Wednesday, June 3, 2026

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்

உலகப் புகழ்பெற்ற 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
திருமால் வராக வடிவில் ஈசனை வழிபட்ட தலமாகவும்,
சிவபெருமானே நேரில் வந்து "அவள் இவள்" என்ற சாட்சி சொன்ன இடமான, பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திருஅவளிவநல்லூர் என்ற #அவளிவணல்லூர் 
(புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,
#அவளிவள்நல்லூர்)
#சாட்சிநாதர் என்ற ஸ்ரீகம்பரிஷியுடையார்
#சௌந்தர_நாயகி என்ற 
சௌந்தர வல்லி
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது.
காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும்.
திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வராகமூர்த்தியும் (திருமால்) காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.
#கோயில்_குறிப்புகள்:

*மூலவர் : சாட்சிநாதர், தம்பரிசுடையார்.

*அம்மன்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.

*தல மரம்: பாதிரி

*தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.

*புராண பெயர்கள்: புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,அவளிவள் நல்லூர்,அவளிவநல்லூர்

ஊர்: அவளிவநல்லூர்

மாவட்டம்: திருவாரூர் 

*பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர் மற்றும் சேக்கிழார் , வள்ளலார் 

#அவளிவள்நல்லூர் தேவாரப் பாடல்கள்:

1."கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித்
தம்பரிசி நோடுசுடு நீறுதட வந்திடபம் ஏறிக்
கம்பரிய செம்பொனொடு மாடமதில் கல்வரைவி லாக
அம்புஎரிய வெய்தபெரு மான்உறைவது அவளிவள் நல் லூரே
          ...... திருஞானசம்பந்தர்

2."தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று
வீற்றினை யுடையவனாகி வெடுவெடுத்து எழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவள் இவள் நல்லூரே.
     ...... திருநாவுக்கரசு சுவாமிகள்
                                                            

3.-“ சரதத்தால்
ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி
ஓதும் அவளிவணல் லூருடை யோய்”
                ___வள்ளலார்

#பஞ்ச_ஆரண்ய தலங்கள்:

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்யத் தலங்கள் என்று ஐந்து திருத்தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து திருத்தலங்களை வரிசையாகச் சொல்வதானால்

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்காலம்
2. அவளிவணல்லூர் (பாதிரி வனம்) -  காலை.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் -  உச்சிக்காலம்.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாமம்

#தல வரலாறு:

இத்தலம் "புல்லாரண்யம்", "சட்சிநாதபுரம்", "பத்திரிவனம்" என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு, பிரம்மா, காஷ்யப  மகரிஷி, முருகன், சூரியன், அகஸ்தியர், கண்வ மகரிஷி ஆகியோர் இக்கோயிலின் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது .

மகா விஷ்ணு, வராக அவதாரத்தின் போது , அவருடைய கொம்பு உடைந்துவிட்டது . அதனால் அவர் இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு முன்பைப் போலவே கொம்புகளை அருளினார். காஷ்யப மகரிஷியும் இந்தக் கோவிலின் சிவபெருமானை வழிபட்டார். 

பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.

சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு.

பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது.

வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப்பேறு பெற்றார்.

*தல வரலாறு: 

பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.

தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

இக்கோவிலில், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டு சோழர் காலத்தவை. மற்றவை மிகச் சிதைந்துள்ளன.

முல்லைவனமாகிய 
திருக்கருகாவூரில்   
உஷக் காலத்திலும், 
பாதிரி வனமாகிய 
அவளிவ நல்லூரில்   
கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்  )   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்  ) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், குரு, சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.

*அனுஷம் நட்சத்திர நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத சருமப் பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.

*பரணி நட்சத்திரம் அல்லது பூராடம் நட்சத்திர நாளில் சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி தினையை நைவேத்தியம் கொடுத்தால் எப்பேர்பட்ட கண் பிரச்னைகளும் ஒரு கண் பார்வை பிரச்னையாக இருந்தாலும் விரைவாக குணமடையும்.

*புனர்பூசம் நட்சத்திர நாளில் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு மாமரத்தில் செய்யப்பட்ட சிறிய தொட்டில் செய்து வெண்பட்டு அல்லது மஞ்சள் பட்டுநூலால் இம்மரத்தில் கட்டி பின்பு பார்லி அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் தொடர்ந்து மூன்று மாதம் செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.

*கர்ப்பிணி பெண்களும் சுவாமிக்கு பார்லி அரிசி நைவேத்தியம் பிரசாதத்தை சாப்பிட்டுவந்தால் சுகப்பிரசவம் உண்டாகி நல்ல படியாக குழந்தை பிறக்கும்.

*இத்திருத்தலத்தில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் கணவன் - மனைவி பிரச்னை தீரும். கணவன் - மனைவி ஒன்றுபட்டு வாழ்வர்.

பௌர்ணமி நாளில் மஹா வில்வச் செடியை இக்கோயிலில் நட்டு அதனைப் பாதுகாப்பாக வளர்த்தால் வில்வம் வளர வளர உங்களின் கர்மா குறைந்து வாழ்வில் சுபகாரியங்கள் உண்டாகும்

 
*கல்வெட்டுகள்:

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசுவின் சுவாமிகளும் இக்கோயிலின் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருப்பதால், மூலக்கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம். இக்கோயில் சோழர் காலத்தில் கற்கருவியாகப் புனரமைக்கப்பட்டு, நாயக்கர் / மராட்டியர் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இக்கோயிலில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுகள் குலோத்துங்க சோழ-III ( கி.பி. 1246 – 1279) க்கு சொந்தமானது. நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்து அவளிவநல்லூரில் உள்ள சிவபெருமான் இருந்த இத்தலம் “தம்பரிசுடையார்” என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது  .

இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், மூன்றாம் ராஜராஜ சோழனின் மகனான மூன்றாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1246 – 1279) 7 -வது மற்றும் 22 -வது ஆட்சிக் காலங்களைச் சேர்ந்தவை. மேலும், மன்னரின் பெயரும் காலமும் குறிப்பிடப்படாத சில சிதைந்த, சேதமடைந்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.  கல்வெட்டின்படி, சிவபெருமான் “தாம்பரீசுதய நாயனார்” என்று அழைக்கப்பட்டார்.

மூன்றாம் ராஜேந்திர சோழனின் 7 ஆம் ஆண்டு கல்வெட்டு, யாசித்த பிறகு விளக்கேற்றியதையும் (..?), சேவையின் போது அதன்  பல பகுதிகள் சேதமடைந்ததையும் பதிவு செய்கிறது. மற்றொரு 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, நிலம் தானமாக வழங்கப்பட்டு விளக்கேற்றப்பட்ட கொடையைப் பதிவு செய்கிறது (அந்தக் கல்வெட்டு முழுமையடையாமலும் சேதமடைந்தும் உள்ளது).

மூன்றாம் இராஜராஜ சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்துஅவளிவநல்லூர் தம்பிசுதய நாயனார் கோயில்,  விநாயகர், அம்பேரிந்தப் பெருமான் (திருப்புராந்தகர் என சிவபெருமான் இருக்கலாம்), நாச்சியார், ஆட்கொண்டநாயக்கர் மற்றும் நாச்சியார், பள்ளியாருடைய நாச்சியார், ஆலியாருடைய நாச்சியார் ஆகியோரால் நிறுவப்பட்டது. அமரகோன் என்கிற தம்பிசுடையான் ஆதிச்ச தேவன்.

மார்கழி மற்றும் சித்திரைத் திருநாளைக் கொண்டாட ஏமலூருடையான் திருப்பங்குடையான் திருவந்தானின் தந்தையான கிளியுடையான் அனுக்கன் (கல்வெட்டு பல பகுதிகளிலும் சேதம் அடைந்துள்ளது) என்பவரால் வாங்கிய நிலத்தை தானமாக அளித்தார்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*செல்லும் வழி:

கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்

உலகப் புகழ்பெற்ற  தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், திருமால் வராக வடிவில் ஈசனை வழிபட்ட தலமாகவும், சிவபெருமானே ...