Wednesday, February 8, 2023

குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்.

குற்றம் பொறுத்த நாதர்  திருக்கோவில்.
இறைவன் - குற்றம் பொறுத்த நாதர்
இறைவி  -  கோல்வளை நாயகி.

ஊர் - தலைஞாயிறு - திருகருப்பறியலூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், 27-வது தேவாரத் தலமாக இருப்பது திருகருப்பறியலூர்.

இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை இறைவன் மேல் எறிந்தான். அதனால், ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கி கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்து அருளியதால் இவர் `குற்றம் பொறுத்த நாதர்’ என அழைக்கப்படுகிறார்.

இந்தத் திருத்தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்து, இறந்துவிடும் தோஷம் உள்ளவர்களுக்கும், ஆண், பெண் வாரிசு வேண்டுபவர்களுக்கும் நன்மை நடக்கும் என்பது ஐதீகம்.

சூரிய பகவான் இந்தத் தலத்தை வழிபட்டதால் `தலைஞாயிறு’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 10.கி.மீ. தொலைவில் உள்ள பட்டர்வதியில் இருந்து 1.கி.மீ. தொலைவில்  இக்கோயில் உள்ளது.

No comments:

Post a Comment

Followers

மருதமலை முருகன் கோயில் கோவை...

*மருதமலை* *முருகன் கோயில்...*  கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக...