Monday, September 18, 2023

பிள்ளையார் உருவான கதை கணபதி உருவான புராண கதை : யானை முகம் எப்படி வந்தது தெரியுமா?

பிள்ளையார் உருவான கதை கணபதி உருவான புராண கதை : யானை முகம் எப்படி வந்தது தெரியுமா?
விநாயகர் ஸ்லோகம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

முழு முதல் கடவுளான கணபதியை பார்வதி தேவி உருவாக்கிய தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகின்றது. கணபதியை பார்வதி தேவியின் காப்பாளனாக உருவாக்கினாலும், இந்த உலகத்தின் நம்பைக்காக சிவ பெருமான் யானை முகம் எடுக்க வைத்தார். வாருங்கள் கண்பதி உருவான புராண கதையும், அவருக்கு எப்படி யானை முகம் வந்தது என்பது குறித்தும் பார்ப்போம்...

ஒரு முறை கைலாயத்தில் ஈசன் இல்லாத போது, பார்வதி நீராட சென்றார். காவலுக்கு நந்தி கணத்தை நிற்க வைத்து சென்றார்.

அந்த சமயத்தில் சிவன் அங்கு வர உள்ளே செல்ல முயன்றார். அவரை நந்தி தடுத்து, பார்வதி தேவி நீராடச் செல்வதாகவும், யாரையும் உள்ளே அனுமதிக்காதே என எனக்கு கட்டளையிட்டுக் காவலுக்கு வைத்து சென்றுள்ளார். அதனால் தாங்கள் உள்ளே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அதற்கு சிவன், பார்வதி தேவி என் துணைவி அதனால் இந்த கட்டளை என்னை தடுக்காது என கூறி உள்ளே சென்றார். அங்கு அமர்ந்திருந்த பார்வதி தேவி சிவ பெருமான் வருவதைப் பார்த்ததும், யாரையும் அனுமதிக்காதே என கூறியிருந்தேனே என்றார். அதற்கு சிவன் நந்தி என் சேவகன். அதோடு நான் உன் மணாளன் என்பதால் என்னை அவர் தடுக்க வில்லை என்றார்.

கணபதியை உருவாக்கிய பார்வதி :
நந்தியின் செயலால் கோபமடைந்த பார்வதி தேவி, அவர் செய்ததில் தவறு இல்லை என நினைத்தார். ஆனால் பாதுகாவலனாக நிற்பவர் யாரையும் உள்ளே விடாதபடி அறிவாளியாகவும், பலசாலியாகவும், தனக்கென பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என பார்வதி தேவி நினைத்தார்.

அந்த ஞாபகத்திலேயே நீராடச் சென்ற பார்வதி, அவர் பூசிக் கொண்டிருந்த மஞ்சளையும், சந்தனத்தையும் பிடித்து ஒரு உருவமாக்கினார். அதற்கு உயிரையும் அவரே கொடுத்தார். அவரே கணபதியானார்.

யானை முகம் எப்படி ?
அப்படி உருவான கணபதி, மற்றொரு முறை நந்திக்குப் பதிலாக காவலுக்கு நின்றார். நந்தியிடம் கூறியதைப் போலவே யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என கணபதியிடம் கட்டளையிட்டார்.

கணபதி காவலுக்கு நின்றிருந்த போது, அங்கு வந்த சிவ பெருமான் மற்றும் நந்தி உள்ளிட்ட பூதகணங்கள் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை தடுத்த கணபதி யாரையும் அனுமதிக்க முடியாது என்றார். நான் பார்வதி தேவியின் கணவர் என்று கூறியும் அனுமதிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த ஈசன், கனங்களிடம் கூறி சிறுவனை அங்கிருந்து அகற்றுங்கள் என கூறி சென்றார்.
ஆனால் கணபதியோ யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்காததோடு, அவர்களை எதிர்த்து சண்டையும் செய்தார். இதில் கனங்களை அங்கிருந்து விரட்டினார்.
கணபதியின் சப்தத்தைக் கேட்டு அங்குவந்த பார்வதி தேவி, ஈசனே இந்த பிள்ளை நான் உருவாக்கியவன் தான். அவரை அநியாயமாக இப்படி கொன்றுவிட்டீர்களே என்றார்.அவருக்கு உயிர் அளியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

கணேசன் பிறப்பின் ரகசியம் :
அதற்கு ஈசன், தேவி அனைத்தையும் நான் அறிவேன். கணேசனுக்கு உயிர் அளிக்கும் பொருட்டு, வடக்கில் தலை வைத்து படுத்திருக்கும் ஒரு பிள்ளையும், அவரின் தான் வேறொரு திசையைப் பார்த்து படுத்திருக்குமாறு இருக்கும் பிள்ளையின் தலையை எடுத்து வாருங்கள் அதை கணேசனுக்கு வைத்து உயிர்தரலாம் என பிரம்ம தேவன் ஆலோசனை கூறினார். அப்படியே செய்ய கனங்களுக்கு உத்தரவிட்டார்.

கனங்கள் பல இடங்களில் தேடி அலைந்து ஒரு யானை தலையை எடுத்து வந்தனர். அதை பொருத்திய ஈசன் உயிர் அளித்தார்.

இப்படி யானையின் தலை பொருத்திவிட்டீர்களே சுவாமி என தேவி கேட்டதற்கு, கஜமுகாசுரன் எனும் அரக்கன் உயிர்களை துன்புறுத்தி வருகின்றார். அவரை அழிக்க வேண்டும் என்றால், ஆண், பெண் சம்பந்தப்படாமல் பிறக்கும் ஒருவரால் தான் முடியும். அதோடு, அவன் மனிதனாகவோ அவன் பார்க்க, இருக்கக் கூடாது என வரம் பெற்றுள்ளான்.

கஜமுகாசுரனை அழிப்பதற்காகவே கணேசனாக அவதரித்துள்ளார். அதோடு அவர் முழு முதல் கடவுளாக விளங்குவார். யார் எங்கு பூஜை செய்தாலும் அதில் கணபதிக்கு தான் முதல் பூஜையும், ஆரத்தியும் நடக்கும் என வரம் கொடுத்தார்.

இதன் காரணத்தால் கணபதி யானை முகத்துடன் காட்சி அளிக்கின்றார். அதோடு முழு முதல் கடவுளாக வழிபட்டு வருகின்றோம்.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டு வணங்கி அருள் பெறுவோம்.

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

விநாயகர் சகஸ்ரநாமம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

விநாயகர் ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

கணபதி ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

விநாயகர் ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

No comments:

Post a Comment

Followers

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் : இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்...