Wednesday, December 14, 2022

திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும்.

🕉️மந்திரமாவது நீறு 
திருஞானசம்பந்தர் பெருமான் பாடிய திருநீற்று பதிகத்தில் வரும் முதல் வரி..

திருநீறு எப்படி மந்திரமாகும்?

திருநீறை பலரும் பசுவின் சாணத்தைக் கொளுத்திய சாம்பல் என்று நினைக்கின்றார்கள். உண்மையில் மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு.

திருநீறு மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது.திருநீறே திருவைந்தெழுத்து மந்திரமாகிய சிவாயநம என்பதன் ஸ்தூல வடிவம் (உருவம்). கண்ணுக்குத் தெரியாத மந்திர ஆற்றலே திருநீறாகத் திகழ்கிறது
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும்.

இறைவன் என்பவன் அழிவில்லாதவன். அவனின் அருட்கொடையான திருநீறுக்கு அழிவு என்பதே இல்லை. திருநீறானது வேறு பொருளாக மாறுவதும் இல்லை. எனவே திருநீறினை நெற்றியில் அணிந்து கொண்டால் அழிவில்லாத இறைவனை அடைவதற்குரிய வழி கிடைக்கும்.
நாம் ஒவ்வொரு முறையும் திருநீறினை அணியும்போது இறைவனாரின் திருவைந்தெழுத்தை கூற வேண்டும்.

🪔ஓம் நமசிவாய வாழ்க🪔
🪔திருச்சிற்றம்பலம்🪔

என்றும் சிவ பணியில் சிவ கீர்த்தனா ஆறுமுகம் 🙏🙏

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...