Saturday, July 22, 2023
சென்னை புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்
சிவ சிவ சென்னையை சுற்றியுள்ள பழம்பெரும் சிவாலயங்களின் வரிசையில் 23வதாக ஞாயிறு ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் பற்றி காணலாம் !!!இத்திருக்கோவில் செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது நவகிரகங்களில் நடுநாயகன் சூரியபகவான், சூரியவழிபாடு என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதை பல ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளது !!!பலர் புகழ் ஞாயிறு என்று திருமுருகாற்றுப்படையிலும், ஞாயிறு போற்றதும் என்று சிலப்பதிகாரத்திலும் உள்ளது , சங்க காலம் தொட்டே சூரிய வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன!!! அதன்படி சூரியவழிபாட்டிற்க்காக இத்திருக்கோவில் அமைந்துள்ளது !!! இங்கு வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகை பாதத்தில் சித்திரை மாதத்தில் சூரியஒளி படுவது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது !!!பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ அரசர் ஒருவர் ஆந்திர பிரதேசத்தின் மீது படையெடுத்து இவ்வழியாக செல்லும்போது சோழவரத்தில் முகாமிட்டார்!!! இங்குள்ள செந்தாமரை தடாகத்தின் நடுவே உயர்ந்து நின்ற ஓர் அதிசய மலரை பறிக்க முடியாமல் தன் வாளை வீசிட அது கீழ் இருந்த சிவலிங்கத்தில் பட்டு அத்தடாகமே ரத்தவெள்ளமானது !!!இதனை எதிர்பாராத சோழ அரசர் அதிர்ந்து போனார்!!! பின்பு தன் தவற்றை உணர்ந்து அரசர் செய்த செயல் மற்றும் இக்கோவிலின் சிறப்புக்கள் பற்றி நாளை காணலாம் ❤️🔱சிவாயநம🔱❤️
Subscribe to:
Post Comments (Atom)
Followers
சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.
அவளிவணநல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...
-
ஈசன் வீற்றிருக்கும் தலங்களை முழுமையாக கண்டவருமில்லை நம் வசிப்பிடத்தை சுற்றி உள்ள திருக்கோயில்களை காணாமல் போனால் இப்பிறவி எடுத்து...
-
அன்னாபிஷேகம்...! ஐப்பசிமாத முழுநிலவு நாளில் உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு. ஒவ்வொரு மா...
-
காஞ்சி காமாட்சி அம்மன் பற்றிய பதிவுகள் தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்ம...
No comments:
Post a Comment