Thursday, September 28, 2023

அருள்மிகு ஶ்ரீநிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம்!

அருள்மிகு ஶ்ரீநிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம்!
நம்முடைய தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மங்கலகரமாக மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீநிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம்!

குபேரனுக்கும் பிரம்மனுக்கும் அருளிய ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டால் வற்றாத செல்வம் பெருகுமன்றோ!

தலத்தின் சிறப்பு!

குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் தலம் என்பதும் தலத்தின் சிறப்பு. 

பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னார்.

அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். 

இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். 

ஆகவே, இந்த 
ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் ஒன்று, திண்டிவனம் அருகில், அன்னம்புத்தூரில் உள்ளது. அடிமுடி தேடிப் புறப்பட்டு, பொய் சொல்லி மாட்டிக்கொண்டு சாபம் பெற்ற பிரம்மா, சிவனாரை வணங்கி வழிபட்ட தலம் என்பதால், பிரம்மாவின் வாகனத்தை நினைவுபடுத்தும் வகையில் அன்னம்புத்தூர் என்றானது. இது திருவண்ணாமலைக்கு நிகரான தலமாகும்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – புதுச்சேரி சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது வரகுப்பட்டு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 4 கி.மீ. பயணித்தால், அன்னம்புத்தூர் கிராமத்தை அடையலாம். இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீநிதீஸ்வரர்.

1008-ஆம் வருடம், தன்னுடைய 23-வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் கோயில் ஸ்ரீநிதீஸ்வரருக்கு ராஜராஜ சோழ மன்னன் திருப்பணி செய்ததைத் தெரிவிக்கிற கல்வெட் டுகள் உள்ளன. 

‘நிதிகளுக்கெல்லாம் தலைவரான குபேரனுக்கு அருளியதால் ஸ்ரீநிதீஸ்வரர் எனும் திருநாமத் துடன் சிவனார் அருளும் இக்கோயில்!

பதும நிதி, மகா பதுமநிதி, மகாநிதி, கச்சபநிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீலநிதி, சங்கநிதி ஆகிய எட்டு வகையான நிதிச் செல்வங்களுக்கும் தலைவன் குபேரன். 

எனவே அவனுக்கு "நிதிபதி' என்ற பெயரும் உண்டு. குபேரன் வழிபட்டு வரம் பெற்றதாலே அன்னம்புத்தூர் கிராமத்தில் அருளும் ஈசனுக்கு "ஸ்ரீநிதீஸ்வர்' என்ற பெயரும் ஏற்பட்டது.

பிரம்மாண்டமான லிங்கத் திருமேனியாக காட்சி தருகிறார் ஈசன். இவரை வழிபட பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கொடிய தோஷங்கள் நீங்கும். 

இல்லத்தில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்கும்.
இவ்வாறு தன்னை நாடும் பக்தர்களுக்கு எண்ணிலடங்கா செல்வங்களை வாரி வழங்கும் ஸ்ரீநிதீஸ்வரர்.

குபேரனுக்கும் பிரம்மனுக்கும் அருளிய ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டால் வற்றாத செல்வம் பெருகுமன்றோ!

அமைவிடம்: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் வரகுப்பட்டு என்னும் கிராமத்தை அடுத்து வரும் சாலையில் வலது பக்கம் உள்ள சாலை வழியாக 4 கி.மீ. பயணித்தால் திருக்கோயிலை அடையலாம்.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...