Monday, April 29, 2024

திருப்பூர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.



திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.

பஞ்சலிங்கங்க கோவில்:-

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-

2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோவில் மேல் கோவில்:-

1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.

பொய் ஆகவே ஆகாது!
மிளகு, பயிராக மாறியது:-

ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் 15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள் மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இரண்டு நந்தி:-

இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீசன்:-

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.

சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை ஆர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.

ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வால்மீகி ராமாயணத்தை எழுதி முடித்தபோது, 

அதனை படித்த நாரதர் 'நன்றாகத்தான் இருக்கிறது,

 ஆனால் அனுமன் எழுதியது தான் சிறந்தது', என்றார்.

வால்மீகிக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தது, 

யாருடைய ராமாயணம் சிறந்தது என்று யோசித்தார். 

அதனால் அனுமன் எழுதிய ராமாயணத்தை கண்டுபிடித்து, படிக்கப் புறப்பட்டார்.

அனுமனின் வாழைத்தோட்டமான கதலி-வனத்தில், 

வாழை மரத்தின் ஏழு அகன்ற இலைகளில் ராமாயணம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

அவர் அதைப் படித்த பின்னர், அதுவே சரியானது என எண்ணினார்.. 

இலக்கணம், சொல்லகராதி, தர்க்கம் மற்றும் மெல்லிசை ஆகியவற்றின் மிக நேர்த்தியான தேர்வு.  

படித்த பின்னர், அவர் கட்டுபாடின்றி அழ ஆரம்பித்தார்.

'என் ராமாயணம் நன்றாக இருக்கிறதா ஏதேனும் பிழைகள் குறைகள் இருக்கிறதா?' 

என்று அனுமன் கேட்க, 'இல்லை, இதுவே மிகவும் சிறந்தது' என்றார் வால்மீகி.

'அப்புறம் ஏன் அழுகின்றீர்கள்?' என்று அனுமன் கேட்க,

 "ஏனென்றால், உன்னுடைய ராமாயணத்தைப் படித்த பிறகு யாரும் என் ராமாயணத்தைப் படிக்க மாட்டார்கள்", என்று வால்மீகி பதிலளித்தார்.

இதைக் கேட்ட அனுமன் ஏழு வாழை இலைகளைக் கிழித்து எறிந்தார்.

"இப்போது யாரும் என் ராமாயணத்தைப் படிக்க மாட்டார்கள்."

அனுமனின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த வால்மீகி,

 "ஏன் இப்படிச் செய்தாய்" என்று கேட்க, 

அனுமன், 'எனது ராமாயணம் எனக்காக எழுதப்பட்டது, யாரும் படித்து போற்ற அல்ல, 

ஆனால் உங்களுடையது, உலகமே என் ராமனை அறிய எழுதப்பட்டது.

 அது அனைவரையும் சென்றடையும்போது, 

இதைவிட சிறந்தது என எதுவும் இருக்கக் கூடாது, 

எனவே எனக்காக மட்டும் எழுதியது தேவையில்லை என அழித்து விட்டேன்.

அப்போதுதான் வால்மீகி உணர்ந்தார், 

"ராமரை விடப் பெரியவர்.... 
ராமரின் பெயர்! 

அந்த ராமன் விரும்புவது, 
அந்த பெயரை விடவும், 
ஆழ்ந்த அனுமன் பக்தியை".

புகழ் பெற விரும்பாத அனுமன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

 அவர்கள் தங்கள் வேலையைச் செய்து, தங்கள் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.

நம் வாழ்விலும் பாடப்படாத, பெரிதும் கவனிக்கப் படாத 

 "அனுமன்கள்" பலர் இருக்கிறார்கள், நம் மனைவி, தாய், தந்தை, நண்பர்கள்.

இந்த உலகில், ஒவ்வொருவரும் அவரவர் வேலையைச் சிறப்பித்து,

 சரிபார்ப்பைத் தேடும் இந்த உலகில், 
நாம் நமது கர்மாவைச் செய்வோம்,

 ஏனென்றால் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு சொல்லாமலே தெரியும், தன் உண்மையான பக்தன் யார் என்பது...🪷 ☘️ சமணர்களால்
வஞ்சிக்கப்பட்ட அப்பர் பெருமான்

☘️சுண்ணாம்பு அறையில் பூட்டி
தீயிட்டார்கள்

☘️அப்பர் பெருமானை தொட்ட தீ.....
குளிர்ந்தது

☘️விஷம் வைத்த உணவும் அமுதம் ஆனது

☘️ யானையின் காலடியில் தள்ளிய போதும்
யானையும் அப்பர் பெருமானுக்கு தலை வணங்கியது

☘️ கருங்கல்லில் கட்டி நடுக்கடலில் வீசியெறிந்த போதும்

கருங்கல்லும் தெப்பமாய் மாறியது

அதிகை வீரட்டம்
திருவருள் இருக்கையில்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதுமில்லை
ஆன்றோர் வாக்கு #ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிருங்க....

"அடிக்கிற வெயிலுக்கு ஊட்டி போய் சில் பண்ணுவோம் ப்ரோ" ன்னு உங்களை யாரேனும் கூப்பிட்டால் அது உங்கள் கிட்னியை உருவுவதற்கான code word என்றறிக. அதுவும் குடும்பத்தோடு என்று சொன்னால்... அடுத்த கிட்னியும் காணாமல் போக போகிறது என்று பொருள்.

மேட்டுப்பாளையம் தாண்டி.. ஊட்டி கோத்தகிரி பிரிவுக்கு முன்னிருக்கும் பவாணி ஆற்று பாலத்தை கடக்கும் போதே... வறண்டு கிடக்கும் ஆறு அபாய சங்கை ஊதி விடுகிறது.. செத்தாதான் மேல போவாங்க... நீ மேல போனாலும் செத்த.. என அது கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி மேலே ஏறுகிறோம். இல்லை... இல்லை.. ஆல்ரெடி மேலே ஏற காத்திருக்கும் வாகனங்களின் அணிவகுப்பில் நாமும் இணைந்து கொள்கிறோம். ஏதோ ஒரு பேரணி போல மெல்ல மெல்ல ஊறி... டிசம்பர் மாத பனி புகையினை தரிசித்த கண்கள்... முன்னே செல்லும் வாகனங்களின் டீசல் புகையின் வீச்சை தாங்க இயலாமல் கலங்குகின்றன. மேலே போக போக சூரியனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி குறைந்து உச்சி வெயில் 
மண்டையே பிளக்க ஆரம்பிக்க.. காரில் ஏ.சி யை நான்கிற்கு திருப்புகிறோம். எதேனும் இடத்தில் ஓரம் கட்டி.. கட்டிக்கொண்டு வந்த இட்லியை பிரித்த வேகத்தில்.. குரங்கார்கள் அதன் மீது உக்கிரமாக பாய்கிறார்கள். அடேய்... இது ஊட்ல செஞ்சதுடா... ஹோட்டல்ல வாங்குனது இல்ல... அவ்வளவு ருசியா எல்லாம் இருக்காதுடா என நாம் சொல்வதற்குள்.. தட்டில் வைத்த இட்லியோடு காணாமல் போகிறார்கள். 

ஊட்டியை நெருங்கியதும், முதலில் நம்மை திணற வைப்பது ட்ராபிக். கால் வைக்கும் இடங்களில் எல்லாம் கண்ணி வெடி இருப்பது போல.. ஒன் வே...., நோ என்ட்ரி, டேக் டைவர்சன் போர்டுகள் சுற்றி சுற்றி நம்மை குழப்பி அடிக்க.. மூலவரை பார்க்கறதுக்கு முன்னாடி புள்ளையாரை மூணு சுத்து சுத்துவது போல.. ஊட்டி ரவுண்டாணாவை எதற்கு சுத்துகிறோம் என தெரியாமலேயே மூன்று சுற்றுக்கள் சுற்றுகிறோம். அப்படியும் போக வேண்டிய இடத்தை நெருங்கி விட்டாலும்... அதை விட பெரிய பிரச்சனை பார்க்கிங் கிடைப்பது. கல்யாணம் செய்யும் வயசு வந்தாலும் பொண்ணு கிடைக்காமல் அல்லாடுவது போல... ஒரு பார்க்கிங் ஸ்பேஸ் கிடைக்க கண்டபடி அல்லாடுகிறோம். மறுபடியும் ரவுண்டாணாவை ரெண்டு சுற்று. ப்ரைவேட் பார்க்கிங் ஸ்லாட்டுகளில் மணிக்கு 80ல் இருந்து 100 வரை, நம் முகத்தில் ஓடும் இளிச்சவாய களைக்கு தகுந்தபடி வசூலிக்கிறார்கள். யப்பா... ஒருவழியா பார்க்கிங் கிடைச்சது... கார்டனுக்கு எப்படி போகணும் என வழி கேட்டால்... அது ஒரு கிலோ மீட்டர் தள்ளியில்ல இருக்குது. ஒரு ஆட்டோ வச்சு போயிக்குங்க என கொலை காண்டு ஏற்றுகிறார்கள். "அடேய்... காரை வச்சுக்கிட்டு நான் ஏண்டா ஆட்டோவில போகணும்" என நமக்கு நாமே கேட்டுக்கொண்டு நடந்தே கார்டனை அடைகிறோம்.

டிக்கெட் கவுண்டரில் வரிசை நின்று... கார்டன் உள்ளே நுழைந்து, ஸ்ப்ப்ப்பா ஒரு ஓரமா உட்காரலாம் என புல்லின் மேல் அமர்ந்தால்... எங்கிருந்தோ ஒரு அக்கா விசில் அடிக்கிறார்கள். அடடே.. என ஆர்வமாய் திரும்பினால்... "ஆல்ரெடி அது கருகி கிடக்குது... எந்திரிச்சு போப்பா.." என விரட்டுகிறார்கள். உட்கார இடம் இல்லை... வெறுக்கு வெறுக்கு என கூட்டம் வியர்வையில் நனைந்தபடி அங்கிட்டும் இங்கிட்டும் அலை பாய்கிறது. புழுதி பறக்கிறது. சில அப்பாவி குடும்பஸ்தன்கள் இதுக்கு மேல தாங்காது என கிடைத்த இடத்தில் துண்டை விரித்து படுத்து விடுகிறார்கள். டீக்கடை அக்காவிடம் பேசும்போது... தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

"சிவாஜி... நீ திரும்ப அமெரிக்காவுக்கே போய்டு" என்பது போல.. நாம திருப்பூர்க்கே திரும்ப போயிடுவோம் என வண்டியை கிளப்பி கீழே வந்தால்.. வெலிங்கடனில் இடை மறித்து.. இடது பக்க கண்டோன்மென்ட் சாலையில் நம்மை மடை மாற்றி விடுகிறார்கள். பொருத்தமாய்... காரின் ஆடியோ சிஸ்டத்தில் " எங்கே செல்லும் இந்த பா...........தை என ராஜாவும் அழ ஆரம்பிக்கிறார். மதிய 
உணவுக்கு... ரீல்ஸ் பார்த்து குன்னூர் ராமசந்திரா ஹோட்டலுக்கு போனால்... அங்கேயும் அதே பார்க்கிங் பிரச்சனை.. மறுபடியும் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பெய்ட் பார்க்கிங்கில் வண்டியை சொருகி விட்டு சாப்பிட வந்தால்... அது ஒரு தனி பதிவாய் போடும் அளவிற்கு சோகம். 

சரி... வேகமாய் கீழே இறங்கலாம் என குன்னூரில் லெப்ட் ஒடிக்கும்போதே... வந்தது வந்துடீங்க.. கோத்தகிரி வழியா போய் அதையும் சுத்தி பார்த்துட்டு போய்டுங்க என நம்மை கோத்தகிரி பாதைக்கு திருப்பி விடுகிறார்கள். 22 கிலோமீட்டர்கள் எக்ஸ்ட்ராவாய் இறங்கும்போதும்... அதே பேரணி... அதே டீசல் புகை.

அப்பாவி குடும்பஸ்தர்கள் ஊட்டிக்கு போக...ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து, டயருக்கு கீழே எலுமிச்சை பழம் வைக்கவும். அதுவும் விடுமுறை தினங்களை சர்வ நிச்சயமாய் தவிர்த்து விடவும். ஏனெனில் ஊட்டி அழகாய் இருப்பது நிச்சயம் கோடை காலத்தில் அல்ல... மூன்றாம் பிறை படத்தில் வரும் அழகான ஊட்டியை காண நீங்கள் குளிர்காலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதோ, அவசரத்தில் மேக்கப் போடாமல் எதிரே வந்த தமிழ் சினிமா ஹீரோயினை போல கருகி போய்... காய்ந்து போய் கிடக்கிறாள் மலைகளின் ராணி.

அப்ப... நான் சம்மருக்கு என்னதான் பண்றது என கேட்பவர்களுக்கு... ஊட்டி போய் வர செலவாகும் பணத்தை இனிஷியல் அமௌன்ட்டாய் போட்டு emi யில் ஒரு ஏசி எடுத்து மாட்டி விடவும். அட்லீஸ்ட்.. மிச்சமிருக்கும் மே மாச அக்னி வெயிலை எதிர்கொள்ள ஏதுவாய் இருக்கும்.சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-
1. பொய் ஆகவே ஆகாது!
2. கோவில் மேல் கோவில!

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.

பஞ்சலிங்கங்க கோவில்:-

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-

2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோவில் மேல் கோவில்:-

1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.

பொய் ஆகவே ஆகாது!
மிளகு, பயிராக மாறியது:-

ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் 15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள் மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இரண்டு நந்தி:-

இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீசன்:-

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...