Sunday, June 25, 2023

விநாயகரை 💫 முழுமுதற் கடவுளாக வழிபடுவது 🙏 ஏன்? இதற்கு காரணம் தெரியுமா?

🙏🙏🌷🌷விநாயகர்...!!
விநாயகரை 💫 முழுமுதற் கடவுளாக வழிபடுவது 🙏 ஏன்? இதற்கு காரணம் தெரியுமா?

💫 விநாயகர் என்றால், இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது பொருளாகும்.

💫 விநாயகரை முழுமுதற் கடவுளாக போற்றப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. 

💫 எந்த மங்களகரமான காரியத்தை தொடங்கும் போதும், முதலில் விநாயகரைத் தொழுது பின்னர் தொடங்குவதே நமது பாரம்பரிய மரபாகும். அவ்வாறு தொழுவதற்கு காரணம் என்ன? என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.

💫 ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மிக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி. 

💫 பொருள் மற்றும் ஆன்மிக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக நம்பப்படுகிறது.

💫 பல யுகங்களுக்கு முன்பாக அன்னை பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடலில் இருந்த மஞ்சளில் இருந்து ஒரு அழகான சிறுவனை உருவாக்கினாள். தான் குளித்து முடித்து வரும் வரை ஆண்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கூறிவிட்டு குகைக்குள் குளிக்கச் சென்று விட்டாள்.

💫 சிறுவனும் கையில் வேல், வில், வாள் போன்ற ஆயுதங்களோடு குகையின் வெளியே காவலுக்கு நின்றிருந்தான். உலகுக்குப் படியளக்கும் வேலையை முடித்துவிட்டு வந்த சிவபெருமான் அம்பிகையை காணும் ஆவலோடு குகைக்குள் நுழைய முயன்றார். அவர் தான் தன் தந்தை என்பதை அறியாத அந்தச் சிறுவன் சிவபெருமானை உள்ளே விட மறுத்தான். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் மூண்டது. மிகவும் கோபம் கொண்ட சிவபெருமான், சிறுவனை போருக்கு அழைத்தார். தந்தைக்கும், மகனுக்கும் கடும் போர் மூண்டது. இந்த அதிர்வைத் தாங்க முடியாத பூமி தடுமாறியது. ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேற, தன் திரிசூலத்தால் சிறுவனின் தலையை துண்டித்து விட்டார் சிவபெருமான். 

💫 செய்தி அறிந்து ஓடி வந்த அன்னை பார்வதி தேவி, தான் படைத்த மூத்த மகன் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு கோபத்திலும், வேதனையிலும் துடித்தாள். காளியாக மாற ஆரம்பித்த போது தேவர்களும், முனிவர்களும் அன்னையை வணங்கித் தொழுதனர். அன்னையே உங்கள் கோபத்தை இனியும் பூமியால் தாங்க முடியாது! மனித இனமே அழிந்து விடும்! கருணை காட்டுங்கள் என்று கெஞ்சினர். மகனை உயிர்ப்பித்து தருவதாக சிவபெருமானும் கூற மனம் கனிந்தாள் பார்வதி தேவி. 

💫 தேவர்கள் அனைவரையும் நான்கு திசையிலும் செல்லும்படி ஆணையிட்டார் சிவபெருமான். "நீங்கள் செல்லும் வழியில் எந்த உயிரின் சடலத்தை முதலில் பார்க்கிறீர்களோ? அதன் தலையை எடுத்து வாருங்கள்"என்று கட்டளையிட்டார். நாலாபுறமும் சென்றார்கள் தேவர்கள். வடக்கு நோக்கிச் சென்ற தேவர்கள், தாங்கள் சென்ற வழியில் யானை ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்து அதன் தலையைக் கொண்டு வந்தனர். சிவபெருமானும் அந்தத் தலையை சிறுவனின் உடலோடு பொருத்த உயிர் பெற்றெழுந்த யானை முகன், அன்னையையும், தந்தையையும் வலம் வந்து வணங்கினார். மனம் மகிழ்ந்த தந்தை விநாயகருக்கு சிறப்பான வரம் ஒன்றை வழங்கினார். 

💫 "இன்று முதல் உலக மக்கள் எந்த சுபச் செயலையும் தொடங்கும் முன், உன்னைத் தொழுது தான் தொடங்குவார்கள். அப்படி செய்பவர்களுக்கு நீ செல்வத்தையும், வெற்றியையும் அருள வேண்டும். உன்னை வணங்கும் எல்லா பக்தர்களுக்கும் "நானும், உன் அன்னையும் வரங்களை வாரி வழங்குவோம்" என்று வரமளித்தார் அப்பனாகிய பரமசிவன். பார்வதி தேவியும் மிகவும் மனம் குளிர்ந்து மற்றொரு வரத்தை அளித்தார். உன்னை முதலில் வணங்கி எந்தச் செயலையும் தொடங்கும் பக்தர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா விதமான தடைகளையும், நீ தகர்த்து அவர்கள் வாழ்க்கையில் மங்களமும், செல்வமும் நிலைக்கச் செய்வாய்! என்று வரம் கொடுத்தார். 

💫 அதனால் தான் விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுகிறார். அவரைப் பணிந்து வணங்கினால் நம் தொழில், வியாபாரம், வேலை ஆகிய இடங்களில் ஏற்படும் தடைகளை நீக்கி நற்பலனைத் தருவார் என்பது நம்பிக்கை.

💫 விநாயகருக்கு உகந்த சதுர்த்தி தினமான இன்றைய நாளில் விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

🙏  sv. 🙏

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...