Monday, June 15, 2026

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன .
கால பைரவர் சிவபெருமான் சார்பாக நவக்கிரகங்களையும் மனிதர்களையும் நிர்வாகம் செய்து வருகிறார்.

அதனால் கால பைரவருக்கு கால தேவன் என்று ஒரு பெயர் உண்டு.

காலபைரவர் உடைய மூச்சுக்காற்றுதான் வாக்கிய கணித பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று விரிவடைகிறது.

கர்மவினையை நீக்குவதற்கு அதுவும் நம்முடைய முற்பிறவி கர்மவினைகளை  ஒரே பிறவியில் நீக்குவதற்கு பைரவர் வழிபாடு  செய்ய வேண்டும்.

பைரவ மந்திரம் தினமும் 108 முறை எழுதி வர வேண்டும்.

மிக வேகமாக வரம் தரும் கடவுள்களில் பைரவர் வராகி காளி சின்ன மஸ்தா பிரித்திங்கரா தேவி பத்ரகாளி அங்காள பரமேஸ்வரி ருத்ரகாளி மகாகாளி போன்ற தெய்வங்கள் முதன்மையானவை.

தமிழ்நாட்டில் காலபைரவருக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

இந்த எட்டு படை வீடுகளும் சிவன் கோயில்களாக உள்ளன.

இந்த கோயில்களில் மூலவராக சிவலிங்கம் இருக்கிறது.

அப்படி சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்க வடிவத்தில் காலபைரவர் தான் இருந்து அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.

போன மூன்று பிறவிகள் முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்திருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு செய்ய முடியும் 

அல்லது 

போன மூன்று பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் மட்டுமாவது சித்தர் ஒருவருடைய நேரடி சீடராக 40 வருடங்கள் வரை வாழ்ந்து இருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு  நமக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சிவனும் பைரவரும் ஒருவரே என்பதை  நிரூபணம் செய்வதற்காக எட்டு படை வீடுகளில் சிவலிங்க வடிவத்தில் காலபைரவப் பெருமான் அருள் பாலித்து வருகிறார்.

 1.திருக்கோவிலூர் சிவன் கோயில்

2.பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை சிவன் கோயில்

 3 .தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் எட்டாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்டியூர் அருள்மிகு  பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோயில்(ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய பைரவர் கோயில் இது)

4. திருக்கடையூர் காலசம்கார மூர்த்தி கோயில் மற்றும் திருக்கடையூர் மயானம் என்ற சிவன் கோயில்

5. மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பனார்கோயில்

6. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்(அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய அனுஷ நட்சத்திர பைரவர் கோயில் இது)

7. திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவிற்குடி (இங்கேதான் மகாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தை மகா கால பைரவ பெருமான் வழங்கினார்)

8. மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொறுக்கை

இங்கேதான் ஈசனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட நெருப்பு மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. இந்த கோயிலுக்கு அருகில் ஒரு தென்னந்தோப்பு அமைந்துள்ளது. அங்கு இன்றும் மன்மதனின் சாம்பல் இருக்கிறது.

நிறைவாக சிதம்பரம் சென்று அங்கே உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த எட்டு கோயில்களையும் தரிசனம் செய்வதற்கு குறைந்தது 4 நாட்கள் ஆகும் .

இந்த கோயில்களுக்கு சென்று வந்தால் போதுமானது சென்று வழிபட்டு வந்தால் போதுமானது.

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் பைரவ மந்திரத்தை கீழே கொடுக்கின்றோம் .

 இந்த கோயில்களில் ஒரு மணி நேரம் வரை அமர்ந்திருக்க வேண்டும்.

 அவ்வாறு அமர்ந்திருந்து  உங்களுடைய ஜென்ம நட்சத்திர கால பைரவ மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜெபிக்க வேண்டும்.

 இதன் மூலமாக மிகப் பெரிய அளவில் உன்னுடைய கருமவினை குறைந்து விடும் என்பது உறுதி.

 இந்த எட்டு கோயில்களுக்கும் நீங்கள் சென்று வழிபட்டு முடித்து ஒரு வருடம் ஆக வேண்டும் .

அதன் பிறகு உங்களுடைய போன நான்கு முற்பிறவி பற்றிய உண்மை ரகசியங்கள் உங்களைத் தேடி வரும்.

 எனக்கு அவ்வாறு கிடைத்தது !!!

அந்த அனுபவத்தை உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

 அடியேனது குரு அகத்தியரின் ஆணைப்படி இதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

நம்முடைய ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

வார தாரக சித்தர் என்பவர் பைரவ உலகத்தில் வாழ்ந்து வரும் தலைமை பைரவ சித்தர் ஆவார்.

 இவரை உபாசனை செய்து தான் ஆரியபட்டர், பாஸ்கராச்சாரியார் போன்றவர்கள் அழியா புகழ் பெற்ற ஜோதிட நூல்களை இயற்றினார்கள்.

நாம் வாழ்ந்து வரும் இந்த பூமியில் 

24 மணி நேரம் என்பது ஒரு நாள் என்றும்
 ஏழு நாட்கள் என்பது ஒரு வாரம் என்றும்

 30 நாட்கள் என்பது ஒரு மாதம் என்றும்

 365 நாட்கள் ஒரு வருடம் என்றும்

 காலத்தை நிர்ணயம் செய்தவர் இவர் தான்!!!

 மகா காலபைரவர் பெருமாளின் பரிபூரண ஆசீர்வாதம் பெற்ற பைரவ சித்தர் இந்த வார தாரக சித்தர் ஆவார்.

 ஜோதிடராக இருக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலையில் இவரை ஒரு முறையாவது  நன்றியோடு நினைக்க வேண்டும்.

அசுபதி ,மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும். 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் வாரதாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் பிஷன பைரவாய நமஹ

பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ருரு பைரவாய நமஹ 

 கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமஹ

 ரோகிணி ,அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம்  ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் கபாலபைரவாய  நமஹ

மிருகசீரிடம், சித்திரை ,அவிட்டம் நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சண்ட பைரவாய நமஹ

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு  நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமஹ

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் அசிதாங்க பைரவாய நமக

பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் குறோதன பைரவாய நமக

ஆயில்யம் ,கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் உன்மத்தபைரவாய நமஹ

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன . கால பைரவர் சிவபெருமான் சார்பாக நவக்கிரகங்களையும் மனிதர்களையும் நிர்வாகம் செய்து...