Showing posts with label #Appar #sivan #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #Appar #sivan #hindu #india #tamilnadu. Show all posts

Thursday, May 11, 2023

திருநாவுக்கரசர் (திருவையாறு குளத்திலிருந்து வெளிப்பட்ட அற்புத நிகழ்வு)*

திருநாவுக்கரசர் (திருவையாறு குளத்திலிருந்து வெளிப்பட்ட அற்புத நிகழ்வு)
*
முக்கண் முதல்வரின் ஆணையை ஏற்று, இறைவர் கயிலையில் தோற்றுவித்த குளத்தில் மூழ்கி, மறுகணமே திருவையாற்றுத் திருக்குளத்தினின்றும் வெளிப்பட்டு வருகின்றார் நம் அப்பர் சுவாமிகள். 'ஆதிப் பரம்பொருளான சிவபெருமானின் திருவருள் பெருமையை யாரே அறிந்துணர வல்லார்?' என்று இந்நிகழ்வினை வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார்.  
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 371)
ஆதி தேவர்தம் திருவருள் பெருமை யார்அறிவார்
போத மாதவர் பனிவரைப் பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும் ஐயாற்றிலோர் வாவி
மீது தோன்றி வந்தெழுந்தனர் உலகெலாம் வியப்ப
*
சுவாமிகள் கரைக்கு வந்து 'கயிலை நாயகரின் திருவருளும் இதுவோ?' என்று விழிநீர் பெருக்கி நெகிழ்கின்றார் ('இறைவர் தன் அருளினால் கயிலையில் ஒரு குளத்தைத் தோற்றுவிக்க, நம் சுவாமிகளோ இங்கு இறைவர் மீதுற்ற அன்பினால் (தன் கண்ணருவி கொண்டு) ஒரு பொய்கையைத் தோற்றுவிக்கின்றார்' என்றிதனைச் சேக்கிழார் பெருமான் நயம்பட விவரித்துப் போற்றுகின்றார்).   
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 372)
வம்புலா மலர் வாவியின் கரையில் வந்தேறி
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார்
எம்பிரான் தரும் கருணைகொல் இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியில் படிந்தெழும் படியார்
*
குளக்கரையிலிருந்து திருவையாறு திருக்கோயில் நோக்கிச் செல்லுகையில், யானை; கோழி; குயில்; பேடை; மயில்; பகன்றில்; மான்; நாரை; கிளி; காளை இவைகள் யாவும் தத்தமது துணையோடு விளங்கியிருக்கக் காண்கின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 373)
மிடையும் நீள்கொடி வீதிகள் விளங்கிய ஐயா(று)
உடைய நாயகர் சேவடி பணிய வந்துறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவுமான
புடை அமர்ந்ததம் துணையொடும் பொலிவன கண்டார்
*
காட்சி யாவும் சிவசக்தி மயமாய் விளங்கக் காண்கின்றார். எத்திசையிலும், எவ்வுயிரிலும் சிவசக்தியர் உயிர்க்குயிராய் எழுந்தருளி இருப்பதை காட்சி பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் தரிசித்தும் உணர்ந்தும் சிவானந்தம் எய்தியவாறே, ஐயாறு ஆலய வாயிலை வந்தடைகின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 374)
பொன் மலைக் கொடியுடன்அமர் வெள்ளியம் பொருப்பில்
தன்மையாம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயில்முன் வந்தார் 
🕉திருச்சிறம்பலம் சிவசிவ 🕉

#திருப்பாதிரிப்புலியூர் #பாடலீஸ்வரர் திருவருளால் கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறிய #அப்பர்_பெருமான்....

#திருப்பாதிரிப்புலியூர் #பாடலீஸ்வரர் திருவருளால் கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறிய 
#அப்பர்_பெருமான்....
(திருநாவுக்கரசர்) ஐதிக விழா இன்று:
 

"சொற்றுணை வேதியன்
  சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
  பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
  கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
  நமச்சி வாயவே"

#கடலூர் #திருப்பாதிரிப்புலியூர்
 அருள்மிகு  பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரர் திருக்கோவில் சித்திரை மாத அனுஷம்நட்சத்திரம் #அப்பர்பெருமான்
(7-5-2023) கரையேறவிட்டகுப்பம் அப்பர் பெருமான் கரையேறிய ஐதீக உற்சவம் இன்று  காலை சிறப்பாக நடைபெற்றது 🙏🙏🙏

புராண வரலாறு:

திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும்
கல்லில் கட்டி கடலில் விட்டது
பாடலிபுத்திரத்தில் பல்லவராஜன் சமணர்களின் வேண்டுகோளின்படி திருநாவுக்கரசு நாயனாரை ஒரு கல்லாேடு கட்டி சமுத்திரத்திலே விடச் செய்தனர். அப்போது அவர் அருளிய பதிகம் ” சொற்றுணை வேதியன் ஜோதிவானவன் “
சிவது திருவருளையும் பஞ்சாட்சரப் பெருமையையும் ஒருங்கே உணர்த்துவது இப்பதிகம் ,இப்பதிக வரலாற்றை திருநாவுக்கரசரின் உள்ளப்பாங்கை நன்கு புரிந்து கொண்டு பாடிய சேக்கிழார் சுவாமிகள் அரிய உண்மை ஒன்றை கூறியிருக்கிறார். ” ஒப்படும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண்டமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து துதிப்பார் “
சமணர்கள் அப்பர்அடிகளை கல்லுடன் கட்டி கடலில் இட்டதும்கல்லுடன் சேர்ந்த அப்பர்சுவாமிகள் ஆழ் கடல் புக்கார் அதாவது கல்லுடன் கடலின் அடிப்பாகத்தை அடைந்து விட்டார் அப்படி அமிழ்ந்த நிலையில் முன்பு மூன்று தடவை சிவபெருமான் காத்தருளியது போல இப்போது காப்பாற்றாது விட்டாலும் விடக்கூடும்.

அப்படி சிவன் காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை சிவபெருமானை திருவைந்தெழுத்தால் துதிப்பாேம் என்ற மனப் பான்மையில் இப்பதிகத்தை பாடஆரம்பித்தார். ஆனால் முதலாவது பாடலின் கல்துணைப் பூட்டி ஓர் கடலின் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே என்றுள்ள பகுதி அப்பரின் மனநிலை மாறி நம்பிக்கை ஏற்பட்டதை காட்டுகின்றது. கல்லில் கட்டிய அப்பர் அடிகள் ஆழ் கடலாயிருந்தும் மிதக்க தொடங்கினா்.
இப்பதிகத்துள்ள ஒவ்வொரு பாடலும் சிறந்த விளக்க உரைக்குரிய செறிவானபகுதிகளைக் கொண்டது
நாவினுக்கு அருங்கலம், நடுக்கத்தை கெடுப்பது, நங்களுக்கு அருங்கலம் போன்ற தொடர்கள் சைவ மக்களுக்கு தமிழ் திருமுறைகளும் கிடைத்த விலை மதித்தற்கரிய மணிக்கல்கள் என்பன.
கடவுள் நம்மை காப்பாற்ற மாட்டார் என அவ நம்பிக்கை உண்டான வேளையும் நாம் திருமுறை பாராயணம் செய்யும் முயற்சித்தால் தீமை அகலும் இன்பம் பெருகும் என்ற நம்பிக்கை ஊட்டும் முகத்தான் அமைந்ததே இப்பதிகம்
திருச்சிற்றம்பலம் 🙏

🙇🙇🙇

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...