Showing posts with label #Naga Linga flower #Sivan flower #Sivan temple #Hindu temple #pooja flower #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Naga Linga flower #Sivan flower #Sivan temple #Hindu temple #pooja flower #Tamil Nadu #India. Show all posts

Tuesday, September 10, 2024

நாகலிங்க பூவால் நாம் செய்யக்கூடிய சிவலிங்க பூஜை முழுமை பெறும்...

*சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.* நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.நீண்ட கால் நோய் தீர சிவமந்திரத்தையும், தேவாரப் பாடல்களையும் பாடி வழிபட வேண்டும்.

சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.
நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
நீண்ட கால் நோய் தீர சிவமந்திரத்தையும், தேவாரப் பாடல்களையும் பாடி வழிபட வேண்டும்.

சிவலிங்க பூஜைக்கு உதவக்கூடிய பொருட்களில் மிகமுக்கியமானதாக நாகலிங்க பூ பார்க்கப்படுகிறது. இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.
நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

நாகலிங்க பூ சூட்சமம் :
நாகலிங்க பூவை ஒருவர் தொட வேண்டுமெனில் அவர் சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை உச்சரித்த பின்னரே தொட வேண்டும். அப்படி நாகலிங்க பூவை கையில் எடுத்த பின்னரே அவர் 21 நபருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்யும் போது அதை 21 மாத்ருக ரிஷிகள் சூட்சமமாக பெற்றுக் கொள்வதாக நம்பிக்கை.

: மகா சிவராத்திரியில் செய்ய வேண்டிய நான்கு ஜாம பூஜைகளும், செய்ய கூடாத முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா?

நாகலிங்க பூ பூஜைமுறை:
பிறகு தான் நம்முடைய கையில் இருக்கக்கூடிய நாகலிங்க பூவை சிவலிங்கத்தின் மீது வைக்க வேண்டும். அப்படி செய்வதால் மட்டுமே நாகலிங்க பூவால் நாம் செய்யக்கூடிய சிவலிங்க பூஜை முழுமை பெறும், முழு பலன் கிடைக்கும்.

சிவலிங்கத்திற்குச் சூட்டிய நாகலிங்க பூ வாடிய பின்னரும் அதை நாம் குளித்துவிட்டு தான் எடுக்க வேண்டும். இறைவனுக்கு சூடப்பட்ட நாகலிங்க பூவை ஓடு ஆறு அல்லது கடலில் போட வேண்டும்.

நாகலிங்க பூவையே நாம் சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜிக்கலாம்.

சிவலிங்க பூஜையில் சாற்றப்பட்ட நாகலிங்க பூவை நாம் பிரசாதகமாக பெற்றுக் கொண்டு வீட்டின் பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன் வைத்து வழிபடலாம்.
நாகலிங்க பூவை வழிபாட்டால் நீண்ட கால தீராத நோய் தீரும். மன வேதனை குறையும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...