Thursday, June 24, 2021

அருள்மிகு கனகாம்பிகை தாயார் உடனுறை உச்சிநாதர்


🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏

*அருள்மிகு கனகாம்பிகை தாயார் உடனுறை உச்சிநாதர் என்கிற மத்யானேஸ்வரர் திருக்கோவில்*

திருநெல்வாயில்,
சிவபுரி,
கடலூர் மாவட்டம்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 3வது தலமாகும்.

சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர்.

சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார். சிதம்பரம் நகருக்கு உட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி திருநெல்வாயில் என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோவில் அமைந்துள்ளது.

சக்தியிடம் ஞானபால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...