Wednesday, September 20, 2023

சிங்கிரிக்குடி,பூவரசன்குப்பம் பரிக்கல் தரிசனம் கிடைக்க நரசிம்மர்அருளட்டும்

சுவாதி 16/10/23 & 12/11/2023 தீபாவளி அன்றும் சிங்கிரிக்குடி,பூவரசன்குப்பம் பரிக்கல் தரிசனம் கிடைக்க நரசிம்மர்அருளட்டும்
ஒரே நேர்கோட்டில் அமைந்த 3 நரசிம்மர் தலங்கள் தரிசனம் 
சிங்கிரிக்குடி,பூவரசன்குப்பம் பரிக்கல் தரிசனம்
ஒரே நாளில் 3 நரசிம்மர் தலங்கள் தரிசிக்க  மிக விசேஷம் 
மதுரையில் இருந்து ம் சென்னையில் இருந்தும்  தரிசன முறை , 
முதலில் விழுப்புரம் சென்று விட வேண்டும் 
விழுப்புரம் நகரில் முதலில் சிங்கிரிக்குடி நரசிம்மர் உக்ர நரசிம்மர் தரிசனம் 
விழுப்புரம் நகரில் முதலில் சிங்கிரிக்குடி  
விழுப்புரம் TO சிங்கிரிக்குடி   37 கிமி via NH332
நேரம் கார் 1 மணி நேரம் 
காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து கிளம்ப 8 மணிக்கு சிங்கிரிக்குடி அடைந்து நரசிம்மர் உக்ர நரசிம்மர் தரிசனம் 
காலை 9 மணிக்கு சிங்கிரிக்குடியில் இருந்து புறப்பட்டு  பூவரசன்குப்பம்  🌺🌺🌺 🙏🙏லட்சுமி நரசிம்மர் தரிசனம் 
 சிங்கிரிக்குடியில் இருந்து புறப்பட்டு  பூவரசன்குப்பம்  25.7 km வழி மதுக்கரை ரோடு 
 காலை 10 மணிக்கு பூவரசன்குப்பம்  🌺🌺🌺 🙏🙏லட்சுமி நரசிம்மர் தரிசனம் 
காலை 10.30 மணிக்கு  பூவரசன்குப்பம்  🌺🌺🌺 🙏🙏தலத்தில் இருந்து புறப்பட்டு  பரிக்கல் லக்ஷ்மி  நரசிம்மர் தரிசனம்
காலை 10.30 மணிக்கு  40.4 km  பண்ருட்டி வழியாக 🌺🌺🌺 🙏🙏பரிக்கல் 
 காலை 11.30க்கு 🌺🌺🌺 🙏🙏பரிக்கல் லக்ஷ்மி  நரசிம்மர் தரிசனம்
🌺🌺🌺 🙏🙏அங்கே கோயில் 1 .00 மணி வரை மட்டுமே காலையில் திறந்து இருக்கும் 
🌺🌺🌺 🙏🙏மதுரை வர விரும்புவோர் பரிக்கல் தலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக மதுரைக்கும் 
🌺🌺🌺 🙏🙏சென்னை செல்ல விரும்புவோர் உளுந்தூர்பேட்டை வழியாக மீண்டும் விழுப்புரம் மூலம் சென்னை செல்லலாம் 
ஒரே நாளில் 3 நரசிம்ம தரிசனம்

பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒரே நாளில் 3 நரசிம்ம தரிசனம்
பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து இரணியனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பரிக்கல் :

விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திருநாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. போன் 99438 76272

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூவரசன்குப்பம் :

பரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.போன்: +91-413 269 8191, 94439 59995.

பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.

சிங்கிரிக்குடி :

பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக்குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை. போன் -0413 2618759

திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.

காலையில் சிங்கிரிக்குடி உக்ர நரசிம்மர்,(தனிநரசிம்மர் ) நண்பகலில் பூவரசன்குப்பம்,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்  மாலையில் பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.

காலையில் சிங்கிரிக்குடி நண்பகலில் பூவரசன்குப்பம், இறுதியாக பரிக்கல்   என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...