Saturday, July 22, 2023
சென்னை புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்
சிவ சிவ சென்னையை சுற்றியுள்ள பழம்பெரும் சிவாலயங்களின் வரிசையில் 23வதாக ஞாயிறு ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் பற்றி காணலாம் !!!இத்திருக்கோவில் செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது நவகிரகங்களில் நடுநாயகன் சூரியபகவான், சூரியவழிபாடு என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதை பல ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளது !!!பலர் புகழ் ஞாயிறு என்று திருமுருகாற்றுப்படையிலும், ஞாயிறு போற்றதும் என்று சிலப்பதிகாரத்திலும் உள்ளது , சங்க காலம் தொட்டே சூரிய வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன!!! அதன்படி சூரியவழிபாட்டிற்க்காக இத்திருக்கோவில் அமைந்துள்ளது !!! இங்கு வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகை பாதத்தில் சித்திரை மாதத்தில் சூரியஒளி படுவது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது !!!பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ அரசர் ஒருவர் ஆந்திர பிரதேசத்தின் மீது படையெடுத்து இவ்வழியாக செல்லும்போது சோழவரத்தில் முகாமிட்டார்!!! இங்குள்ள செந்தாமரை தடாகத்தின் நடுவே உயர்ந்து நின்ற ஓர் அதிசய மலரை பறிக்க முடியாமல் தன் வாளை வீசிட அது கீழ் இருந்த சிவலிங்கத்தில் பட்டு அத்தடாகமே ரத்தவெள்ளமானது !!!இதனை எதிர்பாராத சோழ அரசர் அதிர்ந்து போனார்!!! பின்பு தன் தவற்றை உணர்ந்து அரசர் செய்த செயல் மற்றும் இக்கோவிலின் சிறப்புக்கள் பற்றி நாளை காணலாம் ❤️🔱சிவாயநம🔱❤️
Subscribe to:
Post Comments (Atom)
Followers
படியேறி தரிசித்தால் நைனாமலை வரதராஜப்பெருமாள்.
படியேறி தரிசித்தால் வளம்தரும் நைனாமலை வரதராஜப்பெருமாள் சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் இருக்கும் புதன்சந்தை,...
-
பாம்பின் தலை, உடல், வால்… மூன்று துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் காணப்படும் அதிசய பாம்பு கோயில்கள்! இந்திய ஆன்மீக மரபில் நாக வழிப...
-
தீராத துயரத்திற்கும் தீர்வு தரும் குலதெய்வ தீப வழிபாடு இந்த தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், வாசலி...
-
தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொ...
No comments:
Post a Comment