Showing posts with label #Jayamangala #Panchamukha #Anjaneya Swamy #hinduTemple #Lord Hanuman #Panchavati Village #Pondicherry #Tindivanam #Tamilnadu #india. Show all posts
Showing posts with label #Jayamangala #Panchamukha #Anjaneya Swamy #hinduTemple #Lord Hanuman #Panchavati Village #Pondicherry #Tindivanam #Tamilnadu #india. Show all posts

Wednesday, May 22, 2024

அருள்மிகு பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்....



*அருள்மிகு பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்*
 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும்.

*தல வரலாறு:*

ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

*தல சிறப்பு:*

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...