Monday, April 10, 2023

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை:
 மச்ச அவதாரம்:   தாயின் வயிற்றிலிருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி பிறப்பது...  
 கூர்ம அவதாரம்: 
மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது...

 வராக அவதாரம்:
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது...

 நரசிம்ம அவதாரம்:
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது...

 வாமண அவதாரம்:
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது...

 பரசுராம அவதாரம்:
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது...

 ராம அவதாரம்:
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது...

 பலராம அவதாரம்:
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர் உலகோர்க்கு கடமையாற்றுவது...

 கிருஷ்ண அவதாரம்:
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது...

கல்கி அவதாரம்:
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

Om Namo Narayana

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...