Wednesday, March 8, 2023

வேதபுரீசுவரர் திருக்கோவில்.இறைவன் - வாழைமடுநாதர்.இறைவி - மங்கயற்க்கரசிஊர் - திருவேதிகுடிமாவட்டம் - தஞ்சாவூர்.

வேதபுரீசுவரர் திருக்கோவில்.

இறைவன் - வாழைமடுநாதர்.
இறைவி  -  மங்கயற்க்கரசி
ஊர் - திருவேதிகுடி
மாவட்டம் - தஞ்சாவூர்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 14 வது சிவத்தலமாகும்.

பிரமனும் வேதமும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

வேதி - பிரமன். 
பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர்.

சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்.

மகாமண்டபத்தில் உள்ள விநாயகர் (தலவிநாயகர்) வேதவிநாயகர் எனப்படுகிறார்.

இறைவன் நான்கு முகங்களாலும் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில்; இடக்காலை உயரமாக வைத்து அற்புதமாகக் காட்சித் தருகிறார்.

முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி "வேதிகுடி மகாதேவர் " என்றும், "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்படுகிறார்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் கண்டியூர் வந்து அங்கிருந்து அய்யம்பேட்டை  செல்லும் சாலையில்  இத்தலம் உள்ளது.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...