Showing posts with label #Thadikombu Arulmigu Soundararaja #Perumal Temple #Hindu temple #Thadikombu #Tamilnadu #indial. Show all posts
Showing posts with label #Thadikombu Arulmigu Soundararaja #Perumal Temple #Hindu temple #Thadikombu #Tamilnadu #indial. Show all posts

Wednesday, August 28, 2024

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் தன்வந்திரி....

 தீராத நோய்களைத் தீர்க்கும் தன்வந்திரி விரதம் பற்றிய பதிவுகள் 
தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ‘தன்வந்திரி பகவான்’ தீராத நோய்களையும் தீர்த்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

உலகில் வாழும் மக்களை காத்தருள திருமால் எடுத்த அவதாரங்கள் 24 ஆகும். இதில் மிக முக்கியமான 10 அவதாரங்கள் தசாவதாரம் என அழைக்கப்படுகிறது. அவை 
1. மச்சம், 
2. கூர்மம்,
3. வராகம்,
4. நரசிம்மம், 
5. வாமனம், 
6. பரசுராமர், 
7. ராமர், 
8. பலராமர்,
9. கிருஷ்ணர்,
10. கல்கி.

இவை தவிர தத்தாத்தரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற பல்வேறு அவதாரங்களை திருமால் எடுத்து தன் அடியார்களை காத்து வருகிறார்.

ஒருமுறை துர்வாச முனிவரால் சாபத்திற்குள்ளானார் தேவேந்திரன். இதன் காரணமாக தேவேந்திரன் அனைத்து செல்வங்களையும் இழந்தார். 

இதனையடுத்து திருமாலின் அறிவுரையை ஏற்று தேவர்கள், அசுரர்கள் கூட்டு சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது மிகக்கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. இதனை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்தி கொண்டார். எனவே தான் சிவபெருமான் நீலகண்டன் ஆனார்.

தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட பல புனிதமான பொருட்கள் வந்தன. 

இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அமிர்த கலசத்தினை ஏந்தியவாறு பாற்கடலில் இருந்து தோன்றினார். தேவேந்திரனும் சாகா மருந்தான அமிர்த கலசத்தினை பெற்றுக்கொண்டு தான் இழந்த அனைத்தையும் பெற்று தேவலோகம் சென்றார்.. 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...