Showing posts with label #Sri Anjaneyar #Hanuman #Hanuman temple #Hindu temple #Vishnu Temple #Nanganallur #Chennai #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Sri Anjaneyar #Hanuman #Hanuman temple #Hindu temple #Vishnu Temple #Nanganallur #Chennai #Tamil Nadu #India. Show all posts

Saturday, August 9, 2025

ஆஞ்சனேயரின் பிரம்மாண்டம் நங்கநல்லூர் கோயிலின் அதிசயம்!

*ஆஞ்சனேயரின் பிரம்மாண்ட தரிசனம்: நங்கநல்லூர் கோயிலின் அதிசயம்!*
விஸ்வரூப அதிவ்யாதிஹார ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி கோயில் சென்னை நகரின் மையப் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நங்கநல்லூரில் அமைந்துள்ளது. சுருக்கமாக நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. அதன் முக்கிய தெய்வமான ஹனுமனிடமிருந்து இப்பெயரை இக்கோயில் பெற்றது.

இளம் வானரத்தின் பெண்ணான அஞ்சனாவின் மகன் என்பதால், இவர் ஆஞ்சனேயர் என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் மூலக்கல் 1989ம் ஆண்டு பக்தியுள்ள ஆஞ்சனேயர்களான ஸ்ரீ மாருதி பக்த சமாஜன் குழுவினரால் நாட்டப்பட்டது. இது இறுதியாக, 1995ல் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோயிலின் மிக முக்கியமான அம்சம் இங்குள்ள திரு உருவச்சிலையின் உயரம் 32 அடி ஆகும். ஹனுமன் சிலை ஒற்றை கிரானைட் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். ஆஞ்சனேயர் அல்லது அனுமனின் பக்தர்கள் மட்டுமல்லாமல், பிற பக்தர்களும் விரும்பும் திருக்கோயிலாக இது அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயில் சில தசாப்தங்களுக்கு சற்று பழைமையானது. கோயில் வளாகத்திற்குள், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் கோயில்களும் உள்ளன. இது இந்து மதத்தின் இரண்டு பெரிய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் ஹனுமன் இருப்பதைக் குறிக்கிறது. ராமாயணத்தில் ஹனுமன் தீவிர, 'ராம பக்தர்' ஆவார். மேலும், இலங்கையில் ராவணனுக்கு எதிரான போரில் ஸ்ரீராமர் வெற்றி பெறுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தவர்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.

அனுமனின் தீவிர பக்தர்களும் அவரது வழியைப் பின்பற்றுபவர்களுமான ஒரு சமூகத்தினரின் விருப்பத்தின் பேரில் இந்தக் கோயில் நிறுவப்பட்டது. ‘ஸ்ரீ மாருதி பக்த சமாஜன்’ என்பது இந்தக் குழுவின் பெயர். அவர்கள் 1989ம் ஆண்டு தெய்வத்தின் உயரமான சிலையை நிர்மாணித்தனர். மேலும், கோயில் உருவாக்கப்பட்ட பிறகு, சன்னிதி மற்றும் சிலை 1995ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அன்றிலிருந்து, ஆஞ்சனேய பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு வருகை தந்து வருகின்றனர். கோயிலின் பின்னணியில் இருந்த முக்கிய ஆர்வலர்கள் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார். தங்கள் வழிபாட்டுக் கடவுளுக்குக் கட்டடம் கட்டுவது அவர்களின் ஆன்மிக அழைப்பாகும். இந்தக் கோயில் இப்போது இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

இந்தக் கோயிலில் ஐந்து முக்கிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒன்று ஸ்ரீ ராமநவமி, இது ஸ்ரீ ராமரின் பிறந்த நாளாகும். இதற்கு அனுமன் ஜயந்திக்கு அடுத்தபடியாக மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வாயு பகவானால் அருளப்பட்ட அஞ்சனைக்கு அனுமன் பிறந்த நாள் இது. ஒன்பது நாட்களும் விஜயதசமி அல்லது நவராத்திரி விழாக்களும் இங்கு மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றன. மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததைக் குறிக்கும்
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி மற்றும் பவித்ரோத்ஸவம் ஆகியவை விஸ்வரூப ஆதிவ்யாதிஹாரா ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி கோயிலில் பெரிய நிகழ்வுகளாகும்.

அடிப்படை பூஜை, அர்ச்சனைக்கு 10 ரூபாய் பெறப்படுகிறது. அதைத் தவிர, தங்கம், வெள்ளி மற்றும் புடைவைகள் மற்றும் வேட்டிகள் போன்ற பொருட்களும் ஹோமம், யாகம். தீப யாகம் போன்றவை மூலமும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்தலாம். இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 5 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையுமாகும். கோயில் நுழைவுக் கட்டணம் என்று எதுவும் கிடையாது. இந்துக்களாகப் பிறந்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது இத்திருக்கோயிலுக்குச் சென்று ஹனுமனை வழிபட்டு வாழ்வில் நலத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...