Tuesday, September 26, 2023

இறைவழிபாடு எதற்கு ?

#இறைவழிபாடு எதற்கு ?? நாம் சிறுவயதில் இருந்தே இறைவழிபாட்டுக்குள் கொண்டுவரப்பட காரணம் ??
எப்போதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும் !! 
தேவையற்ற பயத்தில் இருந்து விடுபடவும் !!
எதிலும் துவண்டு விழாது தைரியத்துடன் எதிர்கொள்ள !!
நமக்கு என்று ஒருவன் எப்பொதும் உடன் இருக்கிறான் என்ற நிதர்சனத்தை அனுபவிக்கவும் !!
எந்த முயற்சியையும் ஓர் உத்வேகத்தோடு செய்ய இருக்கும் இணையை உணரவும் !!
மனசோர்வு ஏற்படும்போது எல்லாம் இறைவன் இருக்கிறான் என்ற தெம்பை பெறவும் !!
எதிலும் தெளிவை பெறவும் !! 
 இதற்க்கு தான் இறைவழிபாடே !!

இதற்க்கு மாறாக எதையாவது சொல்லி !!
பயத்தை நீக்குபவனையே காட்டி பயமுறுத்துவது !!
இதை செய்தால் என்று பரிகாரம் சொல்லை காசு பார்ப்பது !!
இதை தந்து அதை பெற்றுக்கொள்ள என்று பேரம் பேசுவது !!
இதை உடனே ஷேர் செய்தால் என்று மடத்தனத்தை விளைவிப்பது !!
இப்படி எதையாவது செய்து எதிர்மறையான எண்ணத்தை கொண்டுவருவது இறைவழிபாடே அல்ல ..

இறைவன் கருணைவடிவாய், ஆனந்த ரூபமாய், அங்கு இங்கு என்று பிரித்து பார்க்க நினைக்க முடியாதபடி எதிலும் எப்போதும் கலந்திருந்தது அருளாலை பொழிந்து கொண்டே இருக்கும்  நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட நிதர்சனமானவனே இறைவன் ..

அப்படியானவனின் துணை இணை என்று நம்மோடு கலந்தே இருந்து எதுவுமான அரவணைத்து காத்து அருளிக்கொண்டே இருக்கிறான் !!
அத்தகையவன் இருப்பால் இருந்து வாழ்ந்து இறைவனால் ஆனந்தமாக வாழ்வதை உணர்வே இறைவழிபாடு 

ஓம் நமசிவாய

இறை பணியில் இரா. இளங்கோவன். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...