Monday, September 25, 2023

ஏன் லக்ஷ்மி நரசிம்மன் என்கிறோம்? லக்ஷ்மி எங்கிருந்து அங்கு வந்தாள்?

குளிர்விக்கும் கண்கள்.....!!!

அவனை ஏன் லக்ஷ்மி நரசிம்மன் என்கிறோம்? லக்ஷ்மி எங்கிருந்து அங்கு வந்தாள்?
லக்ஷ்மி திடீரென்று அங்கு முளைத்து வந்துவிடவில்லை. தாயாரைப் பெருமான் பிரிவதே கிடையாது. நாம் ஸ்ரீமன் நாராயணன் என்று சேவிப்பதெல்லாம் லக்ஷ்மி நாராயணனே! ஸ்ரீமன் நாராயணனே…
செல்வ நாராயணனே… லக்ஷ்மி நாராயணனே ஸ்ரீபதியே என்று பிராட்டியை சேர்த்து சேர்த்துத்தான் சேவிக்கிறோம்! பெயரிலேயே பாருங்களேன், லக்ஷ்மி நாராயணன் என்றும் லக்ஷ்மி ஹயக்ரீவன் என்றும் ஸ்ரீயஹ்பதி என்றும் திருமகள் கேள்வன் என்றும் திருமால் என்றும் பிராட்டி பெயரை சேர்த்து சேர்த்துத்தான் சொல்கிறோம். எல்லாவற்றிலும் ஸ்ரீயின் பெயர் முன்னாலேயே வருகிறது. பெருமாளின் பெயர் பின்னால் வருகிறது.
அப்படியானால் பெருமை யாருக்கு? லக்ஷ்மிக்குத்தான். அவளுக்காகத்தான் அனைத்து நன்மைகளையும் பெருமாள் செய்கிறார். குழந்தைகளை பகவான் ரக்ஷிப்பதே பிராட்டி சிபாரிசு செய்கிறாள் என்பதற்காகத்தான். லக்ஷ்மிதேவியை எப்போதும் விட்டுப்பிரியாத எம்பெருமான், திருமார்பிலேயே அவளை வைத்திருக்கும் எம்பெருமான் தன் மடியிலே வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறான்.
அஹோபிலக்ஷேத்திரத்துக்கு கருட சைலம் என்கிற பெயர் உண்டு. அங்கு தனக்கென்று ஒரு சன்னிதானத்தைப் பெருமாள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘லக்ஷ்ம்யா சமாலிங்கித வாம பாகம்’- லக்ஷ்மியாலே அணைக்கப்பட்ட இடது திருப்பக்கத்தை உடையவன். இடது திருமடியிலே அவளை வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய இடது கையினாலே பிராட்டியின் திரு இடையை அணைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட லக்ஷ்மி நரசிம்மரை வணங்குகிறேன்.
தண்ணீர் கொதிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஆற்றினால்தான் குளிக்க முடியும். அதை ஆற்றுவதற்குக் குளிர்ந்த நீர் வேண்டுமல்லவா? கோபம் என்ற கொதிநீரை ஆற்றுவதற்குத்தான் லக்ஷ்மி. அவளுடைய திருக்கண்களை சேவித்தோமென்றாலே, அவ்வளவு அருள் பொழிகிறாள். கோபக் கனல் பொறிக்க உள்ளன நரசிங்கப் பெருமானின் திருக் கண்கள். அப்படியே சேவித்தால் நாம் தாங்கமாட்டோம். லக்ஷ்மியுடன் சேவித்தால் கோபம் என்ற கொதிநீரை ஆற்றி விடுவாள். அதுவே அருட்பார்வையாக மாறிவிடுகிறது.

ஸ்ரீ லட்சுமிநரசிம்மன் திருவடிகளே சரணம்.....!

No comments:

Post a Comment

Followers

ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்.

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான #திருஓணகாந்தன்தளி[237] வரலாறு மூலவர் : #ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் உற்சவர்...