Tuesday, September 27, 2022

நவராத்திரி இரண்டாம் நாள் : கெளமாரி தேவியை வழிபாடு

நவராத்திரி நாள் : கெளமாரி தேவியை வழிபடும் முறைகள் என்னென்ன?
                சகல சௌபாக்கியங்களையும் அருளும் இரண்டாம் நாளான கௌமாரி..!!
🌟 அம்மன் வடிவம் : கௌமாரி.

🌟 பூஜையின் நோக்கம் : மகிஷாசுரனை வதம் செய்ய புறப்படுதல்.

கௌமாரி வடிவம் :

🌟 அடியாருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவள்.

🌟 மயில் வாகனமும், சேவல் கொடியும் கொண்டவள்.

🌟 முருகப்பெருமானின் அம்சத்திற்கு ஆதாரமானவள்.

🌟 அகங்கார சொரூபம் கொண்டவள்.

🌟 அழகிற்கும், வீரத்திற்கும் உரியவள்.

🌟 உடல் பலமும், ஆன்ம பலமும் என இரண்டையும் அளித்து ரட்சிக்கக்கூடியவள்.

🌟 கௌமாரி தேவியை தேவசேனா என்றும் அழைப்பார்கள்.

🌟 தென்நாட்டில் இரண்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சூலினி துர்க்கை.

🌟 திரிபுர சம்காரத்தில் சிவபெருமானுடன், அம்பிகை கரங்களில் சூலம் கொண்டு சூலப்பணியாக சென்றார்கள்.

🌟 சிவபெருமான் திரிபுரத்தில் இருந்த சான்றோர்களை அருள் செய்த போது அம்பிகையும், சிவபெருமானுடன் இருந்து அருள் பாவித்தார்.

🌟 திரிபுர வதத்தில் அம்பிகை கொண்ட சொரூபம் சூலினி துர்க்கை வடிவம் ஆகும்.

🌟 நாம் செய்த வினைப்பலனுக்கு ஏற்ப தீமைகளை குறைத்து நன்மைகளை அருளும் குணம் கொண்டவள்.


🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : முல்லை

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : துளசி 

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சந்தன நிறம் 

🌟 அன்னைக்கு செய்ய வேண்டிய அலங்காரம் : ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்

🌟 அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர் : பன்னீர் ரோஜா 

🌟 கோலம் : கோதுமை மாவால் கட்ட கோலம் போட வேண்டும்.

🌟 நைவேத்தியம் : புளியோதரை

🌟 குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 3 வயது.

🌟 குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : ஆரோக்கியம் பெருகும்.

🌟 பாட வேண்டிய ராகம் : கல்யாணி

🌟 பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : புல்லாங்குழல்

🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல் வறுவல்

🌟 பலன் : உடல் ஆரோக்கிய குறைகள் நீங்கும்.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...