Wednesday, December 3, 2025

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்: 
சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற விரும்பும் பக்தர்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய நவக்கிரகத் தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், இந்த உள்ளூர் தலங்களைத் தரிசிப்பதன் மூலம், அந்தப் பலன்களை முழுமையாக அடையலாம் என்பது ஐதீகம்.

சூரியன்: இந்த நவக்கிரகச் சங்கிலியில் முதன்மையானது, கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில். இங்குள்ள அகஸ்தீஸ்வரரை வழிபடுவதன் மூலம், சூரிய கிரகத்தின் அருளைப் பெற்று, சிறப்பான ஆரோக்கியம், அரசாங்கத் துறையில் முன்னேற்றம் மற்றும் தலைமைப் பண்பில் உயர்வு ஆகியவற்றை அடையலாம். இந்தத் தலம், உத்தியோக உயர்வுக்கு வழி வகுக்கும் நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
சந்திரன்: அடுத்ததாக, சோமங்கலம் சோமநாதீஸ்வரர் திருக்கோயில் சந்திர பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், மன அமைதி, தெளிவான சிந்தனை மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தை வழிபடலாம். மனக் குழப்பங்களால் தவிப்பவர்களுக்கும், தாய்வழி உறவுகளில் சிக்கல் உள்ளவர்களுக்கும் இக்கோயில் ஒரு சிறந்த நிவர்த்தி தலமாகும்.

செவ்வாய்: செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள தலமாக, பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயில் திகழ்கிறது. தைரியம், வெற்றி, சகோதர உறவுச் சீரமைப்பு மற்றும் நிலம் வாங்கும் யோகம் ஆகியவை செவ்வாயின் அருளால் கிடைக்கின்றன. ரத்த சம்பந்தமான நோய்கள் மற்றும் கடன் தொல்லைகள் நீங்கவும் இத்தலம் உதவுகிறது.

புதன்: அறிவு, கல்வி, வியாபாரம் மற்றும் பேச்சாற்றலுக்கான கிரகமான புதனுக்குரியது, கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில். இங்குள்ள சுந்தரேஸ்வரரை வழிபடுவதன் மூலம், புதன் தோஷங்கள் நீங்கி, கல்வி மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணலாம். பேச்சுத் திறனை மேம்படுத்த விரும்புவோர் இத்தலத்தைத் தரிசிப்பது அவசியம்.

குரு (வியாழன்): செல்வம், ஞானம் மற்றும் சுப காரியங்களுக்கான அதிபதியான குரு பகவானுக்குரிய தலமாக, போரூர் ராமனாதீஸ்வரர் கோயில் உள்ளது. திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை மற்றும் நிதிச் சிக்கல்கள் உள்ளவர்கள் இத்தலத்தை வழிபடுவதன் மூலம், குருவின் அருளைப் பெற்று நன்மைகளைப் பெறலாம்.

சுக்ரன் (வெள்ளி): கலை, காதல், திருமண வாழ்க்கை மற்றும் வசதியான வாழ்க்கையின் அதிபதியான சுக்ரனுக்குரியது, மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில். சுக்ர தோஷம் நீங்கவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், திருமண வாழ்க்கையில் இன்பம் நிலைக்கவும் இத்தலத்தை வழிபட வேண்டும்.

சனி: நீண்ட ஆயுள், தொழில் மற்றும் நியாயத்தின் அதிபதியான சனியின் தலமாக, பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் விளங்குகிறது. சனியின் ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும், தொழிலில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கிடைக்கவும் இக்கோயில் உதவுகிறது.

ராகு: நிழல் கிரகமான ராகுவுக்குரியது, குன்றத்தூர் திருநாகேஸ்வரர் திருக்கோயில். எதிர்பாராத அதிர்ஷ்டம், வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் திடீர் நன்மைகளுக்காக இத்தலத்தை வழிபடுகின்றனர். ராகு காலங்களில் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் இக்கோயில் பிரசித்தி பெற்றது.

கேது: மற்றொரு நிழல் கிரகமான கேதுவுக்குரியது, கெருகம்பாக்கம் திருநீலகண்டேஸ்வரர் கோயில். இத்தலத்தை வழிபடுவதன் மூலம், ஆன்மீக அறிவு, ஞானம், மோட்சம் மற்றும் வாழ்க்கையின் தடைகளிலிருந்து விடுபடுதல் ஆகிய பலன்களைப் பெறலாம். தெளிவான இலக்கு தேடுபவர்களுக்கும் இக்கோயில் ஒரு சிறந்த ஆன்மீக வழிகாட்டியாக உள்ளது.

இந்த நவக்கிரகத் தலங்களின் தரிசனம், ஒரே நாளில் நவக்கிரகங்களின் சாந்நித்தியத்தை உணர்ந்து, அவர்களின் அருளை முழுமையாகப் பெற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, December 2, 2025

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபம்



கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி இறைவன் திருவருள் ஒளி வீடு எங்கிலும் நிறைவதாக எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் திருக்கார்த்த்கை அன்று விளக்குகளை ஏற்றிவைத்து அவற்றை இறை ஒளித்தோற்றமாக வழிபடுகின்றோம். இன்னொரு வகையில் கூறப்போனால் திருக்கார்த்திகையன்று இறைவனை ஒளி வடிவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.

“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய், கோனாகியான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு, வானாகி நின்றானை என்சொல்லி வாழ்த்துவேனே” என்பார் மாணிக்கவாசகர். இறைவன் விண், நிலம், காற்று, ஒளி, நீர், உயிர், நிலவு, கதிரவன் ஆகிய எட்டுப் பொருள்களில் கலந்து நின்று உயிர்களுக்கு அருள்கிறான் என்று சைவம் குறிப்பிடும். இவற்றில் இறைவனின் அருவுருவத்திருமேனியாய் சைவர்கள் வைத்துப் போற்றி வழிபடுவது ஒளி அல்லது தீயாகும். எனவேதான், “ஒளிவளர் விளக்கே” எனத் திருவிசைப்பாவில் திருமாளிகைத்தேவரும்,  “நொந்தா ஒண்சுடரே” என சுந்தரர் தமது திருப்பாட்டிலும் , “கற்பனைக் கடந்த சோதி” என சேக்கிழார் பெருமானும் இறைவனைப் போற்றி வழிபட்டு மகிழ்ந்தனர். “அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி ” என்று சிதம்பர இராமலிங்க அடிகளும் வழிபட்டார்கள்.

திருக்கார்த்திகையைக் கோவில்களில் விளக்கீடு செய்து கோவில் கார்த்திகை என்றும் வீடுகளில் விளக்கீடு செய்து வீட்டுக் கார்த்திகை என்றும்  வழிபடுகிறோம். கோவில் கார்த்திகையில் ஐம்பூத தலங்கள் என்று அழைக்கப்படும் சிதம்பரம் (ஆகாயம்), திருக்காளத்தி (காற்று), திருவண்ணாமலை (தீ), திருவானைக்காவல் (நீர்) கச்சி ஏகம்பம் (மண்)  ஆகியவற்றில் மிகவும் பேர்போனது திருவண்ணாமலை என்ற தீ தலம். திருவண்ணாமலை கார்த்திகைத் தீபம் உலகப் புகழ் பெற்றதும்  பெறும் சிறப்பு உடையதாகும். திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலைத் திருக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப் பெற்று பின்பு திருவண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். அதன் பிறகே சைவர்கள் தமது வீடுகளில் விளக்கீடுகள்  செய்து வழிபடுவார்கள்.

திருக்கார்த்திகை அன்று இதர சைவக் கோவில்களிலும் கோபுரங்கள் மீதும் கோவில் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். திருக்கார்த்திகையன்று திருக்கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகின்ற நிகழ்வும் நடைபெறும். பனை ஓலைகளையோ அல்லது தென்னை ஓலைகளையோ ஒரு மரத்தோடு சேர்த்துக்கட்டி எரிப்பதுவே சொக்கப்பனை கொளுத்துதல் எனப்படும். சுடர்விட்டு எரிகின்ற பனை ஓலைகளைத் தீப்பிழம்பாக, சோதியாக, சொக்கனாக ( சிவபெருமானாக) பார்ப்பதே சொக்கப்பனை கொளுத்துவதன் நோக்கம்.

வீடுகளில் பூசனை அறை, வீட்டின் இதரப் பகுதிகள், தோட்டம், குப்பை மேடுகள் போன்ற இடங்களிலும் கூட விளக்கீடுகள் செய்வதனைக் காணாலாம். இறைவனை ஒளிவடிவில் கண்டு வழிபடுவதோடல்லாமல், கடலை எண்ணெய்யாலும் நெய்யினாலும் ஏற்றப்படும் விளக்கு ஒளி காற்றைத் தூய்மைபடுத்தி வீட்டையும் சுற்றுப்புரத்தையும் தூய்மை ஆக்குகின்றது.

#கார்த்திகையை_ஒட்டிய_புராணம்

இறைவன் இட்ட பணியைச் செய்கின்ற அதிதேவதைகளான பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் தங்களுடைய அறியாமையினால், தாங்களே பரம்பொருள் என்று செருக்கினால் வாது செய்தனர். இவர்கள் இருவரில் உயர்ந்தவர் யார் என்று முடிவுக்கு வர முடியாமல் சிவபெருமானை அணுகி உதவுமாறு கேட்டனர். அவர்களுடைய அறியாமையைப் போக்கி அருள்புரிய இறைவனார் பேரொளிப்பிழம்பாகத் தோன்றி தமது அடிமுடியை கண்டு வருமாறு இயம்பினார். பிரமன் அன்னப்பறவை வடிவிலும் திருமால் பன்றி வடிவிலும் அடிமுடித் தேடி காண இயலாது தங்களது அறியாமையாகிய செருக்கு நீங்கித் தோல்வியை ஒப்பினர். இறைவன் சிவராத்தியன்று அவர்களுக்குச் சிவலிங்க வடிவிலே காட்சி தந்தருளினார். இறைவன் ஒளிப்பிழம்பாக நின்றதையே கார்த்திகைத் தீபமாக ஏற்றிக் கொண்டாடுகின்றோம். ஒளிப்பிழம்பு தணிந்ததே திருவண்ணாமலை மலை ஆகியது. இதனாலேயே கார்த்திகைத் தீபம் திருவண்ணாமலையில் சிறப்புற ஏற்றப்படுகிறது. அதை நினைந்தவாறே நாம் வீடுகளிலும் விளக்கு ஏற்றுகிறோம். இறைவன் சோதியாக நின்றதை எண்ணியே சொக்கப்பனை கொளுத்தி வழிபடுகிறோம்.

கந்தப்புராணத்தின்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரைப் பூக்களில் ஆறுகுழந்தைகளாக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தார்கள். கார்த்திகை விண்மீன்களாகிய (ஆறு நட்சத்திரங்கள்) ஆறு விண்மீன்களே ஆறு பெண்களாக முருகனை வளர்த்ததால் இக்கார்த்திகைத் திருநாள் முருகனுக்குரிய விழாவாகவும் அமைகிறது. இதனாலேயே முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கப் பெறுகின்றது.

#திருக்கார்த்திகைச்_சிந்தனை

கல்விச் செருக்கினைக் கொண்டு படைத்தல் தொழிலைச் செய்த பிரமனும் செல்வச் செருக்கினைக் கொண்டு காத்தல் தொழிலைச் செய்த திருமாலும் தங்கள் அறியாமையினால் இறைவனின் திருவருள் என்ற திருவடியையும் இறைவனின் அறிவு என்னும் திருமுடியையும் காண இயலாது தோல்வியுற்றனர். பின்பு ஆணவமின்றி அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம் என்று உணர்ந்துக் கொண்டனர்.எனவே ஒளிவடிவாய் இருக்கின்ற இறைவனைக் கல்வியாலும் செல்வத்தினாலும் ஏற்படுகின்ற செருக்கினை விட்டு உண்மை அன்பினால் வழிபட்டால் இறைவனைக் காணலாம், அவன் திருவருளைப் பெறலாம் என்ற தெளிவினைக் கொண்டு விளக்கீடு செய்து இறைவனை ஒளியாக வழிபடுவதே கார்த்திகை விளக்கீட்டின் மெய்ப்பாடு.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, December 1, 2025

அகத்தியருக்கு சிவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம்.

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. 

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. 
அகத்தியருக்கு, இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை. அதாவது ஐதீகம். 

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலின் மூலவர்:
வேற்காட்டு நாதர், வேதபுரீசுவரர்
தாயார் வேற்கண்ணி, பாலாம்பிகை இந்த ஆலயத்தின் தல விருட்சம்:
வெள் வேல மரம், தீர்த்தம்:
வேலாயுதத் தீர்தம்.

இத்த திருத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார்.

இத்த திருத்தலத்து அம்பிகையையும், பாடி திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர், இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.

இத்த திருத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி, இத்த ஆலயத்து சிவபெருமானை வழிபட, நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 கருவறை மேற்குப் பிராகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில், முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. தொன்நம்பிக்கை. அதாவது ஐதீகம். 

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலின் மூலவர்:
வேற்காட்டு நாதர், வேதபுரீசுவரர்
தாயார் வேற்கண்ணி, பாலாம்பிகை இந்த ஆலயத்தின் தல விருட்சம்:
வெள் வேல மரம், தீர்த்தம்:
வேலாயுதத் தீர்தம்.

இத்த திருத்தலத்து சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார்.

இத்த திருத்தலத்து அம்பிகையையும், பாடி திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர், இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.

இத்த திருத்தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி, இத்த ஆலயத்து சிவபெருமானை வழிபட, நோய் நீங்கும் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 கருவறை மேற்குப் பிராகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில், முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. அனைவரும் சென்று தரிசித்து வாருங்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...