Showing posts with label #kolanjiappar Temple #Murugan Temple #Hindu temple #Virudhachalam #Cuddalore #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #kolanjiappar Temple #Murugan Temple #Hindu temple #Virudhachalam #Cuddalore #Tamil Nadu #India. Show all posts

Tuesday, September 2, 2025

பிராது கட்டினால் வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்.

*பிராது கட்டினால் வேண்டுதலை நிறைவேற்றும் முருகப்பெருமான்*
விருத்தாச்சலம் அருகே மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இத்தலத்தின் நாதன் முருகப்பெருமான் தனது பக்தர்களுக்கு, மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்வதாக ஐதீகம். இதற்காக இத்தலத்தில் பிராது கட்டுதல் என்ற ஒரு வழிபாடு இருக்கிறது. பிராது கட்டுவதற்காக கோவில் பிரகாரத்தில் முனீஸ்வரன் சன்னதி அருகே ஒரு இடமும் இருக்கிறது.

அதாவது மேலதிகாரிகளுக்கு நாம் எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போன்று இந்த நேர்த்திக்கடன் அமைந்துள்ளது. கோவில் அலுவலகத்தில் கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன், என் பெயர் இது... என்பன போன்ற முழுமையான விவரங்களை எழுதி, தனது குறை, கோரிக்கைகள் என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்பு அதை கொளஞ்சியப்பர் சன்னிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுக்க வேண்டும்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்டவேண்டும். நியாயமான கோரிக்கைகளை முருகப்பெருமான் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. நாம் எந்த ஊரில் இருந்து வருகிறோமோ அந்த இடத்திற்கும், கோவிலுக்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து, ‘‘இந்த தேதியில் நான் வைத்த பிராது கட்டுதல் வேண்டுதல் நிறைவேறியதால், அதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்’’ என கூறி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

குழந்தை வரம் கிடைக்க, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள் மற்றும் ஏமாற்றப்பட்ட பணம் கிடைக்க, வேலை மாறுதல் கிடைக்க, குடும்ப கஷ்டம் தீர, பிரிந்திருக்கும் கணவன் - மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் விலக என பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து பிராது கட்டுகின்றனர்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...