Thursday, September 28, 2023

சிவனை வணங்கினால் சிறப்பான வாழ்வுவரும் என்கின்றன ஆகம விதிகள்

*வேறு எங்கும் காண இயலாத சிறப்பான 28 சிவ ஆகமக் கோயில்*
ஆகமம் என்பதன் பொருள் என்ன?

சிவனை வணங்கினால் சிறப்பான வாழ்வு
வரும் என்கின்றன ஆகம விதிகள், 

அந்த ஆகமம்
என்பதன் பொருள் என்ன?

ஆ-ஆகதம்
சிவ பத்ராஸ்ச-
சிவ பெருமான் 
வாக்கிலிருந்து
வந்த

க-கதம்து கிரிஜா கதௌ -கிரிஜா என்ற
பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டது.

ம-மதஞ்ச வாசுதேவஸ்ச -வாசுதேவனாம்
மகாவிஷ்ணு வால் தன் 
மதம் ஏற்றுக்
கொள்ளப்பட்டது.

ம்-தஸ்மாது ஆகம
ஈரித:- இவை அனைத்தும் சேர்ந்ததே ஆகமம்.

ஆகம விஷயங்கள் இரகசியங்களை
அறிந்தவர்கள் சுக போக வாழ்க்கையை
அடைவார்கள

1 . சிவாகமங்கள்:
ஆகமங்கள் என்பவை இறைவனால்
அருளப்பெற்ற நூல்களாகும். 

இவை மனித
குலத்தவர்கள் நித்திய 
மோட்ச நிலையை
அடைவதற்குரிய வழிமுறைகளைப்
போதிக்கின்றன.

சிவபெருமான் மகேந்திர மலையில்
அமர்ந்திருந்து ஆகமங்களை அருளினார் என்று
மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகத்தில்
குறிப்பிடுகின்றார்.

மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்
என்று கீர்த்தித் திரு அகவலில் குறிப்பிடுகின்றார்.

சிவபெருமான் தமது ஐந்து முகங்களாலும்
இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார். 

இவை
சிவபேதம், ருத்திரபேதம் 
என்று இரண்டு
வகைப்படும்.

சிவபேதத்தில் பத்து ஆகமங்களும்,
ருத்திரபேதத்தில் 
பதினெட்டு ஆகமங்களும்
உள்ளன.

இந்த இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்கள்
வருமாறு:
காமிகம், யோகஜம், 
சிந்தியம், காரணம்,
அஜிதம்,
தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான்,
சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு,
அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம்,
மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம்,
புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம்,
சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்
என்பனவாம்.

இவற்றை 28 லிங்கங்களாக விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். 

இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. 

இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 

28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. 

இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். 

இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...