Thursday, June 11, 2026

சேரன்மகாதேவி திருநெல்வேலி பக்தவத்சலப் பெருமாள்

சேரன்மகாதேவியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள் திருக்கோயில், சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களால் 10 முதல் 12-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமாகும்.

திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

தாமிரபரணி ஆற்றங்கரையில், பிற்கால பாண்டியர்களால், 1012-1044 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் கட்டப்பட்டது.

#கோயில்_குறிப்புகள்:

*மூலவர்: மூலவரான பக்தவத்சலப் பெருமாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில்  காட்சி தருகிறார்.

*தாயார் :  பெருமாள் திருமார்பில் ஶ்ரீ தேவி மற்றும் தனியாக பூமி நாச்சியார் 

*தீர்த்தம்: தாமிரபரணி 

*ஊர்: சேரன்மகாதேவி 

*மாவட்டம்: திருநெல்வேலி 

*புராணங்கள்:

பக்தர்கள் தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காக சப்த நதிகளில் நீராடுவதாக நம்பப்படுகிறது. பதிலுக்கு, பக்தர்களால் தேங்கியிருக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள, சப்த நதிகள் தாமிரபரணிக்கு வருகின்றன. 

பித்ரு தோஷத்தைப் போக்குவதற்காக, பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி, பக்தவத்சல பெருமாளை வழிபடுகின்றனர். 

இந்தக் கோவிலின் சில முக்கிய அம்சங்கள்…

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இதன் நுழைவாயில் மேற்குப் பக்கத்தில் உள்ளது. முக மண்டபத்தின் முன்புறம்/கீழே பலிபீடமும், நின்ற கோலத்திலுமுள்ள கருடனும் உள்ளனர். மூலவர் பக்தவத்சல பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இல்லாமல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் சுமார் 7 அடி உயரமும் 4 கைகளும் கொண்டவர். மேல் கைகள் சங்கையும் சக்கரத்தையும் தாங்கியுள்ளன, கீழ் கைகள் அபய நிலையிலும் கடிஹஸ்த நிலையிலும் உள்ளன. மூலவருக்கு முன்பாக உற்சவர்கள் உள்ளனர்.

பிரஹாரத்தில் பூதேவி, நாகர்கள் (வெளிப்புறம்), யோக நரசிம்மர் மற்றும் கருடன் (நின்ற கோலத்தில்). 

*பாதுகாப்பு: 

கி.பி 1921 முதல் இக்கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) நேரடிப் பராமரிப்பில் ஒரு பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னமாக விளங்கி வருகிறது.

*கல்வெட்டுகள்: 

இக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழன் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின்    காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.

பக்தர்களால் அதிகம் அறியப்படாத இக்கோவில் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை திறனுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கோவில் சுற்றுச்சுவரில் அமைந்துள்ள தூண்களும், சிற்பங்களும், கலை நயம் மிக்க வடிவமைப்புகளும் நம்மை பிரமிக்க வைக்கும். சிம்ம முகம் கொண்ட தூண்கள், நரசிம்மரின்  திருவுருவம், அந்த காலத்து நாகரிகத்தின் படி ஆடை, அணிகலன்கள் அணிந்த பெண்மணி முதலில் சிற்பங்களின் அழகு பார்ப்பவர்களின் எண்ணத்தை விட்டு அகலாது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, கருவறை அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் வடிவமைப்பு நம் முன்னோர்களின் ஈடு இணை இல்லாத கற்பனைத் திறனை வெளி காட்டுகின்றது.

கோமுகமானது ஒரு சிறிய சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டதாக இருக்கின்றது. இந்த சிங்கமானது கருவறை சுவரை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து வெளியே வருகின்றது. கோமுகத்தின், மூக்கின் வெளிப்புற முனையின்  கீழே ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை தாமரை மலர்கள் உள்ளன. இந்த தாமரை மலர்கள் சிறிய சிங்கத்தின் வாயிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய சிங்கத்தின் அலங்காரங்கள், தலைக்கவசம், பிடரி மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட சிறிய சிங்கத்தின் நான்கு கால்கள் அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாட்டுடனும், மிக்க அழகுடனும் செய்யப்பட்டுள்ளன.

*ஆலய அமைப்பு:

கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். கருவறையில், தேவியர் இல்லாமல் நம் பெருமாள் தனித்து நின்றிருப்பது போல, ஆலய பிரகாரத்தில் ஸ்ரீ பூமாதேவி மட்டும் திருக்காட்சியளிக்கிறார். ஏனைய பரிவாற மூர்த்திகளும் இடம்பெற்றுள்ளனர்.

அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்திலும் மகாமண்டபத்திலும் உள்ள தூண்களில் பலவித புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வைணவ சமயத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் ஒன்றிரண்டு சிவபெருமானைக் குறித்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்று மாளிகை தூண்களோடு அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருவறை விமானம் விளங்குகிறது. விமானம் எட்டுப்பட்டையுடன் கூடிய தமிழர் பாணியில் அமைந்துள்ளது. மண்டபங்கள் விசயநகரர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இம்மண்டபங்களில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் பலவற்றை நோக்கும் போது அவை பல விசயநகரக் கோயில் மண்டபங்களில் காணப்படுவது போன்றே உள்ளன.

*கல்வெட்டுச் சான்றுகள்:

காட்சிப் பலகையின்படி, இக்கோயில் இடைக்கால சோழர் அல்லது பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். பின்னர் விஜயநகர நாயக்கர் காலத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டது. சோழர் கால கல்வெட்டுகளின்படி, இந்த இடம் செரவன் மாதேவி சதுர்வேதிமங்கலம் என்றும், முள்ளிநாட்டில் உள்ள பிரம்மதேய கிராமம் என்றும் , நிகரிலி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படும் முள்ளிநாட்டு பிரம்மதேயா என்றும் அழைக்கப்பட்டது  . மகா விஷ்ணு ஸ்ரீ பக்தப்ரியத்து நின்றருளிய பரமஸ்வாமி என்று அழைக்கப்பட்டார்.

பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (SII, தொகுதி –XIV எண் 199, AR எண் 539 , 1911) பக்தப்ரியத்தில் தங்கியிருந்ததில் மகிழ்ந்த எம்பெருமான் கோவிலில் விளக்கேற்றுவதற்காக, முல்லைநாட்டைச் சேர்ந்த ஸ்ரீவல்லபன் ராமன் ஆடுகளைப் பரிசாக வழங்கியதாகப் பதிவு செய்துள்ளது.

ஸ்ரீவல்லப தேவனின் 6 -வது ஆட்சியாண்டைச் சேர்ந்ததும், தொல்லெழுத்தியல் ரீதியாக கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் செழித்தோங்கிய அதே பெயருடைய மன்னருடையது எனவும் கூறலாம் . கல்வெட்டின் (SII தொகுதி XIV - எண். 212, A R. எண். 536, 1911) நடுப்பகுதி சேதமடைந்துள்ளது. அதில் ஆறு ஆனை அச்சுகள் தானமாக வழங்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் தானம் அளித்தவரின் பெயர் தெரியவில்லை.

Ja ț ā varman ஸ்ரீவல்லபாவின் 19+1 வது ஆட்சி ஆண்டு (இந்த அடையாளத்தின் குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும்) கல்வெட்டு (SII- தொகுதி XIV எண். 244, AR எண். 1911 இன் AR எண். 532), ஒரு குறிப்பிட்ட ஆட்கொண்டாவில்லி, அத்தியுண்டார் மற்றும் அத்தியுண்டார் ஆகியோருக்குப் பணம் வழங்கியதைப் பதிவு செய்கிறது. முள்ளி நாட்டிலுள்ள பிரம்மதேயரான சேரவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்தில் உள்ள ஸ்ரீபக்தப்பிரியத்து நின்றருளிய பரமஸ்வாமின் கோவிலில் தீபம் ஏற்றுவது.

இக்கோயில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.

குறிப்பு: 
1. தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி பதினான்காம்.

*ஆலயச் சிறப்பு:

வியாசரால் குறிப்பிடப்பட்ட சிறப்புமிக்க 12-கோயில்களில், ஒன்றாகும். உள்ளூர் மக்களை தவிர வெளியூர் மக்களால் அதிகம் அறியப்படாத இவ்வாலயத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் அற்புதமானவை. கலைநயம் மிக்கவை.

*பிரார்த்தனை மற்றும் பரிகாரம்:

பிரகார மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமாகும். அசுப யோகத்தில் பிறந்து பல்வேறு குறைபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் ஆலயத்திற்கு வந்து நரசிம்மரை வேண்டி வழிபடுகின்றனர். குறைகள் தீர்ந்த பின்பு மீண்டும் வந்து பரிகார பூஜை செய்கிறார்கள்.

*ஆன்மாக்களுக்கு அமைதி அளிக்கும் பக்தவத்சலப் பெருமாள்:

ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்..

அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது..

கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார்.

*உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள்:

திருமாலுக்கு உகந்த முக்கியமான விழாக்கள் அனைத்தும் கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் பெருந்திருவிழாவாக நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் விழா வெகு விசேஷமாகும். பஞ்சாங்கம்’ என்பதிலுள்ள நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான்.

தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு. அத்தகைய யோகங்களில் சுபயோகம் அசுப யோகம் என்று இரண்டு வகை உண்டு அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலம் சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் , தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது.

அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது.

10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

*அமைவிடம்:

 நெல் வயல்களுக்கு நடுவே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

இக்கோயில் சேரன்மகாதேவி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மிக அருகிலுள்ள ரயில் நிலையம் சேரன்மகாதேவி ஆகும்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சேரன்மகாதேவி திருநெல்வேலி பக்தவத்சலப் பெருமாள்

சேரன்மகாதேவியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் , சோழர் மற்றும் பாண்டிய ம...