Monday, April 24, 2023

*ஆசியாவிலே இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோவில்...*

*ஆசியாவிலே இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோவில்...*
திருநெல்வேலி
*நெல்லையப்பர் கோவில்*🙏

கோவிலின் வாசலில்...

இரண்டு தலைமுறையாய் பூக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்... 

கோவிலின் எதிரில் மூன்று தலைமுறையாய் ஹல்வா கடை வைத்திருக்கும் கடைகாரரிடம்... 

கோவிலின் அருகில் அவரது தாத்தாவின் காலத்திலிருந்தேப் பழக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்... 

மேலும் கோவிலின் வாசலில் கடை வைத்திருக்கும் சில வியாபாரிகளிடமும்...

கோவிலின் உள்ளே வேலைசெய்யும் அறநிலைத்துறை அதிகாரியிடமும்...

பூஜாரிகளிடமும்...

நாம் கேட்ட ஒரே ஒரு கேள்வி... 
*'இந்த கோவிலைக் கட்டியது யார்?'*

எவரிடமும்  பதிலில்லை. 

இது தான் இன்றைய கசப்பான  உண்மை.

*'ஆக, கோவிலின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவில்லை'*
என்பது மிக தெளிவாக தெரிகிறது.

'சரி, வரலாறு தான் இந்த லெட்சணத்தில் இருக்கிறது...' 
என்று நினைத்தால்... 

*கோவிலுக்கான மதிப்பு அதைவிட மோசமாக காணப்படுகிறது...*

*கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு...*❗

ஆச்சரியப்பட வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் 
மற்றும் 
பல கட்டுமான அதிசயங்களை கொண்ட ஒரு கோவிலின் வெளித்தோற்றம்... 

ஏன், கோவிலின் கோபுரம் கூட ஒழுங்காக தெரியாதபடி... 

ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது.
 
கிபி ஏழாம் நூற்றாண்டில்... 

பல்லவ மன்னர்களால் கட்டுமானம் தொடங்கப்பட்டு... 

கடைசியாக
*'நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனால்...'*
 கட்டி முடிக்கப்பட்டது. 

இந்தியாவிலே... 
*சிறந்த நீர் மேலாண்மை* கொண்ட ஒரு மாவட்டம் என்றால்... 
அது திருநெல்வேலி மாவட்டம் தான்... 

மூன்று கிராமத்திற்கு ஒரு *'குளம்'* இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தான்.

நெல்லையப்பர் கோவிலைக் கட்டிய,
நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனின் ஆட்சிகாலத்தில் தான்... 

*ஆறுகள் பல்வேறு கிளை நதிகளாகப் பிரிக்கப்பட்டு...*

*பாசனப்பகுதி பெருகி காணப்பட்டது.*

அப்படி திருநெல்வேலி மாவட்டத்தையே செழிப்படைய செய்த மன்னன் தான்... 
*நின்ற சீர் நெடுமாறப்பாண்டியன்.*

அவர் கட்டி வைத்த அந்த நெல்லயப்பர் கோவிலை கூட... 
இன்று, அவர் பெயரை‌ சொல்லும்படியாக நாம் பாதுகாக்கவில்லை.

அந்த 'நின்ற சீர் நெடுமாறப் பாண்டியனுக்கு *'நாம் செய்த மரியாதை என்ன...?'*

*பாடப்புத்தகத்திலாவது அவரது பெயரை பதிவிட்டோமா?*

 இல்லை.😔

*ஒரு பேருந்து நிலையத்திற்காவது அவரது பெயரை வைத்தோமா?*

 இல்லை.😔

*அவருக்கு ஒரு சிலை தான் வைத்தோமா.. ?*

இல்லை.😔

இங்கு சிலையாக நிற்பதெல்லாம்... 
*ஈ வெ ரா , அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ...*
*மற்றும் பலர்...*

*கோவலனுக்குத் தவறான நீதியை  வழங்கிவிட்டதால்...*

*தன் உயிரையே மாய்த்துக் கொண்டவன்...*
*நெடுஞ்செழியப் பாண்டியன்...*

எப்பேர்ப்பட்ட உத்தமனாக இருந்தால், 
'தான் வழங்கிய தவறான நீதிக்காக தன் உயிரையே விட்டிருப்பான்..?' 

*அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுக்கு ஒரு அடையாளமோ,*

*பாடப்புத்தகத்தில், அவரின் சாதனைகளை பற்றியோ ஒன்றுமே கிடையாது.*

நாம் அனைவரும் மத்சசார்பின்மை பேசி,

நடுநிலை பேசி... 

ஆளுக்கு ஒரு ஊழல் அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு... 

நம் அடையாளங்களை நாமே அழித்து கொண்டு இருக்கிறோம்.

அதாவது, 

*நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு வருகிறோம்.*

ஒரு இனம் அழிந்து போவதற்கு... 
முதலில் செய்யப்படும் காரியம் *'அடையாள அழிப்பு'* தான்.

அதற்க்காக உருவாக்கப் பட்டது தான்... 
*'திராவிடம்'*👊

இனிமேலாவது, ஆபத்தை உணர்ந்து விழிப்புணர்வு பெறுங்கள். 

அரசியல் கட்சிகளை கடந்து... 
ஜாதி பிரிவுகளை கடந்து... 

தமிழர்களாய்... 
ஹிந்துக்களாய்... ஒன்றிணையுங்கள்.🤝

முதலில், 
உங்கள் பகுதியில் உள்ள... 

*உங்கள் கோயிலை காப்பாற்றுங்கள்*

நமது முதல் அடையாளமே... 
நமது கோவில்கள் தான்.

உலகின் தலைசிறந்த... 
நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் அறங்களை காத்து...

உலகின் வழிகாட்டியாக நாம் விளங்க...
நமது கோவில்கள் தான் அனைத்திற்கும் *மூலாதாரம்.*

ஆகவே,
*காப்போம் நமது கோவில்களை...*🙏
*வாழ்வோம் சீரும் சிறப்புமாக...*🎯

🙏 கு பண்பரசு

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...