Friday, October 28, 2022

பூதகணங்கள் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து வருகிறது.

சிவ சிவ
பூத கணங்கள் என்பவை இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுகின்ற பதினெண் கணங்களில் ஒரு கணம் ஆவார். இந்த பூத கணங்கள் சிவபெருமானுடைய சேவர்களாக கயிலை மலையில் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. பூதகணங்கள் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து வருகிறது.

சிவாலயங்களில் பூத கணங்கள் தனி வரிசையாக செதுக்கப்படுகின்றன. அவ்வாறு செதுக்கப்படும் பூத கணங்கள் குறும்பு செய்பவைகளாகவும், இசை கருவிகளை வாசித்து, நடனமாடுபவைகளாகவும் உள்ளன. சில சிவாலயங்களில் பூதங்கள் திருச்சுற்று சுவரின் மீது அமைக்கப்படுகின்றன.
அத்துடன் கணங்களின் தலைவர் கணபதி ஆவார்.

ஆகவே இந்த முப்பது மூன்று பூத கணங்களும் நமக்கு எப்படிப்பட்ட சோதனைகளை தரும் என பார்ப்போம்.

காம பூதம் : ஒருவரை காமத்தில் மோகம் கொண்டு அலைய செய்து வீணாக்கும்.

ராட்சச பூதம் : மனிதனை ராட்சச குணம் கொள்ள செய்யும்.

வேதாள பூதம் : அடுத்தவரை மதிக்காமல் இருத்தல்,
தன்னை தானே அளித்து கொள்ளல்.

கிரண பூதம் : மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும்.

ஷூஸ்மாண்ட பூதம் : நற் சகவாசம், ஆன்மீக பிரியம் ஏற்படுத்தும்.

யக்ஷ பூதம் : தற்கொலைக்கு தூண்டும்.

பைசாச பூதம் : தெய்வத்தை நிந்திக்க செய்யும்

சித்த பூதம் : ஞானமளிக்கும்

குரவ பூதம் : பிறருக்கு ஞானத்தை போதிக்க செய்யும்.

கந்தர்வ பூதம் : அழகிய தேகத்தை தரும்.

அசுர பூதம் : பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ள செய்யும்.

முனி பூதம் : சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ள செய்யும்.

விருத்த பூதம் : உடல் கோணலை கொடுக்கும்.

தேவ பூதம் : தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ள செய்யும்.

வருண பூதம் : நீர் நிறைந்த பிரதேசத்தில் வாசம் கொள்ள செய்யும்.

அர்த்தபிதா பூதம் : சோம்பலை கொடுக்கும்.

ஈசுர பூதம் : சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச்செய்யும்.

வித்தியுன்மாலி பூதம் : பயம் கொள்ள செய்யும்.

நிகட பூதம் : பெண்கள் மீது நாட்டம் கொள்ள செய்யும்.

மணிவரை பூதம் : எவற்றிற்கும் பயமில்லா தன்மையையும், அதீத கோபத்தையும் கொடுக்கும்.

குபேர பூதம் : தன விருத்தி.

விருபாச பூதம் : தேகத்தில் வலிமையுண்டாக்கும்.

சக பூதம் : பித்தம், சதா பயம் கொள்ள செய்யும்.

சாகோர்த்த பூதம் : நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை.

யாகசேனா பூதம் : பெருமை, தற்புகழ்ச்சி கொள்ள செய்யும்.

நிஸ்ததேச: பெண்களை இம்சித்து புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும்.

இந்திர பூதம் : குறையாத தனத்தை தரும்.

நாக பூதம் : மயான வாசம், மலை வாசம்.

விசாக பூதம் : எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறி கொண்டிருத்தல்.

கசுமால பூதம் : அதீத தீனி எண்ணம்.

அசாத்திய பூதம் : வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல்.

பித்த பூதம் : மன சுழற்சி, பைத்திய நிலை.

ப்ரம்ம ராக்ஷச பூதம் : தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...