Showing posts with label #Sri Murugan valipadu #Murugan Temple #Hindu temple #Palani #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #Sri Murugan valipadu #Murugan Temple #Hindu temple #Palani #Tamilnadu #India. Show all posts

Monday, September 30, 2024

செவ்வாய்க்கிழமை முருகப் பெருமான் வழிபாடு சிறப்பு....

_செவ்வாய்க்கிழமை  முருகப் பெருமானை வழிபடலாம்._

 *ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்* 

ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

 *ஸ்ரீ வேல் காயத்ரி மந்திரம்*

 ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே கோடி சூர்ய பிர்காசாய தீமஹி தன்னோ சக்தி ப்ரசோதயாத்

தீமைகள் அனைத்தையும் ஒரு சேர அழிக்கும் கந்தனாகிய முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேல் எனும் வேலாயுதத்திற்கான காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் முருகப்பெருமானை மனதில் நினைத்து துதித்து வர நன்மைகள் உண்டாகும். முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் முருகன் சந்நிதிக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை துதிப்பவர்களுக்கு வீண் கவலைகள், அச்சங்கள், தயக்கங்கள் அனைத்தும் நீங்கும். துஷ்ட சக்திகள், மாந்திரீக ஏவல்கள் உங்களை அணுகாது. காரிய தடை, தாமதங்கள் நீங்கும். எதிர்பாரா விபத்துகளை தடுக்கும்.

நெருப்பின் நெருப்பான கோடி சூர்ய ஒளியுடன் பிரகாசிக்கும் வேலே. கந்தனின் கையிலிருந்து எல்லா வேளையும் காத்திடுவாய் கதிர்வேலே சரணம் என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் .. 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...