Monday, June 27, 2022

பிரதோஷ வழிபாடு

*பிரதோஷ வழிபாடு (26.06.2022) 

*பிரதோஷ வழிபாடு பலன்*

ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்

திங்கள் சோம பிரதோஷம் –  நல் எண்ணம், நல் அருள் தரும்.

*செவ்வாய் பிரதோஷம் –  பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்*

புதன் பிரதோஷம் –  நல்ல புத்திரபாக்யம் தரும்

வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

வெள்ளி பிரதோஷம் –  எதிரிகள், எதிர்ப்பு விலகும்.

சனிப் பிரதோஷம் –  அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.

1. அறிவும், வீரியமும், அழகும் பெற முருகப்பெருமானை வணங்கலாம்.

2. ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம்.

3. குடும்ப செழிப்பை பெற திருமகளை வணங்கி வரலாம்.

4. யோக சக்தியையும், மந்திர சக்தியையும் பெற அன்னை பராசக்தியை வழிபட்டு வரலாம்.

5. கலையை, கல்விச் செல்வத்தை பெற சரஸ்வதியை வழிபடலாம்.

6. யோகத்தில் சிறந்து விளங்க சிவசக்தியை வணங்கலாம்.

7. வெற்றிமேல் வெற்றி பெற ராஜகணபதியை வழிபடலாம்.

8. குடும்பத்தை வாட்டிடும் இன்னல்கள் தீர மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் முதலிய தெய்வங்களை வழிபடலாம்.

9. வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்பட பெருமாளை வழிபடலாம்.

10. இவ்வுலகத்தில் எல்லாவித இன்பங்களையும் முக்தியையும் அடைய விரும்புபவர்கள் சிவபெருமானை வழிபடலாம்.

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

பிரதோஷம் என்பது சிவனை வழிபட உகந்த நேரம். வறுமை, பயம், பாவம், மரண பயம், மரண வேதனை, நஞ்சால் ஏற்படும் அபாயம் ஆகியவை இதனால் அகலும்.

*பிரதோஷ காலத்தில் சிவனை நினைத்தாலே நன்மை தான்*

பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும்.

அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். 

அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாக ஐதீகம்.

பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிரதோஷம், மகாப்பிரதோஷம், பிரளயப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.

தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும். சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும். கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.

*தென்னாடுடைய சிவனே போற்றி…!*

*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!*

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!* 

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!* 

*ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!*

*"திருச்சிற்றம்பலம்''*

No comments:

Post a Comment

Followers

சற்குணநாதர் கல்யாணேசுவரர் இடும்பாவனம்.

சற்குணநாதர் (சற்குணேசுவரர், கல்யாணேசுவரர், இடும்பானேசுவரர்) *தாயார்: மங்களநாயகி (மங்கள வல்லி, கல்யாணேசுவரி) *தல விருட்சம்: வில்வ...