட்களிலேயே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.
 கோயிலின் உட்பகுதியில் கிரிஜாம்பாள் கோயில் அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள், காலபைரவர், முருகப்பெருமான் சித்தி வினாயகரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோயிலின் எதிர் புறத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய கொடிமரம் மற்றும் நந்தீஸ்வரர் சிலையும் உள்ளது. மேலும் கோயிலின் எதிர்புறம் சூரியன், சந்திரன் இணைந்த நிலையில் தனியாக சிறிய கோயிலும் அழைந்துள்ளது. இந்த சிற்பங்கள் தற்போதும் சிறிதுகூட சேதம் அடையாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது. இந்த கோயிலில் மாதம் இரண்டு முறை பிரதோஷ விழா நடத்துகின்றனர். இந்த பிரதோஷ விழாவில் மரக்காணம், புதுவை, சென்னை, செங்கல்பட்டு போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். மேலும் மாழ்கழி மாதத்தில் நடத்தப்படும் ஆருத்ரா விழாவும் மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

சிறப்பு அம்சங்கள்:
 கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைவாயிலுக்கு முன் அடிவாரத்தில் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் விஜயநகர காலத்தைச் சேர்ந்தது. கருவறைக்கு முன்பாக தீபஸ்தம்பம், பலிபீடம், துவஜ ஸ்தம்பம், நந்தி மண்டபம் மற்றும் நவகண்ட நடுகல் ஆகியவற்றைக் காணலாம். கருவறையில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், ஒரு முக மண்டபம் மற்றும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் இரண்டு மண்டபங்கள் உள்ளன.

சன்னதி பாதபந்த அதிஷ்டானம். மூலஸ்தானம் பூமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அவர் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். பிக்ஷதான (விநாயகருக்குப் பதிலாக), தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியவை கருவறைச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள கோஷ்ட சிலைகள். துர்க்கை (6 கைகளுடன்) குடை, மாலை மற்றும் 2 துவாரபாலகிகளுடன் காட்சியளிக்கிறார். பிரதான சன்னதியைச் சுற்றிலும் பல கல்வெட்டுகள் உள்ளன. நுழைவு வளைவுக்குப் பிறகு வலது பக்கத்தில் சந்திரன் மற்றும் சூரியன் சன்னதி உள்ளது.

முன் மண்டபத்தில் கர்ணபூஷண விநாயகர், நந்தி, லக்ஷ்மி விநாயகர் ஆகியோரைக் காணலாம். கருவறையின் நுழைவாயிலில் சோழர் கால துவார பலகைகள் காணப்படுகின்றன. உற்சவ சிலைகள் (சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், அம்மன் கிரிஜாம்பிகை மற்றும் காளி) அந்தரளத்தில் அமைந்துள்ளன. இடது மண்டபத்தில் நால்வர், 3 விநாயகர் சிலைகள், சப்தமாதாக்கள், அய்யனார் ஆகியோரைக் காணலாம். அர்த்தமண்டபத்தில் நவகிரகங்கள் மற்றும் பைரவர் உள்ளனர். பைரவரின் உடலில் சேவை முடிகள், காதணிகள், வளையல்கள் மற்றும் கணுக்கால்கள் மற்றும் உடலின் பிற ஆபரணங்களுடன் முறுக்கப்பட்ட நாகங்கள் உள்ளன. பைரவர் புலித் தோலை உடுத்தி, மனித எலும்புகளுடன் தனது நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார்.

தாயார் கிரிஜாம்பாள் / கிரிஜாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். அவள் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். அபய ஹஸ்தத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் வழக்கத்திற்கு மாறாக அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், அவரது துணைவியார் வள்ளி, தேவசேனா மற்றும் சிவலிங்க சன்னதிகள் உள்ளன. விஷ்ணு சிவனை வழிபடும் சிற்பங்களும், சிறுத்தொண்ட நாயனாரின் வரலாற்றை விளக்கும் சிற்பங்களும் சோழர்களின் தலைசிறந்த படைப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள். கோவிலில் 3 பெண்களின் நடனக் காட்சியைக் காட்டும் சிற்பம் உள்ளது. 3 பெண்களுக்கு 4 கால்கள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன, ஆனால் தனித்தனியாக கவனிக்கும்போது, ஒவ்வொரு பெண்ணும் 2 கால்களுடன் இருப்பதைக் காணலாம். சோழர்களின் அற்புதமான சிற்பம் இது. இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இது கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ளது.

#கல்வெட்டுகள்:

கோயிலில் 47 கல்வெட்டுகள் உள்ளன. ராஜராஜசோழ-I, ராஜேந்திர சோழ-I, விஜய ராஜேந்திரன் ராஜாதிராஜா சோழ-I, குலோத்துங்க சோழ-II மற்றும் III மற்றும் விஜயநகர வம்சம்.

சிவபெருமான் பூமேஸ்வர தேவர், பொம்மேஸ்வரத்தாழ்வார், திருபூமேஸ்வரமுடைய நாயனார், பூமிஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரான் (விஜயநகர காலம்) என அழைக்கப்பட்டார்.

கல்வெட்டின்படி மரக்காணம் இராஜராஜ பேரளம், பட்டினம், எயில் பட்டினம், கண்டராதித்த நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்காணம் பட்டினநாட்டின் கீழ் வந்தது, ராஜராஜ சோழன் காலத்தில், கண்டரித்த நல்லூர் பட்டினநாட்டில், விஜய ராஜேந்திர சோழ வளநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலம். விக்ரம சோழன் காலத்தில் மார்க்கானம் பிராமணர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுகளில் சில இந்த இடத்தை மணற்கானம் என்று குறிப்பிடுகின்றன, கடற்கரை மணல் மற்றும் பின்னர் மரக்காணம் திரும்பியது.

கல்வெட்டுகள் முக்கியமாக 2 விளக்கு எரிப்பதற்காக உப்பளத்தின் மீதான வரி தளர்வு, விளக்கு எரிக்க செம்மறி ஆடு பரிசு, நந்தவனத்திற்கு நிலம் விற்றது பற்றி பேசுகிறது. 

செல்வது எப்படி?
புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் பூமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது.

   
திருச்சிற்றம்பலம் 🙏🙇

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...