Saturday, October 29, 2022

""உனக்குக் குழந்தை உண்டாகும். ஒரு அழகிய மகளைப்பெறுவாய். அவனை எனக்கு மனைவியாகத் தருவாயாக" என்றுஅகஸ்தியர் அந்த அரசனுக்கு வரம் தந்தார்.

_அகஸ்தியர் வாழ்க்கை வரலாறு
வியாசர் விருந்து அகஸ்தியர்

இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிரா மணர்களின் கூட்டம், வனவாசத்திலும் கூடவே இருந்துகொண்டு வந்தது. பரிவாரத்தைச் சமாளித்துக்கொண்டு காலம் கழிப்பது கஷ்டமாகவே இருந்தது. அருச்சுனனைத் தவம் செய்ய அனுப்பி விட்டபிறகு, ஒருநாள் லோமசர் என்கிற பிரம்மரிஷி பாண்டவர் களைக் காணவந்தார். இந்தப் பரிவாரத்தைக் குறைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செய்யுங்கள். லகு பரிவாரமானால் தான் இஷ்டப்படி பிரியாணம் செய்ய முடியும்" என்று லோமச முனிவர் சொன்ன யோசனையை ஒப்புக் கொண்டு யுதிஷ்டிரன் அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டான்.

**ஆயாசம் தாங்கமாட்டாதவர்களும், நல்ல போஜனம் விரும் பிச் சமையற்காரனை அண்டி நிற்பவர்களும்,ராஜ பக்தியை மட்டும் முன்னிட்டு என்னிடம் வத்திருப்பவர்களும் எல்லாரும் திருதராஸ் டிர மகாராஜாவைப் போய் அடையலாம். அவர் ஆதரிக்காவிட் டால் பாஞ்சால ராஜன் நுருபதனிடம் போகலாம்" என்று சமர் தானப் படுத்தித் தன் பரிவாரத்தைச் சுருக்கிக் கொண்டான்,

பிறகு பாண்டவர்கள் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு யாத் திரை போனார்கள். அங்கங்கே அவர்கள் கண்ட இடங்களின் பூர்வ கதைகளைக் கேட்டுக்கொண்டே சென்றார்கள். இவ்வாறு சொல் லப்பட்ட கதைகளில் அகஸ்தியர் கதை ஒன்று. 

அகஸ்தியர் ஒரு சமயத்தில் சில பித்ருக்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு துன்ப நிலையில் இருப்பதைக் கண்டார். 'நீ'ங் கள் யார்? ஏன் இந்தக் கடுமையான தவம் புரிகிறீர்கள்?'' என்றுஅவர் கேட்டதற்கு, அந்த ஜீவன்கள், “மகனே! நாங்கள் உன்னுடைய முன்னோர்களாவோம்.விவாகமில்லாமலிருப்பதால்உனக்குப் பின் எங்களுக்குப் பிண்டம்தருபவர்கள்இல்லாமல்போவார்கள். அதற்காக இந்தத் தவம் செய்கிறோம். நீ புத்திசசந்தானம் பெறுவதற்கு வழி தேடினாயானால் நாம் இந்த நிலையிலிருந்து தப்புவோம்" என்றர்கள், 

இதைக் கேட்ட அகஸ்தியர் விவாகம் செய்துகொள்ளத் தீர் மானித்தார்.

விதர்ப்ப தேசத்து அரசன் தளக்குக் குழந்தை உண்டாக வில்லையென்று துயரப்பட்டுக் கொண்டிருந்தான். அதற்காக அவன் அகஸ்தியரை வணங்கி முனிவருடைய ஆசியைக் கேட் டான்.

""உனக்குக் குழந்தை உண்டாகும். ஒரு அழகிய மகளைப்பெறுவாய். அவனை எனக்கு மனைவியாகத் தருவாயாக" என்றுஅகஸ்தியர் அந்த அரசனுக்கு வரம் தந்தார்.

உலகத்திலுள்ள ஸ்திரீ லக்ஷ்ணங்களை யெல்லாம் சேர்த்து மிக்க சௌந்தரிய ரூபத்தை மனத்தில் நிருமாணித்துக்கொண்டு அரசனுக்கு அகஸ்தியர் இந்த வரம் தந்தார். அரசனுடைய பாம் யையும் கருப்பம் தரித்துப் பெண் குழந்தையைப் பெற்றாள். குழந் தையின் பெயர் லோபாமுத்திரை. லோபாமுத்திரை அகஸ்தி யர் மனத்தில் கற்பனை செய்து கொண்ட லக்ஷணங்களுடன் நிகர
ஏற்ற அழகு வாய்ந்தவளாக வளர்ந்து விவாகத்துக்குத் தகுந்த பருவம் அடைந்தாள், விதர்ப்பராஜனுடைய மகனின் ரூபலாவண்ணியம் க்ஷத்திரிய

உலகத்தில் பிரசித்தியா யிருந்தாலும், அகஸ்தியருக்கு பயந்து எத்த ராஜகுமாரனும் அலளை வரிச்சு வரவில்லை. பிறகு ஒருநாள் அகஸ்திய முனிவர் விதர்ப்பதேசம் வந்து அரசனைக் கண்டு "என்னுடைய பித்ருக்களுக்குத் திருப்தி செய்

புத்திரனை விரும்புகிறேன். வாக்குத் தந்தபடி உன் மகளை

எனக்குத் தருவாயாக” என்று கேட்டார்.

நூற்றுக் கணக்கான கன்னிசுைகளால் சூழப்பட்டுத் தாதி மார்களின் பனிவிடையைப் பெற்று வளர்ந்த தன் அருமை மகளை வனவாசம் செய்யும் முனிவருக்குக் கொடுத்துவிட அரசனுக்கு மனம் வரவில்லை. ஆனால் முன் செய்த வாக்குத்தத்தத்தை நினை த்து ரிஷியின் கோபத்துக்குப் பயந்தான்.

ராஜாவும் தாயாகும் துயரத்தில் முழுகி வருந்துவதை லோ பாமுத்திரை பார்த்தாள். "ஏன் வருந்துகிறீர்கள்? என் நிமித்தம் நீங்கள் சாபம் அடையலாகாது. என்னை முனிவருக்கே கொடு த்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். துயரம் வேண்டாம், இதுவே என் பிரியமும்" என்றாள்.

லோபாமுத்திரையின் சொல்லைக்கேட்டு அரசன் சமாதானம் அடைந்தான். முறைப்படி அவரை அகஸ்தியருக்குக் கொடுத்து விவாகமும் முடிந்தது.

முனிவருடன் போக ராஜகுமாரி புறப்பட்டாள். " இந்த உவர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கழற்றி விடு என் றார் அகஸ்தியர்.

உடனே லோபாமுத்திரை தன் அழகிய ஆபரணங்களையும்

வஸ்திரங்களையும் கழற்றி அவற்றைத் தன் தாதிகளுக்கும் கன்னி

களுக்கும் கொடுத்துவிட்டு மரவுரியும் தோலும் சுட்டிக்கொண்டு

முனிவருடன் சந்தோஷமாக வனம் சென்றாள்.

கங்க துவாரத்தில் லோபாமுத்திரை அகஸ்தியருடன் அநேக நாள் விரதங் காத்துப் பணிவிடை செய்து முனிவருடைய அன்பைப் பூரணமாகச் சம்பாதித்தாள்.

ஒரு நாள் பிரியம் மேலிட்டு முனிவர் மனைவியைச் கருப்பம் வகிக்க அழைத்தார். லோபாமுத்திரை ஸ்திரீகளுக்கு இயற்கை வான வெட்கம் மேலிட்டுத் தலை வணங்கிக் கைகூப்பி ஸ்வாமி! நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆயினும் என்னுடைய பிரீ தீயை நீங்கள் செய்யவேண்டும்"" என்றான்.

அவளுடைய ரூபசௌந்தரியத்தினாலும் சிலத்தினாலும் முற்றிலும் மனம் கவரப்பட்ட முனிவர், "அப்படியே!'" என்றார்.

"பிதாவினுடைய வீட்டில் இருந்த காலத்தில் நான் படுத்த படுக்கையும் அணிந்த வஸ்திராபரணங்களையும் போன்று இல் விடத்திலும் உம்மால் தான் அடைந்து, நீங்களும் நில்பாலங் காரங்களை அணித்து சந்தோஷமாக என்னைச் சேரவேண்டு மென் பதே என் விருப்பம்" என்றன்.

'நீ சொல்லியபடி செய்ய எனக்குச் செல்வம் ஏது. சௌகரியமேது, நீயும் நானும் வனத்தில் வசிக்கும் தரித்திரர்கள் அன்றே?” என்றார் அகஸ்தியர். "சுவாமி! நீர் தவப் பெருமையினால் எல்லாம் படைத்தன

ராவீர்! ஒரு நிமிஷத்தில் உலகத்திலுள்ள செல்வம் அனைத்தும்

நீர் சம்பாதிக்க முடியும்" என்றான்.

'"அவ்வாறு நான் சம்பாதித்தால் அது தவற்றின் பயனை அழி

த்து விடும்! இது உனக்கு விருப்பமா?" என்றார்.

அதை நான் விரும்பவில்லை. தலத்தைச் செலவழிக்கா மல் போதிய தனம் எங்கேயாவது சம்பாதித்துக்கொண்டு வர வேண்டும் என்றேன்" என்றாள். ''பாக்யவதியேரி அப்படியே செய்கிறேன்" என்று அகஸ் தியர் மனைவிக்குச் சொல்லிவிட்டு, சாநாரணப் பிராமணனைப்

போல் அரசர்களை யாசிக்கப் புறப்பட்டார்.

மிக்க செல்வம் படைத்தவன் என்று பிரசித்தி பெற்ற ஒரு

அரசவிடம் அகஸ்தியர் சென்றார்,

"தனம் வேண்டி வந்தேன். பிறருக்குக் குறைவாவது துன் பமானது ஏற்படாமல் எனக்குத் தாலம் தரவேண்டும்!" என்றார். அந்த அரசன் தன் ஆட்சியின் வரவையும் செலவையும் ஒன் றும் மறைக்காமல் முனிவரிடம் கணக்கை ஒப்புவித்தான். 'பார் த்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்றான், ராஜ்யத்தின் வரவு செலவுக் கணக்கைப் பார்த்ததில் மிச்சம் ஒன்றும் இவ்லை.

சாங்கங்சுளில் வரவுக்குச் சரியாகவே செலவு எப்போதும் ஏற்பட்டு

விடுகிறது. முன்னாட்களிலும் இப்போ தைப் போலவே நான். இதைக்கண்டு, "இல்விடம் நான் தானம் பெற்றும் பிரஜை ளுக்குத் துல்பமாகும். வேறே எங்கேயாவது பார்க்கிறேன்" நு அசுஸ்தியர் புறப்பட்டார். அந்த அரசன், "நானும் கூட றேன்'' என்று அவனும் முனிவருடன் கூடச் சேர்ந்து இரு வரு வரும் மற்றொரு ராஜாவிடம் போய்க் கேட்டார்கள். அவ்லிடந் நிறும் அதே நிலைமையாக இருந்தது.

நியாயமான செலவுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அள வுக்குத்தான் அரசன் பிரஜைகளிடமிருந்து வரி வரும் செய்ய வேண்டும் என்கிற தத்துவத்தை வியாசர் இதன் மூலம் எடுத் துக் காட்டுகிறர். நியாயமான வரிகள் பெற்றுக் கடமைகளைப் பூரணமாகச் செய்து தரும சாஸ்திரபடி நடந்து வரும் எந்த அர சனிடத்திலாவது தானம் பெற்றால் அவனுடைய பிரஜைகளுக்கு அந்த அளவில் நஷ்டமும் துன்பமும் உண்டாகும் என்று அத தியர் உணர்ந்தார். அதன்மேல் எல்லோருமாகச் சேர்ந்து இல் வலன் என்கிற ஒரு கொடிய அசுரனிடம் போய் அவனைக் கேட் யது உசிதம் என்று தீர்மானித்தார்கள்.

இல்வலன் என்ற அகரனும் அவன் தம்பி வாதாபியும் பிரா மணர்கள்மேல் தீராத துவேஷம் கொண்டவர்கள். பிராமணர் க ைவிருந்துக்கு இவ்வலன் அழைப்பான், மாறையால் தம்பி வாதாபியை ஆட்டின் உருவம் எடுக்கச் செய்து. ஆட்டைவெட்டிப் பக்குவம் செய்து, வந்த பிராமணர்களை உண்ணச் சொல்லுவான், அத்தக் காலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண் பார்கள். விருந்து முடிந்தவுடன். இல்வலன் "வாதாபி! வா!' என்று கூவுவால். தான் கொன்றவர்களை யமலோகத்திலிருந்து திரும்பி வரவழைக்கும் வரத்தை இவ்வலன் பெற்றிருந்தான். வெட் டப்பட்டு இறந்த வாதாபி மறுபடி உயிர் கொண்டு பிராமணர் களுடைய வயிற்றைப் பிளந்து விட்டு அசுரச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வெளியே வருவான், இவ்வாறு பல் பிராமணர்கள் வாதாபியின் செயலால் வயிறு கிழிக்கப்பட்டு மாண்டார்கள்.

தருமத்தையே ஏமாற்றி இவ்வாறு பிராமணர்களைக் கொன்று

தங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வருவதாகப் பாபிஷ்டர்

களாகிய அந்த அசுரர்களுடைய கருத்து,

அகஸ்தியர் வந்ததாகத் தெரிந்ததும் நல்ல பிராமணர் சிக் கினார் என்று இல்வலன் மிக்க மகிழ்சி யடைந்து அவரை வரவே ற்று வழக்கப்படி விருந்து வைத்தான். வாதாபியை ஆடாகச் சமைத்துப் பரிமாறி. ''இந்த முனிவர் இறந்தார்" என்று மனதில் எண்ணிக்கொண்டு அகஸ்தியரை உண்ணச் செய்தான்.

விருந்து முடிந்தபின் இல்வலன். ''வாதாபி! சீக்கிரம் வெளி

யே வா! தாமதித்தாயானால் முனிவர் உன்னை மீறுவார்!'' என்று சொன்னான். முனிவர். "வாதாபியே! உலகம் சாந்தி அடைக! நீ ஜீர ணம் செய்யப்பட்டாய்" என்று சொல்லித் தம்வயிற்றைத் தடவிக் கொடுத்தார். இல்வலன், "வாதாபி ! வா! வாதாபி! வா!'" என்று

பன்முறை பயந்து கத்தினான்.

பயனில்லை! "வாதாபி ஜீர்ணமாய் விட்டான். ஏன் விணாக அழைக்கிறாய்?" என்றார் முனிவர்.

அசுரன் கை கூப்பி அகஸ்தியரை வணங்கி அவர் கோரிய தனங்களைக் கொடுத்து அனுப்பினான். லோபாமுத்திரையை அகஸ்தியர் திருப்தி செய்தார்.

''உனக்குப்பத்து நல்ல மக்கள் வேண்டுமா? அல்லது பத்துப் பேரை வெல்லக்கூடிய ஒரு மகன் வேண்டுமா?' என்று அகஸ் தியர் மனைவியைக் கேட்டதாகவும், 'பகவானே, புகழுக்குரிய அறிவைப்படைத்தவனும் தருமத்தில் நிலை கொண்டவனுமான ஒரு மகனையே விரும்புகிறேன்'' என்று லோபாமுத்திரை சொல்ல அவ்வாறே பெற்றதாகவும் கதை.

ஒரு சமயம் விந்திய மலையானது மேரு மலையின்மேல் பொ றாமை கொண்டு, தானும் மேருவைப்போல் வளர்ந்து சூரிய சந் திராதிகளைத் தடுத்துவிடப் பார்த்ததாம். இந்தச் சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தேவர்கள் அகஸ்தியரை வேண்டி னார்கள். அவர் விந்திய மலையண்டைசென்று, "பருவதோத்த மனே! எனக்கு வழி விடக் கடவாய்! ஒரு காரியத்துக்காக நான் தெற்கே செல்ல வேண்டியதாக இருக்கிறது. நான் திரும்பியபின் நீ இஷ்டப்படி வளரலாம். நான் வரும் வரையில் பொறுத்தி ருப்பாயாக!" என்று சொன்னார்.

அகஸ்தியரிடம் விந்திய பருவதம் வைத்திருந்த கௌரவத் தினால், '"அப்படியே!'' என்று மலை ஒப்புக்கொண்டு நமஸ்கரித் ததாகவும், அகஸ்தியர் தெற்கே போனவர் திரும்பி வரவில்லை என்றும் இந்த ஒப்பந்தபடி வித்திய மலையும் வளராமல் இதுவரை யில் படுத்துக்கிடக்கிறது என்றும், 'அதிலிருந்து அகஸ்தியர் தென்னாட்டிலேயே இருந்துவிட்டாா என்றும் கூறுகிறது பாரதக்கதை,

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...