Friday, April 7, 2023

சித்திரகுப்தர் வழிபாடு சித்திரா பௌர்ணமி அன்று வெள்ளிக்கிழமை வருகின்றது (05, 05, 2023)

_சித்திரகுப்தன் வழிபாடு.. சித்திரா பௌர்ணமி_


சித்திரகுப்தர் வழிபாடு சித்திரா பௌர்ணமி அன்று வெள்ளிக்கிழமை வருகின்றது (05, 05, 2023) 

சேவித்தேன் நான் சித்திரகுப்தா, பக்தி துதி, சேவித்தேன் நான் சித்திரகுப்தா, பக்தி துதி

*ஸ்ரீ சித்திரகுப்தர் வழிபாடு துதி..*

சித்திரகுப்தா!   சித்திரகுப்தா!
சேவித்தேன் நான் சித்திரகுப்தா,
நானே செய்த பாவங்களனைத்தும் 
நல்லவனே நீ கடுகளவாக்கு.
நானே செய்த புண்ணியமனைத்தும் 
நல்லவனே நீ மலையள வாக்கு.
வானும், நிலவும் உள்ள வரைக்கும் 
வாழ்க்கைப் பாதையை வளமாய் 
மாற்று!   உணவும், உடையும், 
உறைவிடம் அனைத்தும் தினமும் 
வழங்க திருவருள்காட்டு. 

நாம் செய்த பாவ புண்ணியங்களை பதித்து வைக்கும் சித்ரகுப்தனை கொண்டாடும் விழாவாக இந்த பக்கம் மலையளவு செய்த பாவங்களை கழுவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மறைவாக மாற்றவும் கும்பிட வேண்டிய நபர் இந்த சித்திர குப்தனை தான் இந்த சித்திர குப்தனை வழிபட்டு அளவைக் குறைத்து புண்ணியக் கணக்கை அதிகமாக்க வேண்டும்.

சித்ரகுப்தனுக்கு  காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் ஒன்று உள்ளது, அங்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சித்திர குப்தனை நினைத்து விரதம் இருக்கலாம்.

அன்றைய தினம் காலையில் சூரியனை பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் போது சித்ரகுப்தனை வழிபட வேண்டும் சித்ரகுப்தனுக்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசி, கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை வைத்து நுங்கு, மாம்பழம், இளநீர், நீர்மோர் போன்றவற்றை வைத்து படைக்க வேண்டும்.

பச்சரிசி சாதத்திற்கு தட்டைப்பயிர் மாங்காய் குழம்பு வைக்க வேண்டும். பருப்பு நெய்யும் வைத்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும். 

அப்படி வழிபடும் பொழுது *“சித்திரகுப்தா சித்திரகுப்தா சிரித்தேன் சித்திரகுப்தா நானே செய்த பாவம் அனைத்தும் நல்லவனே நீ கலக்கு நான் செய்த புண்ணியம் அனைத்தும் நல்லவனே நீ மறவாதே வானும் நிலவும் உள்ளவரைக்கும் வாழ்க்கை பாதையை மாற்று உணவும் உடையும் உறைவிடமும் அனைத்தும் தினமும் பழங்கள் கூட்டு”* என்று பாடி சித்ரகுப்தரை வழிபட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 16 பௌர்ணமிகள் நாம் வழிபட்டு வந்தால் 16 பேரும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம் சித்ரகுப்தனுக்கு உகந்த சித்ரா பௌர்ணமி நாட்களில் நாம் இவ்விரதத்தை மேற்கொண்டு தொடர்ந்து நாம் செய்து வந்தோமானால், சித்ரகுப்தனின் அருள் நமக்கு கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி சித்திர குப்தரை நாம் வழிபட்டு நம் பாவம் அனைத்தையும் போக்கி புனிதர்களாக மாறுவோம்.

 
சகல தோஷ தடைகள் நீங்க சித்ரா பவுர்ணமி நாளில் சிறப்பும் மற்றும் எதற்காக இந்நாளில் சித்ரகுப்தனை வழிபட வேண்டும் மேலும் யார் இந்த சித்ரகுப்தர் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற பல அரிய தகவல்களை விரிவாக காண்போம்.

சித்திரை மாதம் வரும் பௌர்ணமி திதியே சித்ரா பவுர்ணமி நாளாக போற்றப்படுகின்றது சித்திரை மாதம் முழுவதும் சூரியன் மேஷத்தில் இருப்பார் மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறுவதால் சூரியனுக்கு இம்மாதத்தில் பலம் அதிகம் பௌர்ணமி நாளில் சந்திரனும் பலம் பெறுவதால் இந்த சக்தி வாய்ந்த சிறப்புமிக்க நாளாக கருதப் படுகின்றது. இந்த சித்ராபவுர்ணமி நாளில் பெண்கள் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு நடத்துவதை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் சித்ரா பவுர்ணமி நாளுக்கு வேறு ஒரு சிறப்பு உள்ளது இந்த நாளில்தான் தர்ம ராஜாவின் உதவியாளர்

 சித்திரகுப்தன் அவதரித்த ஒவ்வொரு ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை பராமரிக்கும் பணிகளை சித்திர குப்தரை செய்கின்றார் அவரை பொதுவாக நாம் வழிபட மாட்டோம் ஆனால் சித்ரா பவுர்ணமி அன்று இவரை வழிபட்டால் நம் வாழ்வில் சில விசேஷ பலன்களை நாம் அடையமுடியும் சித்ரா குப்தர் பார்வதி அம்மாளுக்கு மகனாக ஒரு சித்தர் வடிவமாக பிறந்தார் பின்னர் அவர் கோமாதா காமதேனுவின் கருதி அவதரித்து சித்ரா பவுர்ணமியன்று பிறந்ததுதான் சித்திரகுப்தன் ஆக அழைக்கப்பட்டால்

 சித்திரகுப்தர் கேது பகவானுக்கு அதிதேவதையாக விளங்குகிறார் எனவே இவரை சித்ரா பவுர்ணமியன்று வழிபட்டால் கேதுவால் ஏற்படும் நாக தோஷம் மற்றும் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும் சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனி ஆலயம் உள்ளது.

     இந்த ஆலயத்திற்கு கேதுதிசை நடப்பவர்களும் அல்லது ஜாதகத்தில் கேது தோஷம் பெற்றவர்கள் வந்து வழிபட்டுச் சென்றால் அவர்களுக்கு தோஷ நிவர்த்தி ஆகிறது குறிப்பாக சித்ரா பவுர்ணமி நாளன்று இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன இந்த விசேஷ மிக்க சித்திரகுப்தர் ஆலயம் எங்கு உள்ளது என்று எப்படி சித்ரகுப்தரை வழிபட வேண்டும் 

என்பதை விரிவாக காண்போம் சித்திரகுப்தர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில் அனைவரும் அறிந்த பிரசித்திபெற்ற காஞ்சி காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பொதுவாக கேது திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திர நாளன்று இங்கு வந்து சித்திரகுப்தர் வழிபட்டு செல்வது வழக்கம் இங்கு வந்து சித்ரகுப்தனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு உண்டு. 

அதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் எனது இந்நாளை தவறவிடாதீர்கள், முன்னதாகத் திட்டமிட்டு இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்லுங்கள் கோவிலுக்கு வர இயலாதவர்கள் கவலைப்பட வேண்டாம் அவர்கள் இல்லத்தில் சித்திரகுப்தர் என நினைத்து வழிபடலாம் சித்ரகுப்தர் கோமாதாவின் கருவில் அவதரித்ததால் அந்நாளில் பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்து விரதம் இருங்கள் பூஜை அறையில் பழங்களை படைத்து சித்ரகுப்தரை வணங்கினால் உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களிலிருந்து நீங்கள்

 விடுபடலாம் மேலும் இந்நாளில் சித்ரகுப்தனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் கிடைக்கப் பெறுவீர்கள்.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...